Sunday, July 28, 2024

ரத்தக்களரி ராயா.

 


கேங்க்ஸ்ட்டர்ஸ் படம்னாலே அது டரண்டினோ தான் எனக்கு. அப்பால யாரும் அவ்வளவு குரூரமா வன்முறையைக் காண்பித்தல் அதிலயும் அந்தந்தக் காட்சி/கதைகளுக்கு தகுந்தவாறு கச்சிதமாக பொருந்தும். இவ்வளவு ரத்தக்களரி ஏன்னு ஒருமுறைகூட கேட்க வாய்க்காது. அதுதான் க்விண்டின். லோகேஷ் கனகராஜ்/கார்த்திக் சுப்ராஜ் படங்களில் வன்முறையில் ரத்தக்களரி தெறிக்காது ஆனாலும் அடிக்கருத்து அது தான். வெற்றி மாறன் படங்களில் அது ரொம்ப ஸென்ஸிபிளாக தொடப் பட்டிருக்கும். ராம் கோபால் வர்மா படங்கள் தான் முழுக்க முழுக்க ரத்தக்களரியில் குரூரம் தாங்கி வெளிவந்தவை. விட்டா சீட்ல ஒக்காந்திருக்க நம்ம மேலயும் குருதி தெறிச்சாலும் தெறிச்சுடும்.அந்த வர்மா’வின் வரிசைல தான் இந்த ராயனை வைக்கவியலும்.
 
தங்கச்சிய காப்பாத்துறதுக்காக எத்தனை தூரம் வேணாலும் போவார் தனுஷ். அதானே?!. குடும்பத்த காப்பாத்துறதுக்காக எத்தற தூரம் வேணெங்கிலும் ஞான் போகும்னு பறயும் ஜோர்ஜ் குட்டி (த்ரிஷ்யம்) மாதிரி தான் இதுவும். நிறையக்குறைகள் இருக்கு. இருப்பினும் படத்தோடு ஒட்ட முடிகிறது. பழிக்குப்பழி, பலிக்குப்பலி அதான்.
 
குடும்பமே குண்டாஸா இருக்கமாதிரி எடுத்த மொதப்படம் இதாண்டா. தங்கச்சி கூட லேடீ குண்டாஸு. ! ஹிஹி. ஒரு சொடுக்கில் switching sides-ங்கறது கேங்ஸ்ட்டர்ஸ் படத்துல இருக்கிற சமாச்சாரம் தானே.. இருந்தாலும் வலுவான காரணம், ஆடியன்ஸை சமாதானப்படுத்தும் விதமா சொல்லாம சொதப்பினது தான் நம்ப ஏலவில்லை. தம்பிகளே ராயனுக்கு எதிரா போறாங்கன்னு காட்டினது தான் சோகம். தெண்டச் சோறுன்னு திட்டினா உடனே கத்தி எடுத்து வீசிறுவாராமா ?...அட ராமா...இல்ல அட ராயா... ஹிஹி..
🙂
 
ரெண்டு ஸ்டண்ட் சம்மதிக்கணும். அந்த துரை அண்ணனப்போட்றது, சுற்றுக்கட்டு தாழ்வார வீட்டில குதிச்சு எந்திரிச்சு க்ரில் தலைல தட்றா மேரி தாவி அடிச்சு தொம்சம் பண்ற சண்டை பிரமாதம்டா. அப்புறம், ராயன ஆஸுபத்திரில கிடத்தி வெச்சிருக்கப்ப நடக்கிற சண்ட. அடேயப்பா. லேடி கேங்ஸ்ட்டர் துஷாரா விஜயன். உள்ளேன் ஐயா. சரி அதேல்லாம் இருக்கட்டும். துஷாரா வெட்ட வெளில ஒரு மரத்தை வெட்டோ வெட்டுன்னு வெட்றார். பயிற்சி எடுக்கிறாராமாம்.. ஆனா அந்த மரம் முறிஞ்சு விழவே மாட்டேங்குதே.? அது மரமா இல்ல காங்க்ரீட் கல்லா... ஹிஹி. 
 
பின்னணி இசைக்கு ரஹ்மான் பாய் யாராவது அஜீஸ்ட்டெண்டு கிட்ட குடுத்துட்டாரா? ஒரே மேரி ம்யூஸீக். ஸிக். சூரசம்ஹாரம், ராம்லீலா மைதானங்கள்ல அடித்து ஒலிக்கப்படும் இசை. ம்ஹூம்.. எடுபடவே இல்லை. ஐநாக்ஸ்ல 7.1 சவுண்டு லவுடு (ஹிஹி) ஸ்பீக்கர்லாம் வெச்சித்தான் இருக்கான். சொம்மா அதிர வேணாமா ?...பின்னால காளி படம், ராவணன் படம் எல்லாம் வரைச்சு வரைச்சு வேற வெச்சு ரோதனை பண்றாங்ய. கொஞ்சம் உழைச்சு தீம் ம்யூஸீக்கெல்லாம் வெச்சு பட்டயக் கெளப்ப வேணாமா பாய்...ஓ புவர் பாய்! இருக்கத தான குடுப்பாரு.. என்னா தான் செய்வார் பாவம். ராசைய்யா இது மேரி அடிதடி/குருதிக்களறி படங்களுக்கு இசைப்பதில்லைன்னு முடிவெடுத்து ஒதுங்கீட்டுண்டார். பாயும் அதயே ஃபாலோ பண்ணலாம்.
 
சரி துரை அண்ணன நீ தானே போட்ட ? எப்டி ஒத்த ஆளா போட்ட அவன ? என்று விடாமல் கேட்கும் எஸ்ஜேசூர்யா. வந்தான் சுட்டான் செத்தான் சார்ங்கற மேரியே வசனம் பேசுனா ஒரே மேரி ஆக்ட்டிங் குடுத்தா, ரீப்பீட்டு. போர். இளவயது செல்வராகவன் குழந்தை மாதிரி முகம். ஆஹா. அண்டர் ஆக்ட்டிங். பிரமாதம்ணெ. பிரகாஷ்ராஜ் என்ன பண்ணீருக்கார் அவர்கிட்டஏ கேப்போம்.
 
வன்முறை/ரத்தக்களரி ஜானர் ரசிகர்கட்கு மட்டும் ராயா... ஓ ராயா. !
 

Saturday, July 13, 2024

இந்தியன் - 2

 Indian 2 Movie Review and Release Live ...

இங்க பெங்களூரில் ‘நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு சித்ரகலா பரிஷத் வாளாகத்திலிருக்கும் ‘ காந்தி பவன்’ல ‘ராஜினி திரகமன’வின் ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டது , அவரின் தங்கை ராஜினியாக அபிநயித்திருந்தார் என ஞாபகம்.’மெஸ்ஸைய்யா வருவார், அவர் வந்து எல்லாத்தையும் காப்பாத்துவார்னு காத்துக்கொண்டு இருக்கிறார்கள் ஈழத்தவர்கள் என அந்த ஆவணப்பட முடிவில் பேசிய படத்தின் ஆக்கத்தில் பங்கேற்றிருந்த ஒருவர் இந்தக்கருத்தை தெரிவித்தார். 
 
அது மாதிரி இந்தியன் வருவார் எல்லாக் குற்றங்களையும் களைவார் என இல்லாது வீட்டில் நடக்கும் குற்றங்களைக் கண்டறிந்து தாமாகக் களைந்தாலே நாடு உருப்படும் என உரைக்கும்படி சொல்கிறது படம். இத்தனை ரியாலிட்டியை நம்மால் ஒருபோதும் தாங்கிக்கொள்ள இயலாது. பாய்ஸ் படத்துக்கும் இதே போன்றே வரவேற்பு கிடைத்தது.
 
சின்னப்பிள்ளையா இருக்கும்போது தப்பு செய்யாத, நேர்மை தவறக்கூடாது திருடாதேன்னு நீங்க தானே சொல்லிக்குடுத்தீங்க அப்பா ?வளர்ந்தப்புறம் இதெல்லாம் செஞ்சாத்தான் வாழ முடியும்னு சொல்றீங்க?, என்பவர் பின்னர் அம்மாவைப்பார்த்து நீ போட்ருக்கிற தங்கத்துல பாதி வேற ஒருத்தர் உழைப்பில வந்ததுன்னு சொல்லக் கேட்டதும் அந்த அம்மா குலுங்கி அழுகிறார். அவமானம் தாங்காமல் தன்னையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு கூனிக்குறுகிப்போகிறார். பின்னரும் சித்தார்த்தை அன்னையின் பிணத்தைப் பார்க்கக்கூட விடாமல் உறவினர் அனைவரும் பிடித்து தள்ளி , கொள்ளி போலும் வைக்க லாயக்கில்லாதவன் என களேபரம் செய்யவைக்கும் காட்சிகள். எனக்கு இந்த முழு சீரிஸ் காட்சிகளும் ‘நம்மவர்’ படத்தில் நாகேஷின் காட்சிகளை ஒத்திருந்தன. அத்தனையும் நெகிழ வைப்பவை.
 
ரஹ்மான் பாட்டை நான் ஐட்யூன்ஸ்ல டவுன்லோட் பண்ணிக்கிறேன், இப்டி திருடித்தான் என் கல்யாணத்துக்கு கச்சேரி வெக்கணும்னு அவசியமில்லை. உன் மகன் எழுதிக்குடுத்த மருந்த நீ வாங்கி சாப்டுவியா?, இல்ல உன் மகன் உனக்கு ஆப்பரேஷன் பண்றான்னா நீ ஒத்துக்குவியா ? எல்லாம் குத்தும் வசனங்கள் தான். யாரோ சுஜாதா இல்லைன்னு ரொம்ப வருத்தப்பட்டனர். அவரில்லாவிடினும் இன்னும் எழுத ஆட்கள் உண்டு சாரே.
 
தனக்குத்தனக்கு என வரும்போது மட்டும் தான் அத்தனை பேருக்கும் உரைக்கிறது. உன்னால எல்லோரும் என்னைய டெரெரிஸ்ட் ரேஞ்சுக்கு பேசுறாங்க,உன்னால தான் எல்லாம் போச்சுன்னு ஒவ்வொருவரும் கமலைப்பழிக்கும் காட்சிகள் அத்தனையும் ரியல். எல்லா சூப்பர் ஹீரோக்களுக்கும் வாய்க்கும் அதே பிரச்னை தான். எனினும் இங்கு அழுத்தம் அதிகம். எல்லாருக்கும் நல்லவனா யாராலும் இருக்க முடியாது எல்லா சமயத்திலும். அதான். ஸ்பைடர் மேன் , சூப்பர் மேன், இன்னும் எத்தனை எத்தனை மேன்கள் வந்த போதிலும் எத்தனை தான் நல்லது செய்த போதிலும் இதே போன்ற இழிப்பேச்சுக்களுக்கு ஆளாகத்தான் வேண்டும்.
 
பல காட்சிகளில் கமல் அற்புதமாக நடிக்கிறார். அள்ளிக்கொடுக்கிறார் உலகநாயகன். ஒரு குறையும் இல்லை. எனினும் முகத்தில் போட்டிருக்கும் அந்த செயற்கையான மேக்கப் எல்லா உணர்ச்சிகளையும் கிஞ்சித்தும் வெளித்தெரியாத படி மறைத்தே விடுகிறது. அடச்ச. சித்தார்த் ’என்னை டெரெரிஸ்ட் ரேஞ்சுக்கு பேசுறாங்க’ எனும் போது, உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகள் ஆஹா. என்ன சோகம் , வெறும் கண்களாலும், உடல் மொழியாலும் மட்டுமே அந்தக்காட்சிக்கு உயிர் கொடுக்கிறார் கமல். அதே இடத்தில் இயற்கையான முகம் மட்டும் இருந்திருந்தால் ...? மெல் கிப்ஸன் கண்களாலேயே பல உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார், எ.கா.வுக்கு Signs – Manoj Night Shyamalan படத்தில். இருப்பினும் இயல்பு முகம் இல்லையெனில் கண்கள் எத்தனைதான் காட்டினும் பயனிலை.
 
தேவையற்ற நீளமான சண்டைக்காட்சி எதுவெனில் , அந்த வின்செண்ட் கூல் ட்ரிங்ஸ் தயாரிக்குமிடத்தில் நடப்பதுதான். கிட்டத்தட்ட பாபி சிம்ஹா விரட்டிக் கொண்டு வந்த பரபரப்பான காட்சிகளை, தொடரை அப்படியே நிறுத்திப் போட்டுவிட்டு ஸ்லாவத்தாக எல்லாத்தையும் அடித்து முடித்து மீண்டும் அந்த ஒற்றைச்சக்கர சைக்கிளில் பயணிக்கிறார் கமல். முழு வேகத்தடையான சண்டைக்காட்சி அது. . 
 
தம்பி அநிருத் என்னதான் செஞ்சிருக்கார்னு அவருக்கே தெரியுமான்னு சந்தேகம். இவ்வளவுக்கும் இதே கமலின் ‘விக்ரம்’ படத்தில் பட்டையைக் கிளப்பிய சுனாமி இங்கே சிற்றலை போலும் இல்லை. இத்தனை அழுத்தத்தில் வேலை செய்து தான் ஆகவேணுமா என்ன?. மூன்றாம் பாகத்துக்கும் தம்பி தான் இசை போல. அந்தக்குதிரைப்பாடல் இங்கே கொஞ்சம் ஒலிக்கிறது. ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. பாடலோ இல்லை பின்னணி இசையோ ...உஹூம்.
 
இன்னிக்கும் பெரிய பெரிய தலைகளைக்கொண்ட பொம்மைகள் மற்றும் ஒரே மாதிரி ட்டீஷர்ட் போட்டுக் கிட்டு ஒரு பெரும் கும்பலே ஆடுதல், பிரம்மாண்டம் ங்கற பேர்ல செய்யும் அத்தனை ஜோடனைகளும் சலிப்புத்தான் தட்டுகிறது. புதிய உத்திகள் இல்லாதது சொய்வு. ஆர்க்கே லக்‌ஷ்மணின் ’காமன் மேன்’ கேரக்டர் மட்டுமே சொல்லிக்கொள்ளும்படியான புதுமை, மற்றதெல்லாம் பழைய புளிச்ச மாவுதான். நெடி தாங்கலை. வழக்கம்போல கதையின் நீரோட்டத்துக்கு ஒத்தே வராத காமெடிக்காட்சிகள் எப்போதும் ஷங்கர் படத்தில் காணலாம். அது இங்கே மிஸ்ஸிங். முழுக்க சீரியஸ் காட்சிகள் மட்டுமே. அந்த நான்கு பார்க்கிங் டாக்ஸ் தமக்குள் கலாய்த்துக் கொள்ளும் காட்சிகளில் கூட சிரிப்பு வரலை.
 
போர் என்றால் தமிழ்நாட்டு காமன்மேனுக்கு என்னா ^யிருன்னே தெரியாது. பாகிஸ்தான் பாகப்பிரிவினை கூட துலக்கமா தெரியாது அதன் பின் நடந்த கலவரங்கள் எல்லாம் வெறும் செய்திகள் மட்டுமே. வீட்டுக் கதவைத்தட்டும் போது மட்டுந்தான் போரின் உண்மை முகம் தெரியும். 
 
I'm literally waiting for Indian3. Indeed. !

Wednesday, June 19, 2024

கொர்க்கே குக்கூரி - गोर्खे खुकुरी

 


இந்தப்பாடலை சில அஸ்ஸாமி அல்லது சில நார்த் ஈஸ்ட் பெண்கள் ஆடி வெளியிட்ட இன்ஸ்ட்டா ரீல்ஸ் காணக்கிடைத்தது. அப்போதிருந்து இந்தப்பாடலின் ஒரிஜினல் வீடியோ எங்க கிடைக்கும்னு தேடித்தேடி சலித்தது தான் மிச்சம். உலகத்தையே பொரட்டிப் போட்டு தேடினேன். மொழி/சொல் விளங்காதது தான் காரணம். எதேனும் ஒரு கேட்சியான சொல்லோ வாக்கியமோ கிடைத்தால் அதை வைத்து தேடலாம். இது கொஞ்சமும் விளங்காத மொழி...ஹிஹி. ஒரு சொல் போலும் மனதுக்குள் நுழைய மறுக்கிறது அதிலும் பாடலாக வருவதால் இசை மற்றும் ஆட்டத்தில் வரியைக் கவனிக்காது விடுதல் எனபது தொடர்ந்தது.
 
இருப்பினும் வடநாட்டு நண்பர்களிடன் கேட்டுப் பார்த்தும் பயனில்லை. அவர்களுக்கே மொழி புரிபடவில்லை. இது எதோ திரிபுரா மேகாலயாவில் இருக்கும் மொழி குக்கி போன்று (என்னென்ன மொழி இருக்கு பாரு.. இந்திய வெச்சே தேய்க்காதீங்கடா... அடச்சே ...ஹிஹி ) என கூறி விட்டனர். யூட்யூபில் தொடர்ந்து குக்கி சாங் எனத்தேடிப் பார்த்தால்..ம்ஹூம். வெளக்கமாக காட்டுது. இருப்பினும் 30 செகண்ட் வீடியோவில் இருக்கும் ஒரிஜினல் பாடலை கண்டே பிடிக்க முடியவில்லை. ஏன்னா அதில் ’க்குக்குரே’ ’குக்கிரே’ என்று சில சொறகள் வருகிறது.
 
சில காலம் கழிந்தது ...பின்னர் அதே பாடலின் வேறொரு ரீல்ஸில் ஒரு புண்ணியவான் இந்த இரு சொற்களை போட்டே வைத்திருந்தார் கமெண்ட்ஸில். அந்தக் கேட்சியான சொல் ‘கோர்க்கி கோக்கூரி’ ஒரு வழியா இந்தச் சொற்களைப் போட்டு தேடின உடன் முதல் வீடியோ இதான். ஆஹா. கண்டேன் சீதையை என்று கூவினேன். நேப்பாளி பாட்டுய்யா நேப்பாளி பாட்டு. இந்த ரீல்ஸை ஒரு தடவ ஓடவீட்டு கீழ செகுரிட்டி ‘டினேஷ் டம்பர் பிஷ்ட்’ (அடப்பாவி இப்டி ஒரு பேரா...ஒனக்கே அடுக்குமா?? 🙂 ) கிட்ட காட்டிருந்தா ஒரு நொடீல சொல்லீருப்பான். ஹ்ம். சரி தேடுங்கள் கண்டடைவீர்கள்னு கண்டுபிடித்து விட்டேன் பத்து நிமிடம் ஓடும் பாடல். பல தரப்பட்ட வயதுடைய காதல் ஜோடிகள் என பத்து நிமிடம் தொடர்ச்சியாக ஓடும் வீடியோ சாங் சீக்வென்ஸ். அற்புதம்.
 
01:07 லிருந்து தொடங்கி 01:25 வரை ஒலிக்கும் இசைதான் க்ரீம் பாடலுக்கு. அதன் பிறகு இதே ராக/தாளத்தில் அடிப்படையில் பாடி/ஆடிக்கொண்டே செல்லும் இளம்/கிழம் ஜோடிகள்..! ❤
 
இவங்ய பாட்டு பூரா இப்டித்தான்யா இருக்கு. ஆனா செமயா இருக்கு. மண்டபத்துல எழுதிக்குடுத்து ஆட்டையப்போட்ட பாட்டு மேரி இல்லாம ஒரிஜினல் நேப்பாளி சப்பை மூக்கு பாடல். நிஷ்சல் தாவடி’ யின் இசை மற்றும் குரலில் இணைந்து பாடுகிறார் ஷாந்த்திஷ்ரீ. கேட்டு மகிழுங்கள் மக்களே. கொர்க்கி கொக்கூரி பாட்டு. 🙂 🙂

#GorkheKhukuri
गोर्खे खुकुरी

 

Tuesday, April 23, 2024

Tate McRae

 

டேட் மக்ரே (Tate McRae) பேரே ஒரு மாதிரி இருக்கிறதல்லவா?.. கனேடியன் பாடகி. தாத்தியானா என்ற பெயர் ரஷ்யாவில் இன்னபிற தொட்டடுத்த ஐரோப்பிய நாடுகளில் சகஜம். முதல்ல இவரின் பாடலை கமீலா கெபெல்லோ (சிண்ட்ரெல்லா அழகி 🙂 ) வின் பாடலென்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஏன்னா பாடல் பாடும் முறை.சிணுங்கல்கள், அப்பால அடிச்சு துவைச்சு துவம்சம் பண்ணும் நோட்ஸ்,அப்பால் யோடலிங், மேலும் அப்படியே அச்சசலான குரல் . 
 
பொதுவாக பிரபலமான ஒரு பாடகரின் குரல் போலவே இருப்பவரை பாட அழைப்பதேயில்லை. அதுதான் வழக்கம். போனால் போகுது என்று நம்ம ஊர் ஆட்கள் திருவிழாக்கச்சேரிகளில் பாட அழைப்பர். அவர்களும் ஒற்றி எடுத்ததைப் போல எஸ்பிபி. ஜேசுதாஸ் ஜானகி போல பாடிப்பரிசில்கள் பெறுவர். இருப்பினும் பின்னணிப் பாடகர்களாக வலம் வருதல் என்பது அரிது. கிடையவே கிடையாது எனலாம். மது பாலகிருஷ்ணன் மட்டுமே விதிவிலக்கு. அப்படியே கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் ஜேசுதாஸே தான். இருப்பினும் இப்போது வாய்ப்புகளின்றிப் போனார்.
 
டேட் மக்ரே மற்றும் கேமீலா கபேலா சம காலத்தில் வாழ்பவர்கள். இருவருமே தமது தனிப்பாடற்திரட்டுகள் வெளியிடுவதால் இந்தக்குழப்பம் வந்து கொண்டே தான் இருக்கும் எனக்கு 🙂 இருப்பினும் டெய்லர் ஸ்விஃப்ட்டை முந்திக்கொண்டு இந்தத் டேட் மக்ரேயின் பாடல்கள் அமேரிக்க டாப் டென்களில் எப்போதும் பத்து இடங்களுக்குள் வலம் வந்து கொண்டேயிருக்கிறது. கொஞ்சம் அதிரடி பாப்/ மற்றும் கொஞ்சம் ராக் கலந்த பாடல்கள் மற்றும் கேட்சியான ரிதம்களால் முன்னுக்கு உந்தித்தள்ளி இடம் பெற்று விடுகிறது இவரின் பாடல்கள். 
 
பத்து இடங்களில் அதுவும் முதலாவதாக வருவது என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க இயலாத ஒன்று. அதன் பின்னில் இருக்கும் அரசியல். தோல் நிறம் , முக்கியமாக விற்பனைக்கணக்கு, உங்களின் பின்புலம், எந்த நாட்டிலிருந்து வந்தீர் என்பதையெல்லாம் கடந்து பயணித்து வந்தவைகள் தான் இடம்பெறும். நல்ல வேளை இவர் இங்கிலாந்திலிருந்து வரவில்லை. இல்லையெனில் பாட்டூன்னாலே அது இங்கிலாந்துக்காரா பாட்டூ தான்னு அளப்பறை பண்ண பெரும் கோஷ்ட்டியே கெளம்பி வந்துரும். (பீட்டில்ஸ், ஸ்பைஸ் கேர்ள்ஸ் எல்லாம் கும்பினி வகைறா.)
 
Shes all I wanna be பாடல் அதிரடி ரிதமும், ஆடத்தகுந்ததாக இருக்கும் பாடல். ஆடிண்டே பாடுவாளோ, மூச்சிரைக்காதோன்னோ..ஹிஹி.. டேட் மக்ரே நல்ல ஆடற்கலைஞரும் கூடவாம் (warm) ..ஹீஹி. நம்ம ஊர்ல இருக்கிற/ வசிக்கிற/ பாட்ற பாடகர்கள் பாடகிகள் யாராவது ஆடறாளா?ன்னு கேட்டா இல்லவே இல்லைன்னு தான் சொல்லலாம். எஸ்பீபீ ஆடினாரேன்னு எந்திருச்சி வந்துல்லாம் சொல்லக்கூடாது அது அவர் அந்தப்படத்துல நடிச்சதுனால ஆடினார் (?) . மேடைல பாடிக்கிட்டே ஆட்றதுங்கறது நம்ம ஊர் சங்கதியே இல்லை. ஒண்ணு ஆட்ற நடிகர்களுக்கு பின்னிலிருந்து வாயசைப்பதோடே சரி. அப்பால ஒண்ணுமில்லை. அல் மோஸ்ட் இந்தப்பாடலை பாடகி சித்ராவோ இல்லை எஸ்.ஜானகி இல்லையெனில் சுசீலாம்மாவோ ஆடிக்கொண்டே பாடினால் எப்படி இருக்கும் என நினைத்துக்கூட நம்மால் பார்க்கவியலாது. கலாச்சாரத்தடை.! மேலும் கலாச்சாரக்கேடூ...ஹிஹி. அதான்.
 
அத்தனை மேற்கிசை கலைஞர்கள் ஆடிக்கொண்டே பாடக்கூடியவர் தான். நம்ம ஊர்ல இருக்கிற ஒருத்தரை சொல்லாம். அது DSP மட்டுந்தான். அப்பால ஹிஹி நம்ம ஆண்ட்ரியா (கொண்டு வந்துட்டம்ல ..ஹிஹி). இந்த DSP யப் பார்த்து நம்ம சூர்யா புள்ளாண்டான் , பாட்றார் ஆட்றார் இசைக்கிறார் , பயமாயிருக்குன்னு மேடேலேயே சொன்னார். அதான். ஒண்ணு ரெண்டு புள்ளங்க தான் இருக்கு நம்ம ஊர்ல. தம்பி அநிரூத் ஆடல்லாம் மாட்டான். அவனுக்கு இருக்கிற ஒடம்புக்கு ஆடினா அற்புதமா இருக்கும். உஹூம்.. அனங்க மாட்டான். ஹிஹி. சும்மா நாலு ஸ்டெப்ஸ் போடுவான். பின்னால இருக்கிற ஆடற்கலைஞர்கள் வந்து கவர் அப் பண்ணிடுவார்கள். நடிகர் விஜய்க்கு நன்கு பாட மேலும் அற்புதமாக ஆடவும் தெரியும்னு எல்லாருக்கும் தெரியும்.. ,,,ஆஹா.. இசைக்கத் தெரியாதே...அதான்...! ஒண்ணு இருந்தா ஒண்ணு இல்லை இங்க.
 
இங்க இருக்கிற பாடகர்கள்/பாடகிகள் கவனம் செலுத்துவதில்லை, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேணும் என. இதுக்கு ஒரு அடிப்படைக் காரணம் சொல்லலாம். கர்நாடக இசை இல்லையேல் ஹிந்துஸ்தானிய இசை பயிலச்செல்வோர் குரு சிஷ்யா பரம்பரையில் வந்து விடுவதால், மாணாக்கர்க்கு கற்பிக்கும் அத்யாபக்குகள் (fuck) அவர்தம் வித்யார்த்திகளுக்கு (மாணவர்க்கு) ஆடல்லாம் சொல்லிக் கொடுப்பதில்லை. ஏன்னா அவாளுக்கே அது வராது. இஹி இஹி. அதனால குரலை வளப்படுத்துவதில் காட்டும் அக்கறை உடலைச் செம்மையாக்குவதில் காட்டப்படுவதேயில்லை. ஆமாம்.
 
எந்தப்பாடகரை எடுத்துக்கொண்டாலும் மேற்கில் தம் குரலை விட உடலுக்கு உடல் ஷேப்பிற்கு அதிக கவனம் செலுத்துவோர்தான் அதிகம். கேட்டி பெர்ரி, தூவா லீப்பா, டெய்லர் ஸ்விஃப்ட் (அனோரெக்ஸிக் பேஷண்ட்..ஹிஹி) கமீலா கபேலோ, பிபி ரெக்ஸா, இதில் ஒரு விதிவிலக்கு அடேல் (Adele ) மட்டுமே , பாட்டுக் கேக்கத்தான் வர்றான் என்னைப்பார்க்க இல்லை என உடலில் கிஞ்சித்தும் அக்கறையில்லாது ( இருப்பினும் ஊதிப் பெருத்துல்லாம் இருக்க மாட்டார்.) சாதாரணமாகத்தான் இருப்பார். இருப்பினும் இவர் பாடல்கள் நம்ம ஊர் சலீல் செளத்ரி பாடல்கள் போல் அத்தனை செறிவானதும் கடுமையானதும் கூட. அத்தனை எளிதில் புரிபடாதவை. யூட்யூப்ல இந்தப் பாட்டை தேடி எடுத்துப்பாருங்களேன். Adele - Send My Love (To Your New Lover) ..சிரிக்கக்கூடாது.. 🙂 அவ்ளவ் தான் அவருக்கு ஆடத்தெரியும்..ஹிஹி. ( கிட்டத்தட்ட இவரொரு இங்கிலீஷ் பானுமதி. அல்லாப்பாசையும் பேசுவார், நடிப்பார் ஆனா ஆடத்தெரியாது ..அதான் ஹிஹி )
 
இந்தப்பாடலில் (She’s all I wanna be ) 01:48 ல் ஆரம்பிக்கும் வரிகளைக்கேட்டால் அது அப்படியே கமீலா கபேலின் ஸ்டைலில், அவர்தம் குரலியே ஒலிக்கும். அம்மா டேட் தாயே..ஏம்மா ஏன்...இப்ப்டி ..ஹிஹி. இந்தப்பெண்மணி டேட் மக்ரே ஆறுவயசிலியே (ஏஏஏ) பாட ஆட ஆட (எத்தான ஆட) ஆரம்பிச்சுட்டாராம். அது சரி. நம்ம ஊர் தம்பி அனிருத் மூணு வயசிலேயே கீபோர்டு வாசிக்க ஆரம்பிச்சுட்டானாம். நாமெல்லாம் கொஞ்சம் லேட்டு. அதான்...ஒண்ணும் பண்ணமுடியாமப்போச்சு..ஹிஹி. 
 
All I wanna be so bad பின்னர் கொஞ்சம் இடைவெளி விட்டு So bad என ஒருமுறை பாடுவார். அந்தப்பாடலில் இந்த இடத்தின் இடைவெளியில் ஒரு எதிரொலியேனும் இல்லையேல் இன்னொரு முறை அதே So badஐ அவரே பாடுவரென நினைத்தால் பாடமாட்டார். நீங்க பாடுவீங்க அதான் வெற்றி பாடலில். இப்படி இதுகாறும் நினைத்து வைத்துக்கொண்டிருக்கும் பீட்களோ இல்லை வழக்கமான பாடல் முறைகளோ இல்லாது பயணிக்கும் முழுப்பாடலும். 
 
சரி.இதுக்கு முன்னால என்னேல்லாம் பாட்டு போட்றுக்கார்னு பாக்க போனா எல்லாம் காதல் டோல்வி தான். தனிமைஐ தான். ஒண்ணும் சிறக்கலை தான். இந்தப்பாட்டிலருந்து (Shes all I wanna be ) அதிரடி ஆரம்பிச்சதும் ராங்க்கிங்ல வர ஆரம்பிச்சிருக்கார்.
 
Oh Im Sorry Sorry that You Love Me, இது பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லுன்னு சொல்வது போல எப்போதும் உள்ளுக்குள்ளேயே சுற்றிக் கொண்டு எட்டிலும் ஆறிலுமாக இருக்கும் பாடல். நீங்களாகவே விரல்களால் தாளம் போடாமல் இந்தப்பாடலைக் கேட்கவே இயலாது. Foot Tapping Notes! 0:48 லும் 01:40லும் வரும் அந்தச்சேஞ்ச் ஓவர் அற்புதம்.கேளுங்க என்ஜாய் பண்ணுங்கோ. எனினும் சீக்கிரம் தேய்ந்து போகும் பாடல் வகை இது.
 
மற்றும் Greedy பாடல் (இது கிட்டத்தட்ட எட்டு வாரங்களுக்கு மேல் டாப் டென்னில் நம்பர் ஒன்னில் இருந்தது) இவையெல்லாம் இவரின் சமீபத்திய பாடல்கள். ஏகப்பட்ட ரோட் ஷோக்கள், அவார்ட் மேடைகளில் ஆட்டம் என கலக்கும் டேட். அதெல்லாம் இருக்கட்டும். இவாளுக்கு வயசு 20 தானாம்.. இருபதே இருபது. அது சரி. நம்ம வேலையப்பாப்பம்... 🙂

Wednesday, March 27, 2024

Africa The Wild Secrets

 


ஆப்ரிக்க காடுகளில் ஒரு ஃபோட்டோக்ராஃபரின் அனுபவங்கள். பிரமாதமான நிகழ்வு. எடுத்த அத்தனை புகைப்படங்களையும் ஒரு ஸ்லைட்ஷோவாகப் போட்டுக் காட்டினார். ஒவ்வொரு நாட்டிலும் கிட்டத்தட்ட பத்து பதினைந்து நாட்கள் டூர். குழுவாகத்தான். நமீபியா, கென்யா, தான்சானியா மற்றும் ருவாண்டா உகாண்டா என அத்தனை மத்திய ஆஃப்ரிக்க நாடுகள். என்ன பெரிசா காட்டிறப்போறார்னு இளப்பமாக நினைத்துக்கொண்டு தான் நிகழ்வுக்குச்சென்றேன். நாட்ஜியோவிலும் டிஸ்கவரியிலும் காட்டாததையா காட்டப்போகிறார் என.

எந்த ஆப்ரிக்க நாட்டிலும் ஒருங்கிணைப்பு மிகச்சரியாக இருப்பதை ஒவ்வொரு முறையும் குறிப்பிடத்தவறவில்லை அவர். பிரதீப் ராவ். இங்கோ கேட்கவே வேணாம். ஒவ்வொரு இடத்திலும் அனுமதி பெறுவதற்குள் போதும் போதும் என ஆகிவிடும் தொல்லை நான் எனது நண்பர்களுடன் கர்நாடகக்காடுகளில் சுற்றிய போது நொந்தவை. சொந்தக்கதை சோகக்காட்டுக்கதை.

தான்சானியாவுல் நட்டநடுக்காட்டுக்குள் ரிசார்ட் கட்டி வைத்து இருக்கின்றனர். அத்தனையும் மரத்தாலானவை. வேறெந்த கட்டிடப் பொருட்களைக் கொண்டும் கட்டப்படாதவை. பாதுகாப்பு...எல்லாம் சில வனவிலங்கு அதிகாரிகளின் தயவில் தான். இருப்பினும் அத்தனை ரிஸ்க் எடுத்துதான் உள்ளே தங்க வேணும்.. இன்ன விலங்கு என்றில்லாது ஒவ்வொன்றும் இந்த காட்டேஜை கடந்து சென்று கொண்டு தான் இருக்கின்றன. தாக்கவோ இல்லை உள்ளே வரவோ செய்யவில்லை. ஆச்சரியம். நல்ல குளங்கள் வெட்டி அதில் தவறாது தண்ணீர் நிரப்புவது எப்போதும் நடந்து கொண்டிருக்கிறது, அதையொட்டியே இந்த காட்டேஜ். நல்ல கேமரா வித் டெலஸ்கோப்பிக் லென்ஸ் கொண்டு அற்புதமான உலகப்புகழ் பெறும் புகைப்படங்களை எடுத்துத்தள்ளலாம். உங்களுக்கு நல்லூழ் இருப்பின். ஏனெனில் விலங்குகள் வந்து நீரருந்துவது என்பது அவற்றின் விருப்பம். நடுச்சாமத்தில் வந்து அருந்துமாயின் ஒன்றும் செய்யவியலாது.

இரவில் ஒலிக்கவிட அங்கு ஒரு மணி/அலார்ம் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு முறை ஒலித்தால் யானைகள் வந்திருக்கின்றன. இருமுறை ஒலித்தால் சிறுத்தைகள் , மூன்று முறை ஒலித்தால் சிங்கம் வந்திருக்கிறது நீரருந்த எனப்பொருள். இவர்கள் அங்கு தங்கியிருந்த ஒரு இரவில் ஒரு மணி போலும் ஒலிக்கவில்லை. எங்களுக்கு நல்ல உறக்கம் என்றார்.

சின்ன ப்ளேன்,பத்துப்பேர் உடகார்ந்து செல்லக்கூடிய ,ப்ளேனில் பறந்தும் விலங்குகளைக்காணலாம். இருப்பினும் அத்தனை சுவாரசியம் இருப்பதில்லை. ஒன்று கூறினார். சில்லிட்டது அனைவருக்கும். எந்தக் காட்டிலும் செல்லும் ஜீப்/வாகனங்களை விட்டு ஒருபோது கீழிறங்கக் கூடாது என. ஏனெனில் அந்த வாகனங்களை விலங்குகள் ஒரு பெரிய விலங்காக கருந்துகின்றன. தாக்க முற்படாத ஒன்றாக, எனவே கண்டுகொள்ளாது கடந்து சென்றுவிடும். அதுவே நீங்கள் ஆரவத்தில் கேமராவை எடுத்துக்கொண்டு கீழிறங்கி படம் எடுக்கிறன் பேர்வழி என்று புறப்பட்டால் வனவிலங்கு அதிகாரிகள் போலும் உங்கள் உதவிக்கு வரமாட்டார்கள். ஏனெனில் அத்தனையும் வனவிலங்குகள் , மனிதனுக்கு ஒருபோதும் பழக்கப்படாதவை, அதிரடித்தாக்குதல் நடத்த ஒருபோதும் தயங்காதவை. இவர்களின் குழு சென்ற ஜீப் நடுக்காட்டில் மாட்டிக் கொண்டது. வழக்கம்போல கீழிறங்கித்தள்ளலாமா எனக் கேட்டிருக்கின்றனர். பயணிகள். முழுமையாக திரும்பி உடலோடு உங்கள் நாட்டிற்கு செல்லவேணுமெனில் அசையாதீங்க என்றிருக்கிறார் அந்த வனவிலங்கு அதிகாரி/ஓட்டுநர். பின்னர் கைரேடியோவில் முன்சென்ற ஜிப்பை விளித்து அவர்கள் வந்து பின்னர் இந்த ஜீப்பை முட்டித்தள்ளி (அந்த ஜீப்பிலிருந்தும் யாரும் கீழிறங்கவில்லை) கரையேற்றி விட்டவுடன் வந்து சேர்ந்தோம் என்றார்.

அந்த மைக்ரேஷன் இடப்பெயர்வு தான் அமர்க்களமாக இருந்தது. மான் வகையைச்சேர்ந்த Wlidebeest/Gnu விலங்கின் இடப்பெயர்வு. ஆண்டு முழுதும் பல நாடுகளைக்கடந்து (கிட்டத்தட்ட நான்கு நாடுகள்) பின்னர் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்வது. இவற்றுடன் சேர்ந்து வரிக் குதிரைகளும், இன்னபிற கால்நடை விலங்குகளும் கூடச்சேர்ந்து பயணிக்கின்றன. நீங்கள் போகும் காலத்திற்கேற்ப அவற்றை அந்த நாடுகளில் காணலாம். ஒவ்வொரு நாட்டிலும் நதியைக்கடந்து செல்ல எத்தனிக்கும் போது முதலைகளின் வேட்டை தொடங்கும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த இடப்பெயர்வு நடந்தும் ஒருபோதும் தமது பாதையை மாற்றாத (மாற்றத்தெரியாதவை எனத்தான் சொல்லவேணும் , இன்னமும் அவற்றின் அறிவு வளரவேயில்லை..ஹ்ம்) இடப்பெயர்வு இவற்றை இரையாக உண்ணக்காத்திருக்கும் இன்னபிற பெரிய விலங்குகளுக்கு நல்ல வேட்டையாகவே எப்போதும் இருக்கிறது.

இந்த Wlidebeest/Gnu விலங்குகளின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் இருக்கிறது இன்னமும். என்ன காரணம் இத்தனை அட்வெஞ்சரஸாக இடப்பெயர்வு செய்ய ?... அந்தந்தக்காலங்களில் அந்தந்த நாடுகளில் வளரும் புற்கள்/செடி கொடிகள் தான். தமக்கேற்ற துணையைத் தேடுவதும், பின்னர் கருவுறுவதும் குட்டிகளை ஈனுவதுமாக காலங்களுக்கு ஏதுவாக மிக நல்ல சத்துணவாக இருக்கிறது. அதுதான் காரணம் இந்த வலுக்கட்டாய இடப்பெயர்வுக்கு.

இன்னொரு சுவாரசியமான பதிவு. காட்டில் அலைந்து திரியும் இம்பாலா எனும் மான்கள், பின்னர் வரிக்குதிரைகள் இவற்றை படம் பிடித்து விட்டு இரவில் வீடு திரும்பினால், புஃபே டின்னரில் அவற்றின் இறைச்சி சமைத்து வைக்கப்பட்டிருக்கிறது. செம ஷாக். நம்ம நாட்டில் தான் மான்கறிக்கு தடை. அங்கு அவற்றின் எண்ணிக்கை மிக அதிகமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக அரசாங்கமே அவற்றை சில எண்ணிக்கையில் வழக்கமாக பிடித்து பின்னர் இறைச்சியாக பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறது. சாப்பிட்டு பார்த்தீரா எனில் நண்பர்கள் கூறினர், செம ச்சூயியாக இருந்தது என. ரொம்ப நேரம் ஆகிறது மென்று விழுங்க.அத்தனை எளிதில் மாவாக அரைபடுவதில்லை அவை.

ஒரு நாட்டில் ஒர் குரங்கு வகைக்கு ஆணுறுப்பு நல்ல ப்ளூ கலரில் (ஹிஹி...அந்த சமாச்சாரமே ப்ளூ தானே ..ஹிஹி) இருக்கிறது. எத்தனை ப்ரைட்டான ப்ளூவாக இருக்கிறதோ அத்தனை கேர்ள்ஃப்ரென்ட்ஸ் கிடைப்பார்களாம். ஹிஹி.. அதைக்காட்டிக் கொண்டே அலைகிறது . உடுப்பாவது ஒண்ணாவது. அடங்கொய்யா.

தான்சானியா நாட்டில் தான் சிம்பன்ஸிகள் அதிகம் வசிக்கின்றன.அவை மனிதர்களைப்போல குடும்பமாக குழுவாக வசிப்பவை. முன்னக்கூட்டி சொல்லி வைக்கவேணுமாம். அப்போதுதான் விலங்கு அதிகாரிகள் அவற்றின் இருப்பிடம் அறிந்து அங்கு கூட்டிச்செல்ல ஏதுவாக இருக்கும்.. இடம் பெயர்ந்து கொண்டே இருப்பவை. காட்டில் ஆதலால். 98.8 சதமானம் டி.என்.ஏ மனிதனுடன் ஒத்துப்போவது இவற்றுக்கு மட்டுந்தான். (வாழைப்பழ டி.என்.ஏ ஐம்பது சதமானமாம் ...ஹிஹி ) மிக அருகிலும் சென்று பார்க்கலாம் என்றார்.தாக்க முற்படுவதில்லை. சில சிம்பன்ஸிக்கள் நல்ல போஸ் கொடுக்கவும் தயங்குவதில்லை. இருப்பினும் பாதுகாப்பான தொலைவு என விலங்கு அதிகாரிகள் சொல்லும் தூரத்தில் இருந்தே அவற்றைப்பார்ப்பது நல்லது.

கிளிமஞ்சாரோ மலையில் மேல் பனி படர்ந்திருப்பதை, அந்த பேக்ட்ராப்பில் அதன் அடிவாரத்தில் ஒற்றை யானை நிற்பதை, மிக நீளமான தந்தம் கொண்ட யானையை அதன் அருகில் சென்று படம் பிடிப்பதை, பின்னர் சிறுத்தை மற்றும் சிங்கங்கள் அடித்துப்போட்டு தம் குட்டியுடன் சேர்ந்து உணவு உண்பதை, பின்னர் ஹயீனாக்கள் (லியோ புகழ்) மிச்ச மீசாடிகளை அடித்துப்புரண்டு கொண்டு தின்பதைப்படம் பிடிப்பது என்பது இந்த வைல்ட்லைஃப் ஃபோட்டோக்ராஃபர்களுக்கு லைஃப் டைம் அச்சீவ்மெண்ட் என நினைப்பர். அவையனைத்தும் எனக்கு கிடைத்தது என்றார்.

சரி அதெல்லாம் கிடக்கட்டும். போக வர என்னா செலவு ஆவும் என்று கேட்டால் ஒருநாளைக்கு ஆஃப்ரிக்க நாட்டுக்காடுகளில் உலவ, உண்ண, சஃபாரி செல்ல, சிறுப்ளேன் சவாரி செல்ல, இரவு உணவு, பாதுகாப்பு என எல்லாவற்றுக்குமாக 500-600 அமேரிக்க டாலர்கள் ஆகுமாம்....மாம்.. ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தது பத்து நாட்களேனும் தங்க வேண்டி வரும் அனுபவித்து சுற்றிப்பார்க்க, படம் எடுக்க....இஹி இஹி... இதுபோக இங்கிருந்து ஆஃப்ரிக்கா செல்ல விமானச்செலவு தனி. இஹி இஹி.அப்பால லென்ஸூ, டெலஸ்க்கோப்பிக் லென்ஸூ, கேமரா, அவற்றின் உறைகள், மெமரி கார்டுகள்ளூ எல்லாமாச்சேர்ந்து ...இஹி இஹி.. பேசாம நாட்ஜியோ இல்லைன்னா டிஸ்கவரி பார்த்துட்டு அப்டியே தூங்கீற வேண்டிதுதான்.

இப்படியாப்பட்ட ட்டூர்களை மீண்டும் அரேஞ்ச் செய்ய எப்போதும் தாம் ரெடி என கூட்டத்தைப்பார்த்து ஒரு கேள்வியைப்போட்டார் பிரதீப் ராவ்.. சிங்கத்தைக் கண்ட சிறுநரிபோல வாலைச்சுருட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.


#AfricaTheWildSecrets




Friday, March 8, 2024

Why don’t you just meet me in the middle?

                                Zedd, Maren Morris, Grey - The Middle (Official Music Video) - YouTube

Why don’t you just meet me in the middle? - இந்தப்பாட்டு கொஞ்சம் பழைய பாடல் தான். 2018ல் வந்தது. என்ன பிரசித்தம்னா இதுல பத்து வரிதான் அதே தான் திரும்பத்திரும்பப்பாடுவார். பாடகி மாரன் மோரிஸ். பல்லவியில் Why don’t you just meet me in the middle? Im loosing my mind just a little. இதே இரண்டு வரிகளை பலவிதமாகப் பாடுவார். அதான் சிறப்பு. கிட்டத்தட்ட ஒரு ஐந்து ஆறு வகையாகப் பாடுவார். அள்ளிக் கொண்டு போகும் கேட்கும் போது.
கொஞ்சம் ராப்/கொஞ்சம் ராக் (ஆமா ) கொஞ்சம் விக்கி தேடினப்போ இந்தப்பாட்ட மாஸ்ட்டர்களில் கமீல கபெலோ (ஆஹா நம்ம செனோரீட்டா.. 🙂 ) பாட முயற்சித்திருக்கிறார் , பின்னர் ஆன் மேரி (ஃப்ரெண்ட்ஸ் புகழ்) இப்படி பல பேர பதம் பார்த்து பின்னர் கடைசியாக மாரன் மேரிஸ் பாடியது ஃபைனல் அவுட்புட்டாக வெளிவந்திருக்கிறது.

02:17 ல் ஒரு வகை குழைவு ,,யப்பா கேளுப்பா செய்ய மாட்டியா என்று கெஞ்சும் வகை. அதிலயே 02:23ல் ஒலிக்கும் அந்த தெனாவட்டு, அந்த யோடலிங் (yodelling) உருட்டல் எல்லாம் சான்ஸே இல்லை -
02:26-ல் வேறு வகை.குழைவாக ஆரம்பித்து வேகமெடுத்து உச்சத்தில் போய் நிற்கும். ஆஹா அனுபவிக்கிறாள்டா.
02:36-ல் இன்னொரு வகையாக. இவ்வளவு நேரம் கேட்கிறேனே இன்னுமா உனக்கு நான் சொல்றது புரியலைன்னு கத்த ஆரம்பித்துவிடுவார்.. ஹிஹி...
02:51 -ல் வாய்ப்பாடு சொல்லிக்கொடுப்பது போல சிறுபிள்ளைகளுக்கு, இப்ப கேப்பியா மாட்டியான்னு ..ஹிஹி.
03:01-ல் சொல்றதெல்லாம் சொல்லியாச்சு இனி உன் பாடு என்று திரும்பத்திரும்ப அதையே பாடிக் கொண்டிருப்பார். ஆஹா. இந்தப்பாடலை தமிழில் பாடத்தகுதியானவர் யாருன்னு கேட்டா ..ஆண்ட்ரியாதான் (ஹிஹி அதான அங்க தான வருவ நீ..ஹிஹி )

தமிழ்ல இது போல யாரும் செய்திருக்காங்களா என்னன்னு பார்த்தா, ராசைய்யா ‘பத்ரகாளி’ படத்துலயே இதே டெக்னிக்கை செய்திருக்கிறார். ’கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை’ பாடலில் சரணத்தில் இதை பரீட்சார்த்தமாக செய்து பார்த்திருப்பார். 01:27ல் ஜேஸுதாஸ் பாடும் ‘உன் மடியில் நானுறங்க’கண்ணிரண்டும் தான் மயங்க என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ’ ன்னு ஆரம்பித்துப் பாடுவதை சுசீலாம்மா 01:41ல் வேறு விதமாகப்பாடுவார். ஜேஸுதாஸ் கெஞ்சலாகப் பாடியதை சுசீலாம்மா கொஞ்சம் உச்சஸ்தாயியில் எடுத்து அதே வரிகளை ராகம் மாற்றாமல் வேறு கட்டையில் பாடுவார். அந்த ஒரு வரி மட்டுந்தான் பிறகு பாடல் அதன் போக்கில் சென்றுவிடும்.

பிறகு இரண்டாம் சரணத்தில் சுசீலாம்மா ‘மஞ்சள் கொண்டு நீராடி மொய்குழலில் பூச்சூடி வஞ்சி மகள் வரும்போது ஆசை வரும் ஒரு கோடி’ என்று இருவருமாகப்பாடி பின்னர் சுசீலாம்மா வேறுவகையாக பாடிக்கொண்டு செல்வார் பின்னர் அதே சுதியில்/கட்டையில் ஜேஸுதாஸும் இணைந்து பாடுவார். இதுல என்ன ப்யூட்டீன்னா தாளம் எப்பவுமே மாறாது ஒரே பாணியில் ஒலிக்கும். இரண்டு சரணங்களிலுமே. அங்க தான் வெப்பார் ட்விஸ்ட்டூ ராசைய்யா! தாளம் மாறாது வேறு கட்டையில் பாடவைத்திருப்பார் ஐயா!

இன்னொரு பாடல் கூட இருக்கு, நாடோடிப் பாட்டுக்காரன் -ல ”வனமெல்லாம் செண்பகப்பூ வானெல்லாம் குங்குமப்பூ: என ஒரு பாடல் அதுவும் சுசீலாம்மா பாடினது தான். கிட்டத்தட்ட முழுப்பாடலுமே கர்நாடக சங்கீத ராகத்தில் (லதாங்கி மற்றும் மத்யமாவதி ) ஆடலுக்கென இட்ட பாடல் போல ஒலிக்கும். கடைசியில் பாலு வந்து வேறு பாணியில் பாடுவார். நாட்டார் பாணியில் ஆனால் தாளம் முழுக்க மாறியே போய்விடும் ராகமும் தான்...எனினும் அதே வரிகள் தான்.

சரி ராசைய்யாவைச்சொல்லியாச்சு. ரஹ்மான் ஏதும் பண்ணலியான்னா செய்திருக்கார் அவரும். விண்ணைத் தாண்டி வருவாயா-ல வரும் ‘மன்னிப்பாயா’ பாடலில்.

0:43-ல் ஒரு நாள் சிரித்தேன் மறுநாள் வெறுத்தேன் உனைநான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா ?
01:08-ல் அதே வரிகள் தான். வேறுவகை. தாளம் மாறாது. கட்டை மாறி ஒலிக்கும் வரிகள். அலுக்காது கேட்க வைக்கும்.

இதுல என்ன ப்யூட்டின்னா ‘ இந்த ஒரு சொல் மன்னிப்பாயா’வை பல வகைகளாக சொல்லவைத்துப் பாடவைத்து காதலனை கெஞ்சிக்கேட்கும் குரலாக ஒலிக்க வைத்து தாளம் தப்பாது , எத்தன தடவை நான் கேட்கிறேன் பாரு மகனேன்னு கெஞ்சி கொஞ்சிப் பாடுவார்

0:57லேயே மூன்று முறை கேட்டுவிடுவார் மன்னிப்பாயா என பின்னரும் 01:18 ல்தொடங்கி 01:30 வரை கிட்டத்தட்ட ஐந்து வகைகளாக மன்னிப்பாயா எனக்கேட்பார் மன்றாடுவார் ஷ்ரேயா கோஷல். பின்னர் ரஹ்மான் வந்து பாடுவார்னு வெச்சுக்கங்களேன். அப்ப மொத்தமாப் பாத்தா ஒரு எட்டு தடவை மன்னிப்பாயான்னு கேட்டு காதலனை ‘இந்த அளவுக்கேல்லாம் நான் வொர்த்தா’ (அடங்*& ..சரி வேணாம் விட்ருவோம். ஹிஹி...) என சந்தேகப்படும் அளவுக்கு கெஞ்சிக்கேட்பார். ஹிஹி.

தம்பி அநிருத் இதுவரை இதுபோல ஏதும் செய்திட்டில்லை. எனக்குத் தெரிந்தவரை. இதெல்லாம் கொஞ்சம் பழைய சரக்குகள். அதான் டச் பண்ணலைன்னு நினைக்கிறேன்.

அதனால சொல்ல வர்றது என்னன்னா ‘Why don’t just meet me in the middle’ தான்..ஹிஹி.. என்ஜாய் என்ஜாமி. #Middle

Why don’t you just meet me in the middle
கண்ணன் ஒரு கைக்குழந்தை
மன்னிப்பாயா
வனமெல்லாம் சென்பகப்பூ

Friday, December 1, 2023

Colonial Interlude

 

Colonial Interlude – Nottuswara Sahityas of Muthuswami Dheekshithar – இந்த நிகழ்வுக்கு இன்று போயிருந்தேன், முத்துஸ்வாமி தீஷிதர் மும்மூர்த்திகளில் ஒருவர். நிறைய கீர்த்தனைகளை இயற்றியிருக்கிறார். எல்லாம் தெரியும். தெரியாத ஒன்று.. ‘ நோட்டூஸ்வரம்’ என்கிற மேற்கத்திய பாணி இசையில் அதன் ஸ்வரங்களுக்கேற்ப வடமொழியில் (கிட்டத்தட்ட இவரின் கீர்த்தனைகள் அனைத்துமே) 40 கீர்த்தனைகள (நமக்கு கிடைத்தவை அத்தனை தான்). பாடல்கள் எழுதியிருக்கிறார் என்ற செய்தி மிகப்புதியது என்னைப் பொருத்தவரை.

அவரின் சிறுபிள்ளைக்காலத்தில் இந்திய நாட்டினை அடிமையாக்குவதில் இன்னமும் முனைப்புக்காட்டிய காலனிய அரசு தமது இசையையும் கூடவே கொண்டுவந்திருக்கிறது. அதை ஓரமாக நின்று வேடிக்கை பார்த்த முத்துஸ்வாமி அதனடிப்படையில் கீர்த்தனைகளை எழுதியிருக்கிறார். அதே போல வயலினை கர்நாடக இசைக்கு அறிமுகப்படுத்தியது முத்துஸ்வாமியின் தம்பி பாலஸ்வாமி தீஷிதர்,இப்படி நிறைய செய்திகளைக்கொண்ட ஒரு ஆவணப்படம் அது. ஒரு எ.கா.வுக்கு தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஒரு இங்கிலீஷ்காரர் நாயனம்/தவில் வாசிக்கும் சிவாஜியின் கோஷ்ட்டியிடம் கேட்பர். எங்கள் இசையை இதில் வாசிக்க இயலுமா என. அப்போது வாசிப்பது தான் இங்கிலீஷ் நோட்ஸ். நோட்டூஸ்வரம்.

அவரின் கீர்த்தனைகள் அனைத்தும் வாய்மொழியாக சீடர்களின் வழி பரவியது தான். சில கிடைக்காமலே போய்விட்டன. நல்லதொரு அனுபவமாக இருந்தது இன்று. பின்னர் குறும்படத்தை இயக்கிய கன்னிகேஸ்வரனுடன் உரையாடலும் நிகழ்ந்தது.