Sunday, September 3, 2023

பத்மினியும் ரமேசனும்

 


பத்மினியும் ரமேசனும், ஆஹா. என்னே ஒரு சுஹானுபவம். அந்தப் பெயரைச் சொன்னாலே ஆர்ட்ஸ் வாத்தியார் , மார்ஷியல் ஆர்ட்ஸ் வாத்தியாரா மாறி அடிச்சுத்துவம்சம் பண்ணிடுவார். :) . மடோன்னா செபாஸ்டியன் (ஆஹா..ஹிஹி) ஸ்கூல்ல சேர்ந்தப்போ அவர் பெயரைச் சொல்லாமலே டீச்சர் வாங்க டீச்சர் போங்கன்னு ஒவ்வொருத்தரும் சொல்லும்போது, ஏன் இந்த டீச்சருக்கு பேர் இல்லையான்னு கொஞ்சம் யோசிக்கவைக்கும் இடங்கள்.

பின்னர் ரமேசனுக்கும் மடோன்னாவுக்கும் காதல் அரும்பியதும், தமது கவிதைகளைகொணர்ந்து கொடுத்து ப்ரொபோஸ் செய்தவனை புறந்தள்ளியதைச் சொல்லும்போது, அவ்வளவு மோசமா என் கவிதைகள் என ரமேசன் கேட்கும்போதும் ( இந்த இடத்தில் சப்தம் போட்டு சிரித்து விட்டேன் நான் ) அரும்பும் புன்முறுவல்கள்.

போத்துபோல உறங்காம் (எருமைமாடு) என பரஸ்யம் (விளம்பரம் செய்யும் அந்த ’ராரீரம் ஜெயன்’ . ரமேசனின் வாயிலிருந்து ‘பத்மினி’ என்ற பெயரை அன்பாக சொல்ல/வரவழைவைக்கும் அந்த மாமன், பத்தாயிரத்தில் தொடங்கி கடைசியில் மூவாயிரம் ரூபாய்க்காவது கல்யாண ஆல்பத்தை தள்ளிவிட்டுவிடலாம் என எண்ணும் அந்த ஃபொட்டோக்ராஃபர், எந்தா ஃபர்ஸ்ட நைட்லு பொண்ணு ஒளிச்சோடிப்போயதாணோன்னு நீதிமன்றமே சிரிப்பொலியில் மயங்கக் கேட்கும் ஜட்ஜு, எனப்பலப்பல சாதாரணமான மனுஷன்மார் படம் முழுக்க நிறைந்து கிடக்கின்றனர்.

இந்த மாதிரி படங்களைப்பார்க்கும்போது நாமும் எடுக்கலாம்டேன்னு ஒரு நம்பிக்கை வருது தமிழ்ல எங்க பார்த்தாலும் ஐந்நூறு கோடி ஆயிரம் கோடின்னு விக்ரம், ஜெயிலர், பக்கத்துலயே அண்டவிடாது வளர சீரியஸாயிட்டு அடிச்சு விரட்டும் சலச்சித்ரங்ஙள் மாத்றமே வராருண்டு. எண்டே குருவாயூரப்பா :)

#பத்மினி