Thursday, December 29, 2016

லீஸா ஸ்டாஃபர் - பயோக்ராஃபியா


லீஸா ஸ்டாஃபர் - நெய்தல் கலை ஓவியங்கள் புனையும் கலைஞர். சுவிட்ஸர்லாந்து நாட்டைச்சேர்ந்தவர். அவரைப்பற்றிய ஒரு ஆவணப்படம் திரையிடப்பட்டது.  நேஷ்னல் காலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட்' பெங்களூரில் சென்றிருந்தேன். நிறைய நூல் நெய்து அதில் ஓவியங்கள் உண்டாக்கி காட்சிப்படுத்தும் கலைஞர். பி ஆர் விஸ்வநாத்' என்ற ஒளிப்பதிவாளர்/ ஓவியக்கலைஞர் அந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார். பயோக்ராஃபியா' என்ற பெயரில். "கலை என்பது சமூகத்தை திருத்துவதற்கோ இல்லை பாதிப்பை ஏற்படுத்துவதற்கோ இல்லை" என்கிறார்.

முழுக்க வாழ்க்கை வரலாறு போலல்லாது , அவரின் பணிகளினூடே இவர் காமிராவை வைத்து எடுத்தது போல கொஞ்சமும் சலிக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் ஓடும் டாக்குமென்ட்டரி. வலுக்கட்டாயமாக ஆங்கிலத்தில் தான் உரையாடுகிறார். பல சொற்கள் கிட்டாது தவித்து யோசித்து , ஸ்விஸ் மொழியிலிருந்து தமக்குள் மொழி பெயர்த்துக்கொண்டு பின்னர் சொல்கிறார். அது வரை காமிரா அசையாது அவரையே பார்த்துக்கொண்டிருக்கிறது. பொதுவாக ஐரோப்பாவின் ஏனைய நாடுகளில் அவரவர்க்கான மொழி என்று ஒன்று உண்டு. ஜெர்மன்/இட்டாலியன்/ போல ஸ்விஸ் மொழியும் தமது சொற்களைக்கொண்டு விளங்குவதே. நான் ப்ராக்(செக் குடியரசு)கில் பணி நிமித்தம் தங்கியிருந்தபோது கண்கூடாக அதைக்கண்டிருக்கிறேன். தமிழனுக்கு இந்தி எங்கனம் ஒரு வெறுப்போ, காலனியாதிக்கம் செலுத்தும் மொழி என்ற தேஸ்யம் உள்ளது போல ஐரொப்பிய பிற மொழி பேசும் நாடுகளுக்கு ஆங்கிலம் மேல் அத்தனை வெறுப்பு. எனக்கோ ஆங்கிலம் தவிர வேறு ஐரோப்பிய மொழிகள் தெரியாது ( இன்னமும் தான் :) ).

அப்போது சிலர் கூறுவர். ஜெர்மனோ இல்லை கொஞ்சம் ரஷ்யன் தெரிந்தால் இங்கு சமாளிக்கலாம் என. கொஞ்சமும் ஸ்னானப்ரப்தியே இல்லாத வேறு குடும்பத்தை சேர்ந்த மொழி அது.  அது போல அவர்களுக்கு ஆங்கிலம் என்றால் பிணக்கு. இருப்பினும் வலுவில் ஆங்கிலத்திலேயே உரையாடுகிறார் லீஸா. என்ன காரணம் என ஊகித்தேன். படம் எடுப்பவர் இந்தியாவில் இருந்து வந்திருப்பதால் தாம் உரையாடுவது அவருக்கு புரிய வேணும் என்று கருதி பேசியிருக்கலாம். இடையிடையே அவர்தம் மகள் சொற்களை எடுத்துக் கொடுக்கிறார். உண்மையைச்சொன்னால் அவரின் பெயரும் அவர்தம் ஓவியங்களும் எனக்குப் பரிச்சயமானது இந்த ஆவணப்படத்தின் மூலமாகத்தான். ஒருவேளை இதையும் அவர் ஊகித்திருக்கலாம் உலகம் முழுக்க பரவ ஆங்கிலத்தில் தான் பேசவேணும் என்று. மொழி மற்றும் சொற்களுக்கு முன்னரே கலை தோன்றிவிட்டது என்று அறுதியிட்டு கூறுகிறார் லீஸா. இதுவும் கூட  காரணமாகக்கூட இருக்கலாம்.

இருப்பினும் என்னியோ மரிக்கொன் தமது 80ஆவது வயதில் ஆஸ்கர் பரிசு மேடையில் தம் தாய்மொழியான இட்டாலியனிலேயே பேசியது எனக்கு நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு கலைஞனுக்கும் ஒவ்வொரு கருத்து.

முதற்கணவர் உடல் நலக்குறைவால் விரைவில் இறந்துவிட்டதையும் பின்னர் ஒரு பெயின்டருடன் தாம் இணைந்து வாழ்ந்ததையும் குறிப்பிடுகிறார். இரண்டாவது உறவு அத்தனை சுகமாயில்லை. அந்த பெயின்ட்டர் இவரை கீழ்ப்படிந்து நடக்கும் படி பணித்ததையும் , தமது ஓவியங்களின் மீது பொறாமை கொண்டதாகவும் வருந்துகிறார். தம்பதியருக்குள் இப்படி ஒரு பிணக்கு. Jealous என்ற சொல்லை ஜெலூஸ் என்று உச்சரிக்கிறார். பெண்கள் ஆணை சார்ந்திருக்கவேணும் , பணம் சம்பாதிப்பது ஆணுக்குரியது(ஹ்ம் அங்குமாடா இதெல்லாம் ?!) இப்படிக்கும் இதெல்லாம் 70-80களில் நடக்கிறது. பின்னர் அந்த வலிகொடுக்கும் உறவிலிருந்து மிகுந்த பிரயாசையுடன் வெளிவந்து தம் மகள்களோடு ஓவியப்பணியை தொடர்ந்திருக்கிறார்.

Tapestry என்ற பல நிறங்கள் கொண்ட நூல்களை சட்டகத்தில் வைத்துக்கொண்டு அதில் ஓவியங்களை உருவாக்குதல் இவரின் சிறப்பு. க்ராபிக் டிசைன்ஸ், ஓவியங்கள் என பல படிப்புகளை கல்லூரியில் பயின்று பின்னர் அதையே தொழிலாக கொண்டிருக்கிறார் லீஸா. தமது முதற்கணவர் வேண்டுகோளுக்கிணங்க தாவரவியல் ஓவியங்களை வரைந்திருப்பதை காண்பிக்கிறார். அவர் ஒரு தாவரவியல் நிபுணராக இருந்திருக்கிறார் எனினும் 36 வயதில் இறந்து விட்டதை நினைவு கூர்கிறார். இந்த டாபிஸ்ட்ரி பெண்களுக்கான கலை என்பதில் உறுதியாக இருக்கிறார். இயல்பிலேயே நெய்தலில் பெண்களே சிறந்து விளங்குகின்றனர் என்றும் கூறுகிறார்.

டாப்பிஸ்ட்ரி மட்டுமல்லாது கண்ணாடியை சிறு கத்தி கொண்டு கீறி அதில் ஓவியங்களை உண்டாக்கி பின் வண்ணம் தீட்டும் கலையும் இவருக்கு கைகூடி வந்திருக்கிறது. அத்தனை தேவாலயங்களிலும் இந்த வகை ஓவியங்களைக்காணலாம். வெளிப்புற வழி சூரிய ஒளி அக்கண்ணாடியில் பட்டு சர்ச்சுக்குள் படரும் நிழலில் ஓவியம் துலங்கும். அத்தனை வண்ணங்களும் ஜெகஜ்ஜோதியாக ஒளிரும். நான்கு காலங்கள் என்ற ஓவியம் நான்கு கண்ணாடிகளில் செய்து அதை சர்ச்சின் ஜன்னல்களில் பொருத்தி வைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.பதினைந்துக்கு பத்தடி என்ற அளவில் இந்த ஓவியங்கள் அமைந்திருக்கின்றன.

கம்ப்யூட்டர் க்றாபிக்ஸ் பற்றி அத்தனை விருப்பின்றியே பேசுகிறார். 80களில் அப்போது வெளிவந்த தொழில் நுட்பத்தை அவர் வெறுத்திருக்கிறார். அந்தச்சமயமே அவர் மரபு நோக்கி நகர்ந்து ட்ரெடிஷனல் ஓவியங்களை டாபிஸ்ட்ரியில் நெய்யத்தொடங்கியிருக்கிறார்.  உலகம் முன்னோக்கி கலைகளை வேறு தளத்துக்கு எடுத்துச்செல்ல முற்படும் போது அவர் பின்னோக்கி தன்முனைப்புடன் தம் கைகள் கொண்டு உருவாக்கும் கைவினைக்கலஞராக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முனைந்திருக்கிறார்.

அவர் கண்களில் அந்த வெறுப்பு மண்டிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. அதுவரை பென்சிலும் பேப்பருமாக வரைந்து கொண்டிருந்தவர் , மிகுந்த உடலை வருத்தும் டாப்பிஸ்ட்ட்ரியில் கவனம் செலுத்தத்தொடங்கி அவரின் புறங்கைகள் உள்ளுக்குள் வளைந்து போயிருக்கின்றன. கூன் விழுந்து நெஞ்சு முன்பக்கம் நகர்ந்து உருவம் சொல்லிக்கொள்ளும் படியாகவே இல்லை அவருக்கு, கணினியும் தொழில் நுட்பமும் எத்தனை வெறுப்பை அவருள் விதைத்திருக்க வேணும் என்பது தெளிவு. விரல்களும் புறங்கைகளும் அந்த க்றோஷா/கொண்டை ஊசிபோல வளைந்து போனதன் காரணமாக வழக்கமாக வாசிக்கும் பியானோவை இப்போதெல்லாம் வாசிக்க முடியவில்லை என வருந்துகிறார்.

டாப்பிஸ்ட்ரி தவிர, தனியாக உள்ளூர் ஸ்விஸ் கடிகார நிறுவனங்களுக்கு லெட்டர் பேடுகளும், லோகோக்களும் வரைந்து கொடுத்திருப்பதை ஆர்வத்துடன் காட்டுகிறார். எல்லாவற்றிலும் ஒரு தனித்தன்மை காணப்படுகிறது. பின்னர் விஸ்வநாத்துடன் காரில் பயணித்து தமது ஓவியங்கள் நிறுவப்பட்டிருக்கும் நிறுவனங்களுக்கு அழைத்துச்சென்று காண்பிக்கிறார். ஒரு பெரிய டப்பிஸ்ட்ரி வொர்க், கிட்டத்தட்ட 40 அடிகள் உயரமும், 10 அடி அகலமும் கொண்ட டாப்பிஸ்ட்ரியை ஓவியக் கண்காட்சி நடக்கும் ஆர்ட் கேலரியில் காண்பிக்கிறார். ஆறு மாதங்களுக்கு மேலாக அதற்கென உழைத்திருப்பதாக கூறுகிறார்.

இப்படிப்பட்ட கலையால் சமூகத்திற்கு என்ன பயன் என்ற விஸ்வநாத்தின் கேள்விக்கு , இதனால் ஒரு பயனும் இல்லை எல்லாம் எனது விருப்பத்தின் பேரில் செய்யப்பட்டவையே எனத்தெளிவாக பதிலளிக்கிறார் லீஸா. இருப்பினும் ஸ்விஸ் உள்ளூர் கலைகளில் வேறு வெளிநாட்டுத்தாக்கங்களை குறித்து அச்சம் தெரிவிக்கும் அதே லீஸா, கொரியன் பாதிப்பில் தாம் ஒரு டாப்பிஸ்ட்ரி செய்திருப்பதையும் காண்பிப்பது நகை முரண். இருப்பினும் இவரின் மகள்கள் யாரும் இப்பணியை தொடராது இசை மற்றும் இன்னபிற கலைகளை பயிற்சி செய்பவர்களாகவே இருக்கின்றனர்.  ஒரு விஷயம் சொன்னார் விஸ்வநாத், பொதுவாக தாயை பேட்டி எடுக்கும்போது மகள்களோ/மகன்களோ கூட இருப்பதில்லை தாமுண்டு தம் வேலையுண்டு என்றேயிருப்பது மேற்கத்திய கலாச்சாரம், ஆனால் இங்கு தலைகீழ். கூடவே பயணிக்கின்றனர் ஆவணப்படம் முழுக்க.

பின்னர் படம் முடிந்ததும் விஸ்வநாத் பார்வையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். நல்ல சுவாரசியமான கேள்விகள் வந்தன. அனைத்திற்கும் பொறுமையாக பதிலளித்தார். எனது கேள்விகள் இவை, ஸ்விஸ்ஸீல் நிறைய கலைஞர்கள் இருந்த போதிலும் லீஸாவை தேர்ந்தெடுத்தது ஏன் ? சமூகத்திற்கு என் கலைகள் ஏதும் செய்யப்போவதில்லை என லீஸா கூறுகிறார். அதே கேள்வியை உங்களிடம் (விஸ்வநாத்திடம்) கேட்பின் என்ன பதிலுரைப்பீர்கள், இந்த டாக்குமென்ட்ரியை பார்க்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்ததா (ஏனெனில் அவர் 2009-ல் மறைந்து விட்டார்). லீஸாவின் பணியில் அவர்தம் கலையில் ஏற்பட்ட ஈர்ப்பே அவரைப்பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்க வேணும் என்பதும், மேலும் மரபு வழி வந்த அவரின் கலைப்பயணம் குறித்தும் தாம் மகிழ்ந்ததாலும் படம் எடுக்கத்தோணியது என்றார். சமூகத்திற்கென , இந்தப்படத்தை ஒரு சிறுவன் பார்த்து அதன் மூலம் அவனின் கலையை வெளிக்கொணர இது உதவலாம் என்பதே எனது நோக்கம். இந்தப்படத்தின் ரஃப் கட்டை மட்டுமே அவரால் காண முடிந்தது,முழுக்க படம் எடுத்து/இசைக்கோர்ப்பெல்லாம் செய்து முடித்து முழுப்படமாக வருவதற்குள் அவர் மறைந்து விட்டார். பலமுறை இந்தப்படத்தின் பல வித நேரங்களில் அவரிடம் காண்பித்து பல மாற்றங்கள் செய்ததாகவும் தெரிவித்தார்.

இவ்வளவு பெரிய கலைஞர், ஒரு விக்கிப்பீடியா பக்கம் போலும் இல்லை.அவரைப்பற்றிய அவரின் ஓவியங்களின் படங்கள் எவையும் இணையத்தில் கிடைக்கவேயில்லை எனக்கு. (கிடைக்கும் படங்களும் வலைப்பூக்களும் இதே பெயரில் இருக்கும் வேறொரு அமேரிக்கப்பெண்மணியின் ஓவியங்களாகவே இருக்கிறது) ஒருவேளை அதுவே அவரின் எண்ணமாகக்கூட இருக்கலாம். ஏனெனில் கணினி கொண்டு உருவாக்கும் படைப்புகளில் அவருக்கு கிஞ்சித்தேனும் ஆர்வம் இருந்ததில்லை. விஸ்வநாத்தின் ஆவணம் மட்டுமே அந்தப்பணியை செய்திருக்கிறது. மேலும் கலை என்பது பிறரின் அங்கீகாரம் தேடுவதற்கெனச் செய்யப்படுவதில்லை , அது முட்டமுழுக்க அதை உருவாக்கும் கலைஞனுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியை கொடுக்கக் கூடியதாகவே இருக்கவேணும் என்பதே விஸ்வநாத்தின் கூற்றாக இருக்கிறது. 




.

Sunday, December 25, 2016

"Original Tamils"



நேற்று (24/12/2016) பெங்களூர் காக்ஸ்டவுன் அலொய்ஸிஸ் கல்லூரியின் அரங்கில் ஸ்டாலின் ராஜாங்கம் (அமெரிக்கன் கல்லூரி விரிவுரையாளர்) அயோத்தி தாசர் பற்றி உரையாற்றினார். நிறைய புதிய விஷயங்கள் எனக்குத்தெளிவாகின. 1800 களிலேயே அவரது பணி துவங்கி விட்டதை எடுத்துரைத்தார். "Original Tamils" என்ற வகைப்பாட்டில் தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்க்கவேணும் என்பது, பெரியார்/அம்பேட்கர் ஆகியோருக்கு முன்னரேயே விடுதலை பற்றிப்பேசியது, சிதம்பரத்தில் தீப்புகுந்து தமது பக்தியை நிரூபித்த நந்தன் ஒரு பெளத்த மன்னன் (ஆண்டான் அடிமை அல்ல), பெரும்பான்மையான இலக்கியங்கள் பெளத்த/ சமண மதத்தை சார்ந்தவை,சங்க இலக்கியங்கள் பற்றிய குறிப்புகள் மறைக்கப்பட்டவை, ICS தேர்வை இங்கிலாந்திலேயே நடத்த வேணும், இந்தியாவில் அல்ல, ஏனெனில் இந்தியர்களை ஆளுமையில் ஆங்கிலேயர்கள் சாதிப்பாகுபாடின்றி நடத்துவர் , மேலும் தாதாபாய் நவ்ரோஜி 300 கையெழுத்துகள் கொண்டே இந்த கோரிக்கையை முன்வைத்தார், அயோத்தி தாசரோ மூவாயிரத்துக்கும் மேலான கையெழுத்துகளுடன்  இந்த ஐசிஎஸ் தேர்வை இங்கிலாந்தில் நடத்துவது குறித்து கோரிக்கை முன்வைத்தார். நீதிக்கட்சியின் முன்னோடி தாசருடையது, இதைப்பற்றி பெரியாரே சில இடங்களில் கூறியிருக்கிறார்.இப்படி பல விஷயங்களை எடுத்துரைத்தார்.

கார்த்திகை தீபம் என்பது கார்' என்றால் இருள் துல' என்றால் துலக்கக்கூடிய என்ற பொருள். மேலும் அடிமுடி காணா அண்ணாமலை என்பதெல்லாம் நம்ப வைக்கப்பட்ட கதைகள். ஆமணக்கு விதையிலிருந்து எங்கனம் எள் எடுத்து பின் அதை செக்கிலாட்டி எண்ணெய் பிழிந்தெடுப்பது போல என்ற முயற்சிகள் கொண்ட எண்ணை கொண்டு எரியவைக்கப்படும் விளக்குகள் என்பதே.



திருவையாறில் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஆனை மேல் அம்பாரி வைத்து அந்த ஆனையை முதன்மையாக அணியில் வலம் வரச்செய்யும் மரபு இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. சங்கீத வைபவத்தில் இன்றும் இருமணிக்கூறு நிகழ்வாக பறையடிக்கும் மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதிலிருந்து நமக்கும் தெளிவாகலாம் தமிழ்ப்பண்ணிலிருந்து தோன்றியது அனைத்தும் என்பது.





ஸ்டாலின் ராஜாங்கம் பேராசியர் என்பதால் அவர் வகுப்பு நடத்துவது போலவே தோன்றியது எனக்கு. ஹிந்து' ரா விநோத்'தின் ஏற்பாட்டில் நிகழ்வு நடந்தது. உரை முடிந்ததும் கலந்துரையாடல். பல பேர் கேள்விகள் கேட்டனர். மாணாக்கர்களுக்கு விளக்கம் சொல்வது போல பொறுமையுடன் பதிலுரைத்தார். பின்னர் அனைவருமாக சேர்ந்து ஷாந்தி சாகரில் தேநீர் அருந்திவிட்டு வீடு கிளம்பினோம்.

 

Thursday, December 22, 2016

அழகிய சூடான பூவே


அழகிய சூடான பூவே - ரொம்ப நீட்டான பாடல். ட்ரெம்ப்பெட்டும்/சாக்ஸும், வழக்கமான பெர்குஷனும் வைத்துக்கொண்டு ஜாஸில் இசைத்திருக்கிறார். இப்பதான் அழகா ஒரு ஜாஸ் ஒண்ணு போட்ருந்தார் 'அக்கம் பக்கம் பார்'னு .இருந்தாலும் மக்களுக்கு போரடிக்கும் இதைக்கேட்டு. 02:44-ல் ஆரம்பிக்கும் அந்த வயலின் இனிமை. விஜய்க்கும் கீர்த்தி சுரேஷுக்கும் இந்தப்பாடல் டூயட்டா...கொஞ்சம் கஷ்ட்டமாத்தான் இருக்குதுங்ணா.. :) இருப்பினும் குரல்கள் புதிது! சூப்பர் சிங்கர்லருந்து யாரோ ரெண்டு பேரப்புடிச்சுக்கொண்டு வந்து பாடவெச்சமாதிரி இருக்கு :) ஹாரிஸ் ஸ்டைல்ல போட்ட மாதிரி இருக்கு. படம் பாக்கப்போனா எங்கூர்ல அதுவரைக்கும் பீகாரில் வெள்ளம் பிரதம மந்திரி போனார் கொல்லம்னு  போட்டு அறுத்துத் தள்ளிட்டு,மெயின் பிக்சர் போடும்போது ஒரு ம்யூஸீக் போடுவாங்ய சாந்தி தியேட்டர்ல அது மாதிரி இருக்கு பாட்டு ஆரம்ப இசை.

நில்லாயோ - வயலினிசையுடன் துவங்கும் பாடல் , கொஞ்சம் பாப்' மற்றும் ஜாஸ் கலவை.வெகு நாட்களுக்குப்பிறகு இசைக்கருவிக்கு முக்கியத்துவம் கொடுத்து இசைத்த மெலடி.! எலெக்ட்ரானிக் பாக்ஸ்களை காண இயலவில்லை. அருமை! பெண்பால் வெயிலோ?! வெளியூர் நிலவோ? பதினாயிரம் ஆண்டுகள் அகவை ஆயினும் இன்னும் இளங்கன்னியாக உலவும் தமிழ் வைரமுத்துவின் வரிகளில்..ஆஹா! கொஞ்சம் முன்னால 'நீர்ப்பறவை'யில்  ரகுநந்தன் இசைத்திருந்தார் 'பற பறவென பறவை ஒன்று' என! ஏறக்குறைய அதேதான். எனினும் இனிமையாக இருக்கிறது இதுபோன்ற இசை கேட்பதற்கு. 'வெரசாப் போகயில'ன்னு இமான் போடிருந்தார் விஜய்க்கென ஜில்லாவில. இப்டி ஏகத்துக்கு க்ளீஷே கிழிஞ்சு தொங்குது! இருப்பினும் ஹரிச்சரன் குரல் பாடலைக்கேட்க வைக்கத்தான் செய்கிறது!


பட்டையக்கெளப்பு - இதெல்லாம் எண்பதுகளில் ராசைய்யா இடதுகையாலயே போட்ட பாடல்களப்பா சலிக்கிறது சநா. 



பாப்பா பாப்பா - டப்பாங்குத்து! வேறொண்ணுமில்லை! இதுல விஜய் வேற பாடீருக்கார். ஹாரீஸ் கூட நல்ல பாடல் கொடுத்திருந்தார் விஜய்க்கு. கூகிள்ல தேடிப்பாக்காமலேயே கேக்கலாம் அந்தப்பாடலை. விஜய் ஆன்டனி மாதிரி ஒரு நாக்க மூக்கா, இல்ல தம்பி அநிருத் 'செல்ஃபி புள்ள' மாதிரி போட்ருக்க வேணாமா சநா. போரடிக்குதூங்ணா.


வர்லாம் வர்லாம் வா - காபாலீஈடாஆ நெருப்புடாஆ ப்ளாக்யிரஸம்டாஆ ..விட்ருங்க சநா போதும் ..இதே மாதிரி 'கொடி'ல தனுஷ்க்காகவும் ஒண்ணு போட்டு எதுக்கு இதெல்லாம்?! ஹ்ம்...இப்ப விஜய்க்காக ஒண்ணு! புதிய இசையாகத் தோன்றவில்லை.பழகிய இசை! எனக்கென்னவோ இது ரெட்ரொ'வாக இசைத்தது போலவே தோன்றுகிறது அரைத்த மாவுக்குப் பேர்தான் ரெட்ரோ'வா ?!..ஹிஹி .... 


 .


Friday, December 16, 2016

சொப்னசுந்தரி


சொப்னசுந்தரி..ஹிஹி.. பாய்ஸ் ஆர் பேக், ஆமா,, வெங்கட்பிரபு அவருக்கு  என்ன செய்ய வருமோ அத ரொம்பவே சரியா செய்திருக்கிறார். முதல் பாதில பாதிக்கும் மேல வாய்ஸ் ஓவர் தான் ஓடுது. கிரிக்கெட்டெல்லாம் பாத்து ரொம்ப நாளாச்சு எனக்கு. இருந்தாலும் ஷார்க்ஸ் டீம் ஆடுனா கண்டிப்பா பார்க்கலாம். நிதின் சத்யா ஆவேசமா , ஆமா பத்து நாள் நான் இப்டித்தான் இருப்பேன் எனக்கு ஃப்ரென்ட்ஸ்ங்க தான் முக்கியம்னு குமுறுதல் அழகு. படத்துலயே சிவா'வுக்கு தான் மொக்க ரோல்.ரெண்டு முட்டை உடையும் சீன் மட்டுமே சிரிப்பு :) சொப்னசுந்தரி சலூனுக்கு வந்திருக்கான்னு ஃபோனப்போட்டு எல்லாரையும் வரவழைக்கிற டெக்னிக் ப்ரேம்ஜியோட சொந்த டெக்னிக்காதான் இருக்கும்.ஹிஹி. அதே ஃப்ரென்ட்ஸ், அதே எடக்கு மடக்கான வசனங்கள். இருந்தாலும் ஜெய்க்கு கல்யாணம் நின்னுபோயி , யாரும் யாரையும் பாக்க வேணாம்னு முடிவு பண்ணீட்டு அப்புறம் அதே க்ரவுன்டல சண்டை போடுவதற்காக வந்துவிட்டு எல்லாருமா சேர்ந்து கல்யாணம் பண்ணி வைப்போம்னு நெகிழ்வா மாறும் சீன்..ஆஹா அற்புதம்.



இப்டி ஒரு உச்சக்கட்ட காட்சில்லாம் வெக்கிறதுக்கு பாக்யராஜைத்தவிர வேற யாருக்கும் திராணி இருக்கான்னு தெரியல. செம செம. எல்லோரும் அவங்களோட பங்கை சரியாக செய்திருக்க யுவன் மட்டுமே டக் அவுட் , படத்தின் பின்னணி முழுக்க தேனியாகி விட்டதால் ராசைய்யாவின் பழைய பாடல்களையே ஓடவிட்டு இதற்கெல்லாம் யுவன் தேவையா? ஹ்ம்... தீம் ம்யூஸிக் ஜெய்க்கு சோகம் வரும்போதெல்லாம் எரிக் க்ளாப்டனின் 'wonderful night'ஐயே ஒலிக்க விடுகிறார். 'வாழ்க்கைய யோசிங்கடா'ன்னு ஒரு க்ளாஸிக்கை இசைத்தவரா இப்படி ?!.. ஸ்கோப் இல்லாமல் இல்லை. அழகான காதல் தருணங்கள் இருக்கத்தான் செய்கிறது , அந்த உறுதிவிழாவில் கூட பாடல் எடுபடவில்லை....அந்த அருவியின் பின்னணியில் ஒலிக்கும் பாடலும்..முதல் பாகத்தின் முழு வெற்றிக்கு கீப்பராக இருந்தவர் இங்கு லெவென்த் மேன் கூட இல்லை. சோகம். வைபவ் புகுந்து வெளாட்றார். எப்டியாவது hook or crook மேட்ச் ஜெயிச்சே ஆகணும்னு ஆஹா. செம டெப்த்தான கேரக்டர்..... சென்னை 28 த்ரீ எப்ப பிரபு சார் ?!#சொப்னசுந்தரி




Sunday, December 4, 2016

சைத்தான்.....ஆ



அரே சைத்தான் கீ பச்சே.. 'சுஜாதா'வையே கொன்னுட்டியே... ஜெயலட்சூமீ... இது ஏதோ 'சித்தீஈஈ' மாதிரி படம் பூரா ஓலம் போடுது. சுஜாதா '' கதைய எப்டி முடிச்சார்னு எனக்கு ஞாபகமில்ல. ஏதோ கேப்டன் படம் இப்பல்லாம் வர்றதில்லங்கறதுக்காக இப்டியா விஜய் ஆன்டனி ?! ஆர்கன் திருட்டு,பூச்சி மருந்து கொலை,பிறன்மனை நோக்குன்னது இப்டீல்லாமா போட்டு கொழப்புறது ?

டோட்டல் ரீக்கால்னு ஒரு படம் , ஆர்னால்ட் நடிச்சது. எல்லாமே நமக்கு நினைவுகள்தானே.? எங்க ஊர் சுத்தீட்டு வந்தாலும், வெளிநாடே போனாலும் ஒரு மாசம் தாய்லாந்து மசாஜ் அடிச்சாலும் கடைசிக்கு மிஞ்சுவது நினைவுகள் தான். வேற்றுக் கிரகங்களுக்கு பயணம், பயணம்னா நெஜமாவே போறதில்லை.. அந்தப் பயணம் பற்றிய நினைவுகள் உங்கள் மனதில் பல ஆண்டுகள் அழியாதிருக்கும்னு ஒரு கார்ப்பொரேட் கம்பெனி விளம்பரம் பாத்துட்டு ஆர்னி அங்க போவார், ஊர் சுத்துறதுன்னா கூடவே ஒரு அம்மணியும் வருவாங்க , யாரை வேணாலும் செலக்ட் பண்ணுங்கன்னு நிறைய படங்கள் காட்டுவார்கள்.  

ஆர்னி கொஞ்சம் எடக்கு மடக்கான பொண்ண தேர்ந்தெடுத்து அவா'வுடன் பயணிக்க நினைப்பார். ஊசி ஏற்றப்பட்டதும் மூளையில் படாத இடத்தில் பட்டு அதே பிறப்பில் அவருக்கு வலுக்கட்டாயமாக அழிக்கப்பட்ட தனது செவ்வாய்க்கிரக போராளியின் நினைவு வந்துவிடும். அப்புறம் அடுத்த ராக்கெட் பிடிச்சு செவ்வாக்கெரஹம் போயி எதிரிய அழிப்பார்னு வெச்சுக்குங்களேன்.. என்ன சைத்தான் மாதிரி இருக்கா...ஹிஹி.. அதே தான்.. ஆனா ஆர்னி 18 இஞ்ச் ஆர்ம்ஸ் வெச்சு சொம்மா மெரட்டீருப்பார். இங்க விஜய் ஆன்டனி ..சரி வேணாம்..ஆ..!


.

Saturday, November 19, 2016

ராணுவவீரன்

எதுக்கெடுத்தாலும் ராணுவவீரன் எல்லைல நின்னு போராட்றான். ஒனக்கென்னடா வரிசைல நிக்க வலிக்குதுன்னு கெளம்பறது. எனக்குத்தெரிந்து ராணுவத்துல சேருவதுங்கறதெல்லாம் நிரந்தர வேலை,போதுமான அளவு சம்பளம், எக்ஸ் சர்வீஸ்மென் என்ற பலன்கள்,மேலும் பென்ஷன் கிடைக்கும்.அவ்வளவு தான். மேலும் அதற்கென அத்தனை பரீட்சைகள் எழுதி தேர்வாக வேணும்ங்கற அவசியம் இல்லை. கொஞ்சம் உடல்தகுதி பெற்றிருந்தால் போதும்,ரெண்டு மாசம் ஜிம் போய்,ஒக்காந்து சாப்ட்டு உடம்பத்தேத்திக்கிட்டு செலக்ஷனுக்கு போனால் போதும் என்ற மனநிலையில் சென்று ராணுவத்தில் சேர்ந்தவர் தான் அதிகம். 

எனது நெருங்கிய நண்பனுக்கு அத்தனை உடற்தகுதியோ,இல்லை கட்டுமத்தான உடலோ கிடையாது. இத்தனைக்கும் மரக்கறி மட்டுமே உண்டு வாழும் சீவன் அது, கெமிஸ்ட்ரில்லாம் படிச்சான் மதுரைல. எங்கயும் செலக்ட் ஆவல. அத்தனை பொதுத்தேர்வெல்லாம் எழுதிப் பாத்தான் ஒண்ணும் வேலக்காவல. கண்ணில் குறைபாடு எப்பவும் கண்ணாடி அணிந்து கொண்டிருப்பான். எனக்குத்தெரிந்து இரண்டு வயதிலிருந்தே கண்ணாடி தான். அதைக் கழற்றினால் எதுவுமே தெரியாது. காது ஏகத்துக்கு மந்தம். அதிக சத்தம் கூட அவனுக்கு கேட்காது, அப்படிப்பட்டவனை கோவையில் நடந்த ராணுவ செலக்ஷனுக்கு அவனோட அப்பா அனுப்பி வைத்து உள்ளில் கையூட்டு கொடுத்து ராணுவத்தில் சேர்த்தேவிட்டார். அவனைப் பொருத்தவரை ஒரு வேலை, குடும்பத்துக்கு தேவைக்கான சம்பளம்ன்னு அவனுண்டு அவன் வேலையுண்டுன்னு இருக்கிறான். உள்ளுக்குள் தாஜா செய்துகொண்டு அதிகம் பிரச்னையில்லாத இடங்களில் இருந்துகொள்ள முயற்சி செய்துகொண்டே இருப்பான்.

இப்ப இங்க ரியல் எஸ்டேட்ல வேல செய்யும் ஒரு பையன் அதே மாதிரிதான் காலை அஞ்சு மணிக்கு எழுந்து ஓடுவான். இன்னும் ரெண்டு மாசத்துல செலக்ஷன் வருது என்பான். வேல நிரந்தரம் இல்லை ராம், அதான் எப்டியாவது சேர்ந்து கொஞ்ச காலத்த ஓட்டிட்டு அப்பால வீஆரெஸ் வாங்கிட்டு வந்துரலாம்னு இருக்கேன் என்று வெளிப்படையாகவே சொல்வான். அதான் அவங்களும் நம்மப்போல சாதாரண ஆட்கள் தான். பெரிசா வானத்துல இருந்தெல்லாம் குதிக்கிறவன்லாம் இல்லை.பெரும்பாலும் ராணுவத்தில் வேலை செய்யும் எவரும் தன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளவே விழைவர். இதுவும் நம்மல்லாம் நம்ம கம்பெனீல/நமக்குத்தெரிந்த இடங்கள்ல பயலுகள சேர்த்து விடுவது போலத்தான்.

இந்தப்பதிவின் மூலம் ராணுவவீரர்களை குறை கூறுவதோ/இல்லை சிறுமைப்படுத்துவதோ எனது நோக்கமில்லை. எனது குடும்பத்தில் கிட்டத்தட்ட ஆறு/ஏழு பேர் ராணுவத்தில் முப்படைகளிலும் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்கள் தான். #ஆயிரம்ஐந்நூறுசம்பாத்தியம்

Saturday, November 12, 2016

ராசாளி


எப்பவுமே எஸ்ரா'வுக்கு இந்த வாய்ஸ் ஓவர்ல ஒரு க்றேஸ் உண்டு. இங்க பெங்களூர் வந்திருந்தப்ப அதையே பேசிக்கிட்டு இருந்தார். வாய்ஸ் ஓவர்ல சொல்லி கதைய தொடங்கணும்னு. ஆரம்பிக்கிறது சரி..அதுக்காக இப்டி படம் பூராவுமா? கெளதம்?.. கொடுமைங்ணா. சரக்கு தீர்ந்திருச்சு,அவ்வளவுதான் அவுட்டு அப்டீல்லாம் எழுதப்போறதில்ல நான்..ஏன்னா அவர்கிட்ட இருக்குறத தானே வெச்சு எடுப்பாரு? ஹ்ம் சரிதானே. "என் பேர் தமிழ்ச்செல்வன் , நான்..."  அப்டீன்னு "காக்க காக்க"லருந்து அதயே தான் பண்ணீண்டுருக்கார். ஹிஹி.. நமக்குத்தான் புளிக்கிறது. அண்ணா பியர் புளிச்சா நன்னா கிக்கேறும், இங்க தாங்கல.

ட்ராவலாக்' எடுக்கலாம் தான். ஒரு மோட்டார் சைக்கிள் டயரி மாதிரி அதுலயும் காதல்,வீரம், பாசம் எல்லாம் உண்டு.முக்கியமா சே கபாடா இருந்தார் அதுல. இங்க ? 'கத்துக்கிட்ட வித்தைய மொத்தமா எறக்குன' லிங்குசாமி கூடத்தான் ஒரு ட்ராவலாக் 'பையா' (அடங்கொய்யா)ன்னு எடுத்தார். அதுலயுந்தான் அடிதடி காதல் வீரம், ஹ்ம்...அங்க காரு இங்க ராசாளி'ங்ணா. ராயல் என்ஃபீல்டு. நம்ம பாலா' அதுலதான் ஓசூர்லருந்து வருவார்.இப்ப ஃப்ராங்காய்ஸ் டீ பெங்களூர்ல ஒரு ஹிந்துஸ்தானி கச்சேரி நடந்தது.அதுக்கு கூட அந்த ராசாளீலதான் வந்தார். ஆனா பின்னால ஒரு மஞ்சிமா இல்லை. ஹிஹி..

அதெல்லாம் சரி. ஒரு வீட்டுக்குள்ள ஒரு மாசம்னு வெச்சுக்குங்களேன்.அப்டி இப்டி லீகலா பழகினாங்கன்னும் வெச்சிக்கலாம். குடும்பத்தோட ஒண்ணா இருந்தாங்கன்னும் வெச்சிக்கலாம் தான். அதுக்காக ஒடனே ராசாளீல பின்னால ஒக்காந்துக்கிட்டு ஒலகம் பூரா சுத்துததுக்கு ஒரு பொண்ணு ஒத்துக்குவாளாங்ணா ?..ரெண்டு வர்சம் கோலம் போட்டூமே இங்க பஸ்ல ஒரே சீட்ல பக்கத்துல பக்கத்துல ஒக்கார மாட்டாளுஹ.. இப்டிக்கும் வாஸப்ல நீட் சாட்(மட்டுந்தான்) ஓட்டி மெயின்டென் பண்ணிக்கிட்டு இருந்தாலுமே நடக்காதூ. ஓஹொ..இது சினிமாப்பா அப்டித்தான் ஒடனே பின்னாடி ஒக்காந்து 'தள்ளிப்போகாதே அடியெ' அப்டீன்னு பாடீருவாளுக..ஹிஹி..

தலைவி பேர் தெரியாம, இந்த சின்னப்பசங்களுக்கு முட்டாயி,அப்புறம் கேட்பரீஸ் எல்லாம் குடுத்து தலைவன் தலைவியோட பேரைத்தெரிஞ்சிக்க முயற்சி பண்ணுவார். அப்டித்தான் நாமெல்லாம் பாத்து பழகிருக்கோம். இங்க ஹிஹி தலைவி பேரை முதல்லயே சொல்லீர்றார் கெளதம். "பேரைச்சொல்லவா அது நியாயமாகுமா"ன்னு சிம்பு பாடீருவாரோன்னு பயந்தே போயிட்டேன். ஹ்ம்.அங்க ஹெலிகாப்டர்ல ..இங்க இது ராசாளீ.. ராசாளீ... அந்த சோகம் உன்னத்தாக்கிடுமோன்னு நினைக்கும்போது நின்னுடுது..அதான் காதல். லாட்ஜ்ல ரூம் புக் பண்ணும்போது கூட பேரச்சொல்ல மாட்டேங்றார்னா பாத்துக்கோங்களேன். அதுக்கு நமக்கு கடசீல ஒரு ட்விஸ்ட் வெச்சிருக்கார் கெளதம். ஆனா தேட்டர்ல அதப்பாக்றதுக்குத்தான் யாருமேயில்ல. ஹ்ம்..அந்தக்கொடுமய அப்பால சொல்றேன். இடைவேளைக்கி அப்பால பின்னாடி கேட்டுக்கிட்ருந்த வாஸப் சவுண்டு ஆஃப்..பின்னாடி பாக்றேன். சுத்தம் யாருமேயில்லை.

வசனம் எப்பவுமே வசனமாவே தோணாது அதுவும் காதல் வசனங்களெல்லாம் கெளதம் படங்கள்ல. "ஒரு ஃப்ளாஷ்ல வந்திருச்சு மச்சான்" "சொன்ன டைமிங்தான் தப்பு ஆனா மேட்டர் கரெக்ட்டு". அதேபோல தலைவனும் தலைவியும் வேறு வேறு சமயங்களில்  காதலைச் சொல்லுமிடமும் ஹ்ம்..கெளதம்க்கு ஒரு பூச்செண்டு. அதுக்கப்புறம் அந்த பூந்தொட்டியவே தூக்கி அடிக்கிற அளவுக்கு..படம் பயணிக்குது .ஹ்ம்...சரி வேணாம். "பயத்தப்பாத்து நாம ஓடக்கூடாது , நம்மளப்பாத்துதான் அது ஓடணும்" இப்டி கொஞ்சம் அப்பாலிக்காவும் ஓட்ற வசனங்கள்லாம் கீது.


கமல் ஒரு படம் எடுத்தார் ஹேராம்னு. ஒரு நாப்பத்தெட்டு பாஷா பேசீருப்பாளா அந்தப்படத்துல. இங்க ஒரு நாலஞ்சு பாஷா பேசறா. அதுல "நான் தமீழண்டா"ன்னு வேற ஒரு வசனம். மொதல்ல கெளதமே தமிழன் கெடயாது. அது சரி.பரவால்ல. விட்ரலாம். சிம்புவா வர்ற நண்பர் மகேஷ் , அருமை. மச்சான் மச்சான்னு கலக்குறார்.  இனிமே ஈரோவுக்கு பெரண்டா நிறையப் படங்கள்ல தோன்றுவார். சதீஷ்,சந்தானம், இவாளுக்கெல்லாம் வயசாயிடுச்சில்லியா அதனால. ஆமா சந்தானத்த எங்க காணம் அதுவும் சிம்பு படத்துல.. என்னவோ தெரியல.

"மேம் பீ மடோன்னா"ன்னு ஆல்பம்லாம் போட்டுக்கிட்டிருந்தார் பாபா சேஹ்கல். கொஞ்சம் ஹிப் ஹாப்/ராப் வெச்சிண்டு பொழுது ஓட்டி ஓய்ஞ்சு போனவர். இங்க மொட்ட போலீஸ். நான் கூட 'விசாரணை'ல வந்த அந்த மொட்ட போலீஸ்காரராக்கும்னு நினைச்சிட்டேன். கொஞ்சம் மராட்டியும், பாம்பே இந்தியுமா பேசறார். வில்லனுக்கு ஒத்துவரல அவரது உடல் மொழி.

பாடல்கள் இடம்பெறும் காலங்கள், அதற்கான காரணங்கள், புகுத்தும் இடங்கள் எல்லாமே எப்போதும் கெளதம் படங்களில் பிரமாதமாக இருக்கும். நீஎபொவ' மாதிரியே இங்கும்/எங்கும் பாடல்கள்  பொருந்தும் காட்சிகள். அதிலும் "தள்ளிப்போகாதே" பாடல் யாருமே எதிர்பாரா இடத்தில்.. ஆஹா சபாஷ் கெளதம். இதுவரை இப்படி இந்தியப்படங்களிலே வந்ததேயில்லை. 



மஞ்சிமா , ஆமாம்மா இந்த அம்மாவப்பத்தி ரொம்பவே சொல்லத்தான் வேணும். செம ஃபிஸிக்.நல்ல ஓங்குதாங்கா இருக்கா. விட்டா நன்னா ஆர்ம்ஸ்/ பைசெப்ஸ்லாம் காமிப்பா போலருக்கு சாக்ஷி மாலிக் மாதிரி சிம்புவத்தூக்கி அந்தால போட்டுர்றா மாதிரி ஒரு உருவம். சன் டீவீல எட்டு மணிக்கு ஒரு சீரியல் வருமே 'தெய்வ மகள்' அதுல காயத்ரி கேரக்டர்ல ஒரு வில்லி வருவா ( அவா ஊதினா இவா வருவா..ஹிஹி ) அது மேரி இருக்குறாங்கோ இந்த மஞ்சிமா. ஒருவேள அவாளோட தங்கச்சியோன்னு நினைக்க வைக்கும் உருவம். இப்டி ஒரு ஈரோயினா. ஹ்ம்.. தமிழ்ப்படங்கள்ல எப்பவுமே பூஞ்சையா, தலைவன் வந்து தான் காப்பாத்த வேணூம்னு நினைக்கிற தலைவிகளைத்தானே இதுவரை பாத்ருக்கோம். அப்டியும் இந்தப்படம் வழக்கமான ஈரோ ஓரியன்ட்டடு சப்ஜெக்ட்டூ.    





ஈரோயினுக்கு எக்கச்சக்க க்ளோஸப் வெச்சு, இன்னும் அழகா காட்ட முயற்சி செய்திருக்கார். தலைமுடி நீவிவிடுவதும், கோதி விடுவதும், ராசாளியின் பின்புறம் பயணிப்பதும் அவ்வப்போது தின்னக்கொடுப்பதும், உள்ளங்கைகளை சிம்புவின் தொடயில் வைப்பதும் என அத்தனை க்ளோஸப் ஷாட்கள்.அத்தனையும் அருமை. பாலச்சந்தர் இதுமாதிரிதான் கொஞ்சமே பாக்றா மாதிரி இருக்கிற பெண்டுகளை அவர்கள் அழகாக இருக்கும் சில கோணங்களில் மட்டுமே காண்பித்து காண்பித்து பிடிக்க வைத்து விடுவார்.அதேதான் இங்கே.

சிம்புவுக்கு என்னா இப்டீ ஒரு மேக்கப்பு , பிட்டு பட ஈரோ மேரி. தாடி கீடில்லாம் வெச்சிக்கிட்டு. செம சதை வேற போட்ருக்கு, 'வெட்டி'ன்னு சொல்லி அத ஜஸ்டிஃபை பண்ணீர்றார் கெளதம். அவரோட தங்கை 'அவ கேரளா'ன்னு சொல்லும்போதும், அதானெ பாத்ததேன்னு சொல்லும் போதெல்லாம் சிம்பு உள்ளேன் ஐயா. ட்ரெயின் ஃபைட்டு தான் நம்பறா மேரி இருக்கு. மத்ததெல்லாம் வேஸ்ட்டு வெத்து வேட்டு. இதுல கெளதம் ஒரு கேமியோ ரோல்ல வேற. பெரிய ஹிட்ச்காக்'ன்னு நெனப்பு.



ரஹ்மான் இருக்கார். ரொம்பநாளைக்கப்புறம் நானும் ஃபீல்டுல இருக்கேன்னு காட்றார். என்ன எப்ப பாத்தாலும் "கண்ணுக்கு மையழகு கவிதைக்கு சொளகழகு"ன்னு ஒரு பாட்டு மின்னாடி போட்ருந்தார் அதையே இங்கே தந்திக்கருவிகளில் வாசித்து வாசித்து போரடிக்க வெச்சிட்டார். என்ன சொன்னாலும் பின்னணி இசை என்பது அவருக்கு தான் வாய்க்கும். சரி அரசியல் பேச வேணாம். ராப்/ஹிப் ஹாப்களில் மலிந்து போகிறார் ரஹ்மான். என்ன சொல்வது அவரைப்பற்றி.

படத்தின் பின்பகுதி முழுக்க இருட்டு.அத்தனையும் அடிதடி. சலித்துப்போய் எழுந்து வரத்தோணுவது படத்தின் பெருங்குறை. சகிக்கவே இயலவில்லை. ஒருவேளை யாராவது அஸீஸ்டென்டு கிட்ட குடுத்து எடவேளைக்கப்றம் எடுக்க சொல்லீட்டாரோன்னு நினைக்க வைக்கும் சொய்வு, இதெல்லாம் கெளதம் தானா என சோதிக்கும் பல காட்சிகள். ஹ்ம்.. முதல் பாதி அருமை, ஹ்ம்...எல்லாக்காதலிலும் முதல் பாதி எப்போதுமே அருமையாகத்தானே இருக்கும்.




Friday, November 11, 2016

அக்கம் பக்கம் பார்


ஜாஸ் இசை என்று எடுத்துக்கொண்டால் கொஞ்சம் பழைய,மெல்லிய ரொம்பவும் அதிரடியில்லாத, காதுக்கு இனிமையான இசை என்றே அறியப்படும். ரொம்பவே மெதுவாகச்செல்லும் என்பதால் எல்லோருக்கும் போரடிக்க ஆரம்பித்துவிடும். ஜாஸ் கேட்கவென வேறேங்கும் போகவேணாம். இப்பவும் வின்டோஸ்7 பயன்படுத்துபவராயிருந்தால் டீஃபால்ட் ம்யூஸிக் ஃபோல்டரில் பாப் அக்ரி'யின் Sleep Away' வைக்கேளுங்கள். அத்தனை சுகமான மெல்லிய மெலடி. கேட்டும் உறக்கம் வரவில்லையெனில் உங்களுக்கு வேறேதோ பிரச்னை இருகிறது என அர்த்தம். பியானொவில் வாசித்திருப்பார் முழுப்பாடலும். கேட்க ஆரம்பித்தால் இடைவிடாது சுழற்சியில் இட்டு தொடர்ந்தும் கேட்டுக்கொண்டே இருக்கத்தோணும்.

ஜாஸ் இசையில் வெகுவாக பெர்குஷன்ஸ் அதாவது சிறிதே அதிர வைக்கும் ட்ரம்ஸும், பியானொ, மற்றும் சாக்ஸஃபோன் போன்ற வாத்தியங்களே பயன்படுத்தப்படும். கேட்டால் காதுக்கு இனிமை, அதிரவைக்காது கூர்ந்து கவனிக்க வைக்கும் இசை. ஒண்ணு சொல்றேனே வயிறுமுழுதுக்குமாக பிரியாணி சாப்பிட்டு விட்டு, நல்ல வெக்கையில் வெண்டாவி அத்து வரும் வேளையில்  காகம் கரைய,வேப்ப மர நிழலில் இருந்து கேட்டுப்பாருங்க.ஆஹா. சொல்லவே அருமையாக இருக்கிறது. சொக்கிப் போடும் உங்களை , அதற்குத்தான் சொன்னேன்.

இந்த ஜாஸ்'ஐ ராசய்யா தமது முழு ஸ்டைலாகவே/ பாணியாகவே கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகவே ஆக்கிக்கொண்டார் என்றே சொல்லவேணும். நீஎபொவ அதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இன்னபிற இசை வகைகள் (genre)அந்தப்பாடல்களில் தென்பட்டபோதிலும் அடிப்படையான இசை ஜாஸ் தான். கிழவர்களுக்கான இசை..ஹிஹி. அப்படி இல்லை. யாரையும் அதிரடியாக இசைத்து இம்சைப்படுத்துவதில்லை என முடிவெடுத்த ராசைய்யாவிற்கு இந்த ஜாஸ் பிடித்துப்போனதில் ஆச்சரியமில்லை. இன்னொரு பாடலை என்னால் மிகச்சரியாகச்சொல்ல முடியும்.  'கண்ணன் வந்து பாடுகின்றான்' என ஜானகி பாடிய பாடல் 'ரெட்டை வால் குருவி'யில். 


பின்னில் சாக்ஸஃபோன் இசைக்க மைக்கை பிடித்தபடியே ஆடுவார் ராதிகா. இன்னுமொரு பாடல் 'இது ஒரு கனாக்காலம்' டிக் டிக் டிக் படத்தில். பெரும்பாலும் தாளத்திற்கென ட்ரம்ஸின் அந்த சிம்பல்ஸ்'களில் இசைத்ததையே காணலாம். பெரும்பாலும் மேடைப்பாடல்களாகவே ராசைய்யாவிடம் ஜாஸ் ஒலிக்கும். 'மன்றம் வந்த தென்றலையும்' கூட ஜாஸில் சேர்த்துக் கொள்ளலாம். அதற்காக மென்மையான பாடல்களெல்லாம் ஜாஸ் இல்லை.

ரஹ்மான் என்றும் இன்ன இசை என அறியவிடாது தமது ஸ்டைலில் ரஹ்மானியாவாக கொடுப்பதில் வல்லவர். படையப்பாவில் விசிலடித்துக்கொண்டே மனோ பாடும் 'ஓஓஓ கிக்கு ஏறுதே' அந்தப்பாடல் ஜாஸை ஒட்டியது. நிறைய ஹிந்துஸ்தானி பாணியில் இசைத்தே பழகியவர். இப்போது கூட 'கடல்' திரைப்படத்தில் 'சித் ஸ்ரீராம்' பாடிய அந்த 'அடியே' பாடல் நல்ல ஜாஸ். இல்லையெனச் சொல்லுபவர்கள் என்னுடன் சண்டை பிடிக்க வரலாம். ஜாஸுக்குண்டான அத்தனை சாத்தியக்கூறுகளும் அதில் உண்டு. பியானொவின் சிணுங்கல்கள், சிம்பல்ஸின் சிதறல்கள் என எல்லாம் சிறப்பு. ஜாஸின் இலக்கணம் மாறாது இசைத்த பாடல். மணி ஒத்துக்கொண்டார் போலருக்கு, அந்தப்படமே ஒரு மாதிரி தான் இருக்கும்.ஹிஹி.

கென்னி ஜி கேட்காதவர் இருக்கவியலாது. எல்லாப் பாடல்களையும் ஜாஸின் ஸ்டைலில் கொண்டு வந்து விடுவார். அதான் டெம்ப்போவைக் குறைத்து இன்னும் பாடலாம் மெதுவாக என்று தோணும் போது ஜாஸாக மாறிவிட வாய்ப்புண்டு. எம்எஸ்'ஐயா இசைக்காததில்லை. 'என்னைத்தெரியுமா சிரித்துப்பழகி கருத்தைக்கவரும் ரசிகன் என்னைத் தெரியுமா'ன்னு ஜாஸில் பிடித்துக்காட்டுவார். பாடலின் கடையிசையைக் கேளுங்கள் புரியும்.ட்விஸ்ட் ஆடலுக்கான பாடல்களுக்கும் ஜாஸ் ஒத்துவரும். 'கண் போன போக்கிலே கால் போகலாமா' நல்ல எகா.

இப்ப எதுக்கு ஜாஸ் புராணம்னா...ஒண்ணும் இல்லை. இப்போ எல்லாருமா சேர்ந்து வாரிக் கொண்டிருக்கும் (நானுந்தான்) சந்தோஷ் நாராயண் கூட ஜாஸில் ஒரு பாடல் போட்டு இருக்கிறார். 'காதலும் கடந்து போகும்' படத்தில் 'அக்கம் பக்கம் பார்' பாடல் பக்கா ஜாஸ். ஹ்ம்.. இத்தனை மெதுவாக அத்தனை அழகாக இலக்கணம் மாறாது இசைத்தது. இங்கும் மனோதான் பாடியிருக்கிறார். போரடிக்க வைக்கும் தாளக்கட்டு. பாடல் முழுமைக்கும் கூடவே பாடும் பியானோ. சொற்களெல்லாம் தனித்தனியே தொங்கிக்கொண்டு இருக்கும். இணைத்துக்கொண்டு வருவது சங்கிலி போல அந்தப்பியானோதான். இந்தப்பாணி பலருக்கு சொய்வு அடிக்கச் செய்துவிடும். ( நெருப்புடான்னு ராக்/ஹிப் ஹாப்' ல பிளந்து கட்டியவர்தான் இப்படியும் பாடல் போட்டிருக்கிறார் ) இந்தப்பாடலை அத்தனை சிரத்தையாக நான் கவனிக்கவேயில்ல, அன்று ஒரு நாள் இசையருவியில் ஓடிக்கொண்டிருந்தது. கொஞ்சம் கூர்ந்து கவனிக்க நினைத்தபோது தான் புரிந்தது. அவரின் அத்தனை பாடல்களுமே அப்படி சிரத்தை எடுத்துக் கவனித்தால் தான் புரியும். ஹ்ம்.. என்ன பண்றது. 0:55 ல் ஆரம்பிக்கும் ரூரூஊரூஊ.'வுடன் கூடப்பாடும் அந்தப்பியானோ 01:13ல் உங்களுக்கு பாப் அக்ரி'யை ஞாபகப்படுத்தினால் நான் பொறுப்பில்லை. ஹிஹி.. இடையிடையே வசனம் வரும்போது அதை இடர்ப்படாமல் இசைக்கும் பியானோவைக் கண்ணுல ஒத்திக்கலாம் சநா.

போத்தல் நுரைக்கும் சோமபானச்சாலைகளில் இந்த மாதிரியான பாடல்களுக்கு தான் கிராக்கி.ஏற்கனவே மூழ்கிக்கிடக்கும் வாற்கோதுமைக்கள்ளர்களுக்கு உறக்கம் வரவழைக்க பொருத்தமான இசை. இவ்வளவு பேர் ஜாஸில் பிளந்துகட்டியிருக்கும்போது தம்பி அநிருத் இதுவரை அந்தப்பக்கமே போகவில்லை. ஹ்ம்.. எதுக்கு போகணும். அதுதான் கிழபோல்ட்டுகளின் இசையாச்சே.. ஹிஹி.. #அக்கம்பக்கம்பார்


https://youtu.be/iy3j9Hg-QAM - அக்கம் பக்கம் பார் (ககபோ)
https://youtu.be/I6PHgtdxFrY - bob acri (sleep away)
https://youtu.be/rwEt-PTrbmI - கண்ணன் வந்து பாடுகின்றான் (ரெவா குருவி)
https://youtu.be/X-Ilp8QNNfQ - அடியே ( கடல் )
https://youtu.be/ZlhaOQSgD_M - என்னைத்தெரியுமா (குடியிருந்தகோயில்)



Monday, October 31, 2016

காஷ்மோரா - டார்க் ஃபேன்டஸி


காஷ்மோரா ஆஹா...என்னா படம்டா. பிரமாதம் பிரமாதம். கார்த்தி'கிட்ட நிறைய வெரைட்டீஸ் இருக்கு. சூர்யாவ விட கார்த்தி தான் சேலஞ்சிங் கேரக்டர்ஸ் பண்ணக்கூடிய ஆள். அந்த ராஜநாயக் பார்ட் அசத்திட்டேள் போங்கோ.உடல்மொழி அருமை. குரல் தான் கொஞ்சம் மாற்றி பேசிருக்கலாம். இருந்தாலும் பரவாயில்லை! காமெடி பார்ட் அவர் ஏற்கனவே செய்தது தான் ஒன்றும் புதிதில்லை.பக்காவா ப்ளான் பண்ணி பேய்,பிசாசு எல்லாம் செட்டப் பண்ணீன்னு கலக்குறார். நிறைய இடங்கள்ல அந்த தலைல சுத்தி துணி கட்டிக்கிட்டு கண்ணில கருவளையம் வெச்சிக்கினு வரும்போது இயக்குநர் பாஇரஞ்சித் மாதிரியே இருக்கார். எனக்கு மட்டும் தான் தோணுதா இல்லை எல்லாருக்கும் தானா ?.




ஹிஸ்டாரிக்கல் பார்ட்டுக்கு டீம் நிறைய வேலை பார்த்துருப்பாங்க போலருக்கு, உழைப்பு அபாரம். ஏதோ ஃபேன்டஸி படம் மாதிரி இல்லாம ஒவ்வொரு காட்சியும் இழைக்கப்பட்டிருக்கிறது. அலீஸ் இன் வொன்டர்லேன்ட் மாதிரி இருக்கும்னு நினைத்து ஏமாந்தேன். வியூகம்,அரண்மனை,போர்க்காட்சிகள் எல்லாம் அபாரம்.எதுவும் எங்கும் அட்டை போல பல்லிளிக்கவேயில்லை. தேர்ந்துட்டானுடே.

ஹிஸ்டரிக்கல் பார்ட்ல கேரக்டரைசேஷன்லாம் கரீபியன் பைரேட்ஸ் போல தலையற்ற உடல்கள், அவ்வளவு பெரிய சான்டிலியர்ஸ்னு பிரம்மாண்டம். இப்பல்லாம் இந்த சிஜி பண்றது ஈஸி போலருக்கு, பொசுக்கு பொசுக்குன்னு பீரியட் படம் எடுத்து விட்டுர்றானுவ.ஹிஹி. ரத்னமகாதேவிய பக்கத்து நாட்டின் இளவரசன் குதிரையில் தூக்கிச்செல்லும் காட்சிகள், அதைத்தொடரும் சண்டைக்காட்சிகள் , வசனம் எல்லாமே அருமை. ஹ்ம்.. பாஜிராவ் மஸ்தானி ..ஹிஹி..ஞாபகம் வருது. விவேக் ரொம்ப நாட்களுக்கு பிறகு நிறைவான வயதுக்கேற்ற வேடம். அந்த பாட்டி இன்னாமா ஆக்ட் குடுக்குதுங்ணா. ரிமொட் கன்ரொல் வெச்சிக்கினு நாய்ச்சங்கிலிய சுத்தவிடுது.


சந்தோஷ்க்கு செம தீனி, அவர் ஏற்கனவே வில்லா' படத்துல ட்ரை பண்ணினது தான். அது கொஞ்சம் லோ பட்ஜெட் ,இங்க அளவுக்கு அதிகமாவே பட்ஜெட். இருந்தாலும் அதுல ஒரு பியானொ தீம் ம்யூஸிக் பண்ணீருப்பார்.அரண்டு போயிருவோம் இங்கயும் அதே மாதிரி அரண்மனை தான் ஆனாலும் இங்க தீம் ம்யூஸிக்னு ஒண்ணும் இல்லை. இருப்பினும் அடிச்சு மெரட்டுறார். கார்த்தி பாடும் முதல் பாதியில் வரும் பாடல்  திக்கு திக்கு சார் பாடல் , நிக்கி மினாஜ் ( ஹிஹி...அவாளேதான் ) இன்ன பிற ஹிப் ஹாப் தோழர்கள் கூட பாடிய இந்தப்பாடல் தான்.. David Guetta - Hey Mama ft Nicki Minaj, Bebe Rexha & Afrojack பாடல் காட்சி அமைப்புகள், ஆடல் பாடல், மற்றும் லொகேஷன் எல்லாம்.அதேதான். பாருங்களேன். ஆனாலும் சந்தோஷோட ட்யூன் மட்டும் வேற நல்ல வேள.."லெட்சம் பெரியார் வந்தாலும்" ஹிஹி.. ஆனாலும் ஒரு பாட்டும் வெளங்கல. கொஞ்சம் க்ளாஸிக்கலா ட்ரை செய்த நயன்தாராவின் பாடல் மட்டும் கேட்கலாம் ரகம்.


.

Wednesday, October 26, 2016

ஆக்டோபஸும் நீர்ப்பூவும்




இன்று எழுத்தாளர்/முனைவர் தமிழவனை அவர்தம் பெங்களூர் பன்ஷங்கரி இல்லத்தில் சந்திக்க வாய்த்தது.நிறைய மனம்
திறந்து பேசிக் கொண்டிருந்தார். ஸ்ரீனியும் , நல்லதம்பியும் கூட இருந்தனர், பழங்கால சிசுசெல்லப்பா,கநாசு, மற்றும் இன்னபிற நாஸ்டால்ஜியாக்களைப்பற்றிய அவர்தம் எண்ணங்கள் எங்களுக்கு அரிய செய்தியாய் இருந்தது. ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்ட நீச்சல் குளத்தைப்பற்றி (ஆம் நீச்சல் குளம் என்றுதான் கூறினார்..முகநூலில் அனைவரும் ‘கிணற்றில் அல்லவா’ குதித்தார் என கூச்சலிட்டனர்.) வருத்தத்துடன் கூறிக்கொண்டு இருந்தார். சிசுசெல்லப்பா 'சுவை' என்ற பெயரில் ஒரு தனிச்சுற்று இதழ் நடத்தி வந்ததைப்பற்றி கூறினார், எல்லோருக்கும் தெரிந்தது 'எழுத்து' மட்டுமே. பின்னர் தமது முயற்சியில் வெளிவந்த 'படிகள்' இதழ்களைத் தொகுத்து இக்கால சந்ததியினருக்கு கொடுக்க வேண்டிக்கொண்டார். என்னைப்பற்றி விசாரித்தவர் “சின்னப்பயல் ..ஹ்ம். தெரியுமே என்றவர் 'சிற்றேடு' இதழில் எழுதுமாறு பணித்தார். எழுத வேணும்.!

 
நிறையப்பேசுகிறார், இன்னதானென்றில்லை, நாம் எடுத்துக்கொடுக்க வேணும் என்ற உந்துதலின்றி அவர்தம் போக்கில் பேசிக்கொண்டே இருக்கிறார். முதுமை வருத்தினும் பேச்சு குறையவில்லை. கநாசு பாரதிதாசனை சட்டை போலும் செய்ததில்லை, எப்போதும் சிசுசெல்லப்பாவையே கொண்டாடினார். ஆத்மாநாம் பற்றி பேசுகையில் அவர் குரல் கம்மியது, பையன் போல வருவார் , நிறைய கவிதைகள் பற்றி பேசிக்கொண்டிருப்பார். வரும்/போகும் வழியில் இருந்த நீச்சல் குளத்தை பார்த்து வைத்துக்கொண்டு ஒரு நாள் முன்னிரவில் குதித்து தற்கொலை செய்துகொண்டார் என்றார். மறுநாள் டெக்கான் ஹெரால்டில் அவர் மரணச்செய்தி சின்ன பெட்டி செய்தி போல வெளியிடப்பட்டது.

சிசுசெல்லப்பா’வின் எழுத்துகளை வைத்து ஒரு பெண் சென்னையில் முனைவர் பட்டத்துக்கான ஆய்வு செய்ததையும் , அவரிடம் இருந்து கிடைத்த சில ‘சுவை’ இதழ்களை எங்களுக்கு பார்க்க கொடுத்தார். பட்டம் பெற்றதும் அந்தப்பெண் பின்னர் தொடர்பிலில்லை ,அதோடு அவரின் வருகையும் நின்றுபோனதை ஞாபகப்படுத்தி கூறினார்.

கர்நாடகத்தில் மொழி வளர்ப்பிற்கென நிதி ஒதுக்குவதாகவும் , அதை நிர்வகிக்க செயலர்கள் மாவட்டம் தோறும் தெரிவு செய்யப்படுவதும் தொடர் நிகழ்வு. அதில் எந்த அரசியல் கட்சிகளும் இடர்ப்பாடு செய்வதில்லை, எக்கட்சி ஆட்சியிலிருப்பினும் இந்த நிதி ஒதுக்குதல்/குழு அமைத்து மொழி வளர்த்தல் தொடர்கிறது. இப்படி ஒரு அமைப்பு தமிழ்நாட்டில் வருவதற்கு வாய்ப்பே இல்லை. 60களுக்குப்பிறகு மொழி வளர்ப்பு என்பது வேறுபக்கம் இழுத்துப்போகப்பட்டது இன்னமும் அதை மீண்டும் பாதையில் கொணர இயலவில்லை என்பதை நினைத்து வருந்துகிறார்.




கேரளாவில் தாம் தமிழ் எம்.ஏ படித்துக்கொண்டிருந்தபோது, நம்பூதிரிபாடு ( அப்போதைய முதலமைச்சர் ) சைக்கிளில் செல்வதையும், அதை/அவரை யாரும் பெரிதுபடுத்துவதேயில்லை என்பதை அதே ஆச்சரியத்துடன் கூறினார். கம்ப்யூட்டர்கள் பணிகளில் பயன்படுத்துவதை எதிர்த்து எப்போதும் கூச்சல்/ ராலிகள் போராட்டங்கள் நடந்ததை நினைவு கூர்ந்தார்.

சுஜாதா’வைப்பற்றி பேசுகையில் நல்ல திறமைசாலி, இன்னமும் இலக்கியம் சார்ந்த படைப்புகள் அவரிடமிருந்து வந்திருக்கலாம். இந்த ‘குமுதம்’ தான் அவரை வேறு பாதைக்கு அழைத்துச்சென்றது. வணிக நோக்கில் அவரை எழுத வைத்து வருமானம் தேடிக்கொண்டது. அவர் முன்னர் இந்தப்பாதைக்கு வருமுன்னர் எழுதிய கதை ஒன்றை ( பெயர் மறந்து விட்டது ) ‘நைலான் கயிறு’ என்ற பெயரில் புதினமாக எழுதினார் அதில் அந்தப்பழைய கதையின் முக்கிய வரிகளை ஆங்காங்கே உறுத்தாமல் புகுத்தியிருந்தார். பலமுறை கமலஹாசன் வந்து செல்வதையும் குறிப்பிட்டார். அவரைச்சந்திக்க ஒரு முறை சென்ற போது ‘இப்போ தான் கமல்’ வந்து விட்டு சென்றார் என்று சுஜாதா கூறியதைப் புன்முறுவலுடன் பகிர்ந்துகொண்டார். ‘பெல்’ லில் வேலை செய்தபோது அவரின் பையன் ஒரு ஜப்பானியப் பெண்ணை மணம் புரிந்துகொண்டதை வெகுவாக வெறுத்ததாகவும், ஒத்துக்கொள்ளவேயில்லை என்பதை தமக்குள் சிரித்துக்கொண்டே பேசினார். மதம்/ஜாதி இவற்றை கடைசி வரை விட்டுக் கொடுத்ததேயில்லை அவர் என்பதைக்கூறினார்.

இடையில் இரண்டு மூன்று முறை தொலைபேசியில் அழைப்பு வந்து தொந்தரவு செய்தபோதிலும் எங்களுடன் பேசுவதிலேயே மும்முரமாயிருந்தார். கையில் எடுத்து அதை அணைத்துவிட்டு பின் பேச்சை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். ஸ்ரீனி சிலபோது அவர் தானாகவே பேச்சை நிறுத்திவிடுவார். பின்னர் நாமாக கிளம்பி வந்துவிட வேண்டியது தான் என்றெல்லாம் பயமுறுத்தி இருந்தார் என்னை. நல்லவேளை அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. நாங்கள் பேசியது மூன்றுபேருமாகச்சேர்ந்து பத்து வரிகள் தான் இருக்கும். அவரோ மடை திறந்ததுபோல் பொழிந்து கொண்டிருந்தார்.



காவிரிப்பிரச்னை குறித்த எனது சந்தேகங்களுக்கு அவரிடம் எவ்வித நேரடி பதிலும் வரவில்லை. யூஆர் அனந்தமூர்த்தி, இன்னொருவரின் பெயரையும் குறிப்பிட்டார். அவர்களெல்லாம் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டபோதும் தமிழ் கவிதைகள்/எழுத்துகள் மீது ஆர்வமாக இருந்தனர். என்ன புதியவை வந்திருக்கின்றன என்பதை ஆவலுடன் எதிர்நோக்கினர். தாக்குதல்கள் நடந்ததை பலமுறை (முன்பு , வெகு காலம் முன்பு ..இப்போதல்ல ) கண்டித்திருப்பதை குறிப்பிட்டார். எப்படி ஒட்டுமொத்த கர்னாடகாவும் இப்போது இப்படி வெறிச்செயலுக்கு போனதைப்பற்றி அவருக்கு ஏதும் புரிதல் இல்லை.

முதுமை, யாரேனும் தம்முடன் உரையாட மாட்டார்களா என்ற ஆதங்கம் அவர்தம் முகத்தில் தெரிகிறது.இன்னமும் சந்திப்போம். இரண்டாம் ஞாயிறு கூட்டங்கள் குறித்து ஆவலாய்க்கேட்டறிந்தார். அவர் பகிர்ந்துகொண்ட பழைய தனிச்சுற்றுக்கான இதழ்களில் சிலவற்றைப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன்.. அவை சில இங்கே. அந்த தமிழ்த்தாய் வணக்கம் 'சுஜாதாவால் சிலாகிக்கப்பட்டது என்ற கொசுறு செய்தியையும் அவர் கூறத்தவறவில்லை..!




.

Thursday, October 13, 2016

சினிமா விமர்சனம்


சினிமா விமர்சனம் எழுதறதுக்கு எல்லோரும் ரெடி. ஆனா புதுசா வந்த ஒரு கவிதை புத்தகத்தையோ இல்லை புதினத்தையோ பற்றி யாரும் எழுதுவதேயில்லையே என்று இளங்கோ எழுதியிருக்கிறார் வருத்தத்தோடு. இதுல ஒரு பெரிய விஷயமே இருக்கு, கவிதைப்புத்தகத்துக்கு விமர்சனம் எழுதுறதுன்னா அவங்க என்ன சொல்ல வர்றாங்கன்னு மொதல்ல புரியணும். எல்லாக்கவிதைகளும் விளங்குவதேயில்லை. பூடகம் தான் அதிகம். சொல்லவந்ததை விளக்கிச்சொல்லாது வேறு மொழியில் எழுதுவது..அதை நான் விளக்குறேன் பேர்வழின்னு போயி வாங்கிக்கட்டிக்கிர்றத விட சும்மா இருக்குறது பெட்டர். இதுல ஒரு பெரிய விவாதமே தொடங்க வாய்ப்புமிருக்கு. விமர்சனம் பண்றேன்னு கெளம்பி இருக்கிற எல்லாரையும் ஒரு வழி பண்ணின ‘தீர்த்தமுனி’ய கொன்னே போட்டானுஹ..ஹிஹி.. இப்பத்திக்கு யாரும் அவ்வளவு காரசாரமா விமர்சனம் பண்றதுக்கு ஆளே இல்லைன்னு தான் சொல்வேன். சும்மா ஒப்புக்காச்சும் இந்த வரி பிரமாதம், இது போன்ற உயரம் யாருமே தொடலை ,வானமே அண்ணாந்து பாக்குதூன்னெல்லாம் எழுத வேண்டிவரும்.

இந்தக்கருமத்துக்கு என்னாத்துக்கு குடிக்கொணூம்னு ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூன்னு சினிமாவப் பத்தி எழுதிரலாம். பொறந்ததே சினிமாக் கொட்டயில தானே அதனால எல்லாப்பயலுக்கும் சுளுவா எழுத முடியுது. அதோட எந்த டைரடக்கரும் சண்டைக்கில்லாம் வரமாட்டாங்க்ய..அவாளே டிவீடி பாக்க நேரமில்லாம அலயிறாங்க. முக்கியமா இன்னொண்ணு சினிமா மேரி டொரண்ட்,லைவ் ஸ்ட்ரீமிங்க், இந்த மேரி ஓசிச்சமாச்சாரமெல்லாம் புதின/கவிதை புத்தகங்களுக்கு கிடைப்பதில்லை. காசு குடுத்து வேங்கி அதப்படிச்சி, அப்பால வெமர்சன்ம்னு எழுதி,மேலே திட்டும் வேங்கணும்னு...என்னாத்துக்கு இந்த கெரகம் புடிச்ச வேலைல்லாம்னு தான் எழுதறதேயில்லை. அப்பால அந்த எழுத்தாளரே நம்மள ப்ளாக் பண்ணி ஆயுள் முழுக்க அவா மேக்கொண்டு என்ன எழுதறான்னு பாக்க வெடாம பண்றதுங்கற கருமமெல்லாம் வேற இருக்குதுங்க்ணா..அதான் ஒரு டொரண்ட் போட்டமா/ இல்ல லைவ் ஸ்ட்ரிமிங்க்ல பாத்தோமான்னு சோலிய முடீக்கிறத விட்டுட்டு நீங்க வேற #விமர்சனம்


Friday, October 7, 2016

தக்கதிமி தக்கஜுனு தக்கதிமி தக்கஜுனு




இது என்ன பாட்றா இது..செம.. சுந்தர் சி பாபு, ‘வாளை மீனு'க்கப்புறம் காணாமயே போய்ட்டார். புடிச்சி இஸுத்துக்கொணாந்துருக்கானுஹ இங்க..மச்சி அட்டி தாம்லே.. மாகபா கையைக்கையத்தட்டி 'இது அது எது'ன்னு இங்க வர வண்ட்டான். தகராறு/சண்டைங்கற மாதிரி வரிகள் வரும்போது மட்டும் 'சே குவாரா' பனியனப்போட்டுக்கினு ஆட்றான். சமீபகாலமா கேட்ட ராப்/ஹிப்ஹாபாப்ல இதாண்டா ஒரிஜினல். அழுத்தமான கர்நாடக சங்கீத அக்ரஹாரத்து ராகம் ஒண்ணு இருக்கு இதுல ( கொஞ்சம் பொறுங்க, இன்னான்னி கண்டுபிடிச்சுட்டு பின்னாலே சொல்றேண்டா அம்பி ) தேவாவின் கானா பாடல்கள் ஒரு காலம். இது கொஞ்சம் அட்வான்ஸ்டு வெர்ஷன். ( அவை முழுக்க சிந்துபைரவி ராகத்துல அமைந்தவை)

ஆமா கூட ஆட்றது மிஷ்கின் ஸ்டைல் மஞ்சச்சேலை நம்ம 'சிவா மனசுல சக்தி' அனூயா தானே...ஆஹா ரொம்ப நாளாச்சிபா பார்த்து ..ஆனாலும் இங்க முழுக்க சேலைய சுத்திகினு அவ்ளவ் சுத்தபத்தமா ஹிஹி ரம்பாவோட அஸெட்ஸ்க்கு அப்புறம் அம்மையாரொடது தான். ஆட்ற எல்லாரும் திருவிழா பச்ச மஞ்ச செவப்பு கண்ணாடில்லாம் போட்டுகினு ஸோக்காகீது மச்சி. ‘பழகீட்டா உயிரக்கொடுப்போம்டா மாட்டுவண்டீ கீழதான் படுப்போம்டா' ஆஹா என்ன வரிடா மச்சி..புல்லரிக்கிது.
.
ட்ரேக் (Drake ) இங்கிலீஷ்ல எடுத்து விட்டான் ஒரு ஹிப் ஹாப். you used to call me on a cell phone’ ன்னு ஒரு பாட்டு.டெக்னிக்கலான தாளமும், ஆட்டமும் கொள்ளை போகும் , அதே போல ( அதுவே இல்லை..ஹ்ம்.ச்சை ) தெளிவான வரிகளும் , ஆட்டமும் , நம்ம குப்பத்துல ஆடசொல்லீ காட்டீருக்கானுங்க. இதோட ஓரு நூறுதபா பாத்துட்டேண்ணா.. நீங்களும் கேளுங்களேன், தக்கதிமி தக்கஜுனு தக்கதிமி தக்கஜுனு #அட்டீ


.

Friday, September 23, 2016

ஆயர் தம் மாயா நீ வா...




எப்பவும் சாயங்காலம் நேரம் கிடைத்தால் SVBC TTD சேனலில் ஆறு மணிக்கு வரும் கலை நிகழ்ச்சிகளை பார்ப்பது வழக்கம். பாடல், ஆடல், இசைக்கச்சேரிகள் என முழங்கும். இன்று கதக் நடனம் பாம்பேயிலிருந்து ஒரு குழு ஆடினர். வடநாட்டு இசை,நடனங்கள் அத்தனை ஈர்ப்பதில்லை எனை. எதோ கமல் 'விஸ்வரூம்' எடுத்து கதக் ஆடினாரேன்னு இன்னிக்கு பார்க்கலாம்னு உட்கார்ந்தேன்
 
குழுவாகவும் , பின்னர் தனியாகவும் நடனப்பெண்மணிகள் மேடையை ஆக்ரமித்து நடனமாடினர். எனக்கு இந்த பரத நாட்டியம் பார்த்தே வழக்கம். கர்நாடக இசைக்கச்சேரிகள் போல. வடக்கத்தியரின் ஹிந்துஸ்தானியோ இல்லை பிருக்காக்களோ என்னை ஈர்ப்பதில்லை. இவங்க ஆட்றாங்க என்பதே எனக்கு பெருத்த சந்தேகமாகவே இருந்தது ஒன்றரை மணிநேரமும், ஏன்னா இப்போ எப்டி ஆடணும்னு காமிக்கிறேன் பாருங்க என்பது போலவே முழுக்க ஆடினார்கள். உடல் முழுக்க அசைந்து, அடவு பிடித்து, வருத்தி என ஆடிய நடனங்களையே பார்த்து பழகிய எனக்கு யாரோ முன்னில் இருப்பவர்களுக்கு எப்படி ஆடவேணும் என்று சொல்லிக்கொடுப்பது போலவே தான் இருந்ததே ஒழிய கைகால்களை வீசி ஆடி நான் பார்க்கவேயில்லை
 
இடையிடையே நின்ற இடத்திலேயேயிருந்து சுற்றி சுற்றி ஆடினர். சுத்தி சுத்தி வந்தீஹங்கற மாதிரி. ஆனாலும் ஒரு போதும் விழவில்லை. சும்மா இருமுறை சுற்றினால் நமக்கு தலை சுற்றி தட்டுத்தடுமாறி அருகிலிருக்கும் எதையோ பிடிக்க தோணும், அப்படி ஏதும் நிகழவில்லை இங்கு, நல்ல பேலன்ஸுடன் ஆடுகின்றனர். நின்ற இடத்தில் நின்றே சுற்றி சுற்றி அத்தனை முறை சுற்றினாலும் அலுக்கவேயில்லை, அசரவேயில்லை அவர்கள். உள்ளங்கைகள் இரண்டையும் ஒன்றோடொன்று பிடித்துக்கொண்டு சின்னப்பிள்ளைகளை ஏமாற்றுவது போல சுற்றி வருகின்றனர். நடனப்பெண்மணிகள் நின்று இரண்டு நிமிடம் கழித்து அவர்களின் பாவாடைகள் நிற்கின்றன. பெரும்பாலும் சூஃபி நடனங்களில் இது போன்ற சுற்றல்கள் உண்டு, எங்கெங்கொ பார்த்தது.

இடத்தை விட்டு நகராமல் சுற்றுவதைத்தவிர வேறேந்த உருவகப்படுத்தலையும் என்னால் கவனிக்க இயலவில்லை. ஆமா இதில் என்ன நடன அசைவுகள் இருக்கின்றன ? நளினம் , அடவுகள் இதெல்லாம் எங்கே ? கால்களுக்கு என ஒரு ஒலிவாங்கி மேடையில் வைக்கப்பட்டிருக்கிறது. கால்களில் கட்டியிருக்கும் சலங்கைகள் ஒலியை பெருக்கி கொடுக்க. கொஞ்சமே பாவாடையை உயர்த்திக் கொண்டு , பாலே நடன அழகிகள் போல ஒற்றை கால் பெருவிரலில் நின்றூகொண்டே நீந்திச்செல்லும் அன்னம் போலின்றி, பாதங்களை முன்னும் பின்னும் நகர்த்தி (இங்கு தான் சொஞ்சம் வேகம் பார்த்தேன்.) ஆடினார் கொஞ்சம் சீனியர் நடனமங்கை.

ஒரு விஷயம் சொல்லியே ஆகணும். ஆடிய யாருக்கும் நடனமங்கைகளுக்கான உடற்கட்டே இல்லை. ஒரு வேளை இந்தக்குழுவில் இல்லையோ ? ஏனென்றால் , உடலை முறுக்கி, கைகால்களை வீசி ஒரு உடற்பயிற்சி செய்யும் இளைஞர்கள் போன்ற ஆடல் இங்கு இல்லவே இல்லை. அதனால் அவர்கள் உடல் நடனமங்கைக்கானதாக இல்லையோ என்னவோ ? அதுக்காக சைஸ் ஸீரோ எல்லாம் எதிர்பார்க்கவில்லை. மேலும் அத்தனை எனர்ஜி ஆட்டம் முழுக்க சேமிக்கப்படுவதால் அவர்களால் விழாமல் சுற்றமுடிகிறது போல…!

.