Thursday, December 29, 2016

லீஸா ஸ்டாஃபர் - பயோக்ராஃபியா


லீஸா ஸ்டாஃபர் - நெய்தல் கலை ஓவியங்கள் புனையும் கலைஞர். சுவிட்ஸர்லாந்து நாட்டைச்சேர்ந்தவர். அவரைப்பற்றிய ஒரு ஆவணப்படம் திரையிடப்பட்டது.  நேஷ்னல் காலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட்' பெங்களூரில் சென்றிருந்தேன். நிறைய நூல் நெய்து அதில் ஓவியங்கள் உண்டாக்கி காட்சிப்படுத்தும் கலைஞர். பி ஆர் விஸ்வநாத்' என்ற ஒளிப்பதிவாளர்/ ஓவியக்கலைஞர் அந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார். பயோக்ராஃபியா' என்ற பெயரில். "கலை என்பது சமூகத்தை திருத்துவதற்கோ இல்லை பாதிப்பை ஏற்படுத்துவதற்கோ இல்லை" என்கிறார்.

முழுக்க வாழ்க்கை வரலாறு போலல்லாது , அவரின் பணிகளினூடே இவர் காமிராவை வைத்து எடுத்தது போல கொஞ்சமும் சலிக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் ஓடும் டாக்குமென்ட்டரி. வலுக்கட்டாயமாக ஆங்கிலத்தில் தான் உரையாடுகிறார். பல சொற்கள் கிட்டாது தவித்து யோசித்து , ஸ்விஸ் மொழியிலிருந்து தமக்குள் மொழி பெயர்த்துக்கொண்டு பின்னர் சொல்கிறார். அது வரை காமிரா அசையாது அவரையே பார்த்துக்கொண்டிருக்கிறது. பொதுவாக ஐரோப்பாவின் ஏனைய நாடுகளில் அவரவர்க்கான மொழி என்று ஒன்று உண்டு. ஜெர்மன்/இட்டாலியன்/ போல ஸ்விஸ் மொழியும் தமது சொற்களைக்கொண்டு விளங்குவதே. நான் ப்ராக்(செக் குடியரசு)கில் பணி நிமித்தம் தங்கியிருந்தபோது கண்கூடாக அதைக்கண்டிருக்கிறேன். தமிழனுக்கு இந்தி எங்கனம் ஒரு வெறுப்போ, காலனியாதிக்கம் செலுத்தும் மொழி என்ற தேஸ்யம் உள்ளது போல ஐரொப்பிய பிற மொழி பேசும் நாடுகளுக்கு ஆங்கிலம் மேல் அத்தனை வெறுப்பு. எனக்கோ ஆங்கிலம் தவிர வேறு ஐரோப்பிய மொழிகள் தெரியாது ( இன்னமும் தான் :) ).

அப்போது சிலர் கூறுவர். ஜெர்மனோ இல்லை கொஞ்சம் ரஷ்யன் தெரிந்தால் இங்கு சமாளிக்கலாம் என. கொஞ்சமும் ஸ்னானப்ரப்தியே இல்லாத வேறு குடும்பத்தை சேர்ந்த மொழி அது.  அது போல அவர்களுக்கு ஆங்கிலம் என்றால் பிணக்கு. இருப்பினும் வலுவில் ஆங்கிலத்திலேயே உரையாடுகிறார் லீஸா. என்ன காரணம் என ஊகித்தேன். படம் எடுப்பவர் இந்தியாவில் இருந்து வந்திருப்பதால் தாம் உரையாடுவது அவருக்கு புரிய வேணும் என்று கருதி பேசியிருக்கலாம். இடையிடையே அவர்தம் மகள் சொற்களை எடுத்துக் கொடுக்கிறார். உண்மையைச்சொன்னால் அவரின் பெயரும் அவர்தம் ஓவியங்களும் எனக்குப் பரிச்சயமானது இந்த ஆவணப்படத்தின் மூலமாகத்தான். ஒருவேளை இதையும் அவர் ஊகித்திருக்கலாம் உலகம் முழுக்க பரவ ஆங்கிலத்தில் தான் பேசவேணும் என்று. மொழி மற்றும் சொற்களுக்கு முன்னரே கலை தோன்றிவிட்டது என்று அறுதியிட்டு கூறுகிறார் லீஸா. இதுவும் கூட  காரணமாகக்கூட இருக்கலாம்.

இருப்பினும் என்னியோ மரிக்கொன் தமது 80ஆவது வயதில் ஆஸ்கர் பரிசு மேடையில் தம் தாய்மொழியான இட்டாலியனிலேயே பேசியது எனக்கு நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு கலைஞனுக்கும் ஒவ்வொரு கருத்து.

முதற்கணவர் உடல் நலக்குறைவால் விரைவில் இறந்துவிட்டதையும் பின்னர் ஒரு பெயின்டருடன் தாம் இணைந்து வாழ்ந்ததையும் குறிப்பிடுகிறார். இரண்டாவது உறவு அத்தனை சுகமாயில்லை. அந்த பெயின்ட்டர் இவரை கீழ்ப்படிந்து நடக்கும் படி பணித்ததையும் , தமது ஓவியங்களின் மீது பொறாமை கொண்டதாகவும் வருந்துகிறார். தம்பதியருக்குள் இப்படி ஒரு பிணக்கு. Jealous என்ற சொல்லை ஜெலூஸ் என்று உச்சரிக்கிறார். பெண்கள் ஆணை சார்ந்திருக்கவேணும் , பணம் சம்பாதிப்பது ஆணுக்குரியது(ஹ்ம் அங்குமாடா இதெல்லாம் ?!) இப்படிக்கும் இதெல்லாம் 70-80களில் நடக்கிறது. பின்னர் அந்த வலிகொடுக்கும் உறவிலிருந்து மிகுந்த பிரயாசையுடன் வெளிவந்து தம் மகள்களோடு ஓவியப்பணியை தொடர்ந்திருக்கிறார்.

Tapestry என்ற பல நிறங்கள் கொண்ட நூல்களை சட்டகத்தில் வைத்துக்கொண்டு அதில் ஓவியங்களை உருவாக்குதல் இவரின் சிறப்பு. க்ராபிக் டிசைன்ஸ், ஓவியங்கள் என பல படிப்புகளை கல்லூரியில் பயின்று பின்னர் அதையே தொழிலாக கொண்டிருக்கிறார் லீஸா. தமது முதற்கணவர் வேண்டுகோளுக்கிணங்க தாவரவியல் ஓவியங்களை வரைந்திருப்பதை காண்பிக்கிறார். அவர் ஒரு தாவரவியல் நிபுணராக இருந்திருக்கிறார் எனினும் 36 வயதில் இறந்து விட்டதை நினைவு கூர்கிறார். இந்த டாபிஸ்ட்ரி பெண்களுக்கான கலை என்பதில் உறுதியாக இருக்கிறார். இயல்பிலேயே நெய்தலில் பெண்களே சிறந்து விளங்குகின்றனர் என்றும் கூறுகிறார்.

டாப்பிஸ்ட்ரி மட்டுமல்லாது கண்ணாடியை சிறு கத்தி கொண்டு கீறி அதில் ஓவியங்களை உண்டாக்கி பின் வண்ணம் தீட்டும் கலையும் இவருக்கு கைகூடி வந்திருக்கிறது. அத்தனை தேவாலயங்களிலும் இந்த வகை ஓவியங்களைக்காணலாம். வெளிப்புற வழி சூரிய ஒளி அக்கண்ணாடியில் பட்டு சர்ச்சுக்குள் படரும் நிழலில் ஓவியம் துலங்கும். அத்தனை வண்ணங்களும் ஜெகஜ்ஜோதியாக ஒளிரும். நான்கு காலங்கள் என்ற ஓவியம் நான்கு கண்ணாடிகளில் செய்து அதை சர்ச்சின் ஜன்னல்களில் பொருத்தி வைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.பதினைந்துக்கு பத்தடி என்ற அளவில் இந்த ஓவியங்கள் அமைந்திருக்கின்றன.

கம்ப்யூட்டர் க்றாபிக்ஸ் பற்றி அத்தனை விருப்பின்றியே பேசுகிறார். 80களில் அப்போது வெளிவந்த தொழில் நுட்பத்தை அவர் வெறுத்திருக்கிறார். அந்தச்சமயமே அவர் மரபு நோக்கி நகர்ந்து ட்ரெடிஷனல் ஓவியங்களை டாபிஸ்ட்ரியில் நெய்யத்தொடங்கியிருக்கிறார்.  உலகம் முன்னோக்கி கலைகளை வேறு தளத்துக்கு எடுத்துச்செல்ல முற்படும் போது அவர் பின்னோக்கி தன்முனைப்புடன் தம் கைகள் கொண்டு உருவாக்கும் கைவினைக்கலஞராக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முனைந்திருக்கிறார்.

அவர் கண்களில் அந்த வெறுப்பு மண்டிக்கிடப்பதை பார்க்க முடிகிறது. அதுவரை பென்சிலும் பேப்பருமாக வரைந்து கொண்டிருந்தவர் , மிகுந்த உடலை வருத்தும் டாப்பிஸ்ட்ட்ரியில் கவனம் செலுத்தத்தொடங்கி அவரின் புறங்கைகள் உள்ளுக்குள் வளைந்து போயிருக்கின்றன. கூன் விழுந்து நெஞ்சு முன்பக்கம் நகர்ந்து உருவம் சொல்லிக்கொள்ளும் படியாகவே இல்லை அவருக்கு, கணினியும் தொழில் நுட்பமும் எத்தனை வெறுப்பை அவருள் விதைத்திருக்க வேணும் என்பது தெளிவு. விரல்களும் புறங்கைகளும் அந்த க்றோஷா/கொண்டை ஊசிபோல வளைந்து போனதன் காரணமாக வழக்கமாக வாசிக்கும் பியானோவை இப்போதெல்லாம் வாசிக்க முடியவில்லை என வருந்துகிறார்.

டாப்பிஸ்ட்ரி தவிர, தனியாக உள்ளூர் ஸ்விஸ் கடிகார நிறுவனங்களுக்கு லெட்டர் பேடுகளும், லோகோக்களும் வரைந்து கொடுத்திருப்பதை ஆர்வத்துடன் காட்டுகிறார். எல்லாவற்றிலும் ஒரு தனித்தன்மை காணப்படுகிறது. பின்னர் விஸ்வநாத்துடன் காரில் பயணித்து தமது ஓவியங்கள் நிறுவப்பட்டிருக்கும் நிறுவனங்களுக்கு அழைத்துச்சென்று காண்பிக்கிறார். ஒரு பெரிய டப்பிஸ்ட்ரி வொர்க், கிட்டத்தட்ட 40 அடிகள் உயரமும், 10 அடி அகலமும் கொண்ட டாப்பிஸ்ட்ரியை ஓவியக் கண்காட்சி நடக்கும் ஆர்ட் கேலரியில் காண்பிக்கிறார். ஆறு மாதங்களுக்கு மேலாக அதற்கென உழைத்திருப்பதாக கூறுகிறார்.

இப்படிப்பட்ட கலையால் சமூகத்திற்கு என்ன பயன் என்ற விஸ்வநாத்தின் கேள்விக்கு , இதனால் ஒரு பயனும் இல்லை எல்லாம் எனது விருப்பத்தின் பேரில் செய்யப்பட்டவையே எனத்தெளிவாக பதிலளிக்கிறார் லீஸா. இருப்பினும் ஸ்விஸ் உள்ளூர் கலைகளில் வேறு வெளிநாட்டுத்தாக்கங்களை குறித்து அச்சம் தெரிவிக்கும் அதே லீஸா, கொரியன் பாதிப்பில் தாம் ஒரு டாப்பிஸ்ட்ரி செய்திருப்பதையும் காண்பிப்பது நகை முரண். இருப்பினும் இவரின் மகள்கள் யாரும் இப்பணியை தொடராது இசை மற்றும் இன்னபிற கலைகளை பயிற்சி செய்பவர்களாகவே இருக்கின்றனர்.  ஒரு விஷயம் சொன்னார் விஸ்வநாத், பொதுவாக தாயை பேட்டி எடுக்கும்போது மகள்களோ/மகன்களோ கூட இருப்பதில்லை தாமுண்டு தம் வேலையுண்டு என்றேயிருப்பது மேற்கத்திய கலாச்சாரம், ஆனால் இங்கு தலைகீழ். கூடவே பயணிக்கின்றனர் ஆவணப்படம் முழுக்க.

பின்னர் படம் முடிந்ததும் விஸ்வநாத் பார்வையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். நல்ல சுவாரசியமான கேள்விகள் வந்தன. அனைத்திற்கும் பொறுமையாக பதிலளித்தார். எனது கேள்விகள் இவை, ஸ்விஸ்ஸீல் நிறைய கலைஞர்கள் இருந்த போதிலும் லீஸாவை தேர்ந்தெடுத்தது ஏன் ? சமூகத்திற்கு என் கலைகள் ஏதும் செய்யப்போவதில்லை என லீஸா கூறுகிறார். அதே கேள்வியை உங்களிடம் (விஸ்வநாத்திடம்) கேட்பின் என்ன பதிலுரைப்பீர்கள், இந்த டாக்குமென்ட்ரியை பார்க்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்ததா (ஏனெனில் அவர் 2009-ல் மறைந்து விட்டார்). லீஸாவின் பணியில் அவர்தம் கலையில் ஏற்பட்ட ஈர்ப்பே அவரைப்பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்க வேணும் என்பதும், மேலும் மரபு வழி வந்த அவரின் கலைப்பயணம் குறித்தும் தாம் மகிழ்ந்ததாலும் படம் எடுக்கத்தோணியது என்றார். சமூகத்திற்கென , இந்தப்படத்தை ஒரு சிறுவன் பார்த்து அதன் மூலம் அவனின் கலையை வெளிக்கொணர இது உதவலாம் என்பதே எனது நோக்கம். இந்தப்படத்தின் ரஃப் கட்டை மட்டுமே அவரால் காண முடிந்தது,முழுக்க படம் எடுத்து/இசைக்கோர்ப்பெல்லாம் செய்து முடித்து முழுப்படமாக வருவதற்குள் அவர் மறைந்து விட்டார். பலமுறை இந்தப்படத்தின் பல வித நேரங்களில் அவரிடம் காண்பித்து பல மாற்றங்கள் செய்ததாகவும் தெரிவித்தார்.

இவ்வளவு பெரிய கலைஞர், ஒரு விக்கிப்பீடியா பக்கம் போலும் இல்லை.அவரைப்பற்றிய அவரின் ஓவியங்களின் படங்கள் எவையும் இணையத்தில் கிடைக்கவேயில்லை எனக்கு. (கிடைக்கும் படங்களும் வலைப்பூக்களும் இதே பெயரில் இருக்கும் வேறொரு அமேரிக்கப்பெண்மணியின் ஓவியங்களாகவே இருக்கிறது) ஒருவேளை அதுவே அவரின் எண்ணமாகக்கூட இருக்கலாம். ஏனெனில் கணினி கொண்டு உருவாக்கும் படைப்புகளில் அவருக்கு கிஞ்சித்தேனும் ஆர்வம் இருந்ததில்லை. விஸ்வநாத்தின் ஆவணம் மட்டுமே அந்தப்பணியை செய்திருக்கிறது. மேலும் கலை என்பது பிறரின் அங்கீகாரம் தேடுவதற்கெனச் செய்யப்படுவதில்லை , அது முட்டமுழுக்க அதை உருவாக்கும் கலைஞனுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியை கொடுக்கக் கூடியதாகவே இருக்கவேணும் என்பதே விஸ்வநாத்தின் கூற்றாக இருக்கிறது. 




.

Sunday, December 25, 2016

"Original Tamils"



நேற்று (24/12/2016) பெங்களூர் காக்ஸ்டவுன் அலொய்ஸிஸ் கல்லூரியின் அரங்கில் ஸ்டாலின் ராஜாங்கம் (அமெரிக்கன் கல்லூரி விரிவுரையாளர்) அயோத்தி தாசர் பற்றி உரையாற்றினார். நிறைய புதிய விஷயங்கள் எனக்குத்தெளிவாகின. 1800 களிலேயே அவரது பணி துவங்கி விட்டதை எடுத்துரைத்தார். "Original Tamils" என்ற வகைப்பாட்டில் தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்க்கவேணும் என்பது, பெரியார்/அம்பேட்கர் ஆகியோருக்கு முன்னரேயே விடுதலை பற்றிப்பேசியது, சிதம்பரத்தில் தீப்புகுந்து தமது பக்தியை நிரூபித்த நந்தன் ஒரு பெளத்த மன்னன் (ஆண்டான் அடிமை அல்ல), பெரும்பான்மையான இலக்கியங்கள் பெளத்த/ சமண மதத்தை சார்ந்தவை,சங்க இலக்கியங்கள் பற்றிய குறிப்புகள் மறைக்கப்பட்டவை, ICS தேர்வை இங்கிலாந்திலேயே நடத்த வேணும், இந்தியாவில் அல்ல, ஏனெனில் இந்தியர்களை ஆளுமையில் ஆங்கிலேயர்கள் சாதிப்பாகுபாடின்றி நடத்துவர் , மேலும் தாதாபாய் நவ்ரோஜி 300 கையெழுத்துகள் கொண்டே இந்த கோரிக்கையை முன்வைத்தார், அயோத்தி தாசரோ மூவாயிரத்துக்கும் மேலான கையெழுத்துகளுடன்  இந்த ஐசிஎஸ் தேர்வை இங்கிலாந்தில் நடத்துவது குறித்து கோரிக்கை முன்வைத்தார். நீதிக்கட்சியின் முன்னோடி தாசருடையது, இதைப்பற்றி பெரியாரே சில இடங்களில் கூறியிருக்கிறார்.இப்படி பல விஷயங்களை எடுத்துரைத்தார்.

கார்த்திகை தீபம் என்பது கார்' என்றால் இருள் துல' என்றால் துலக்கக்கூடிய என்ற பொருள். மேலும் அடிமுடி காணா அண்ணாமலை என்பதெல்லாம் நம்ப வைக்கப்பட்ட கதைகள். ஆமணக்கு விதையிலிருந்து எங்கனம் எள் எடுத்து பின் அதை செக்கிலாட்டி எண்ணெய் பிழிந்தெடுப்பது போல என்ற முயற்சிகள் கொண்ட எண்ணை கொண்டு எரியவைக்கப்படும் விளக்குகள் என்பதே.



திருவையாறில் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஆனை மேல் அம்பாரி வைத்து அந்த ஆனையை முதன்மையாக அணியில் வலம் வரச்செய்யும் மரபு இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. சங்கீத வைபவத்தில் இன்றும் இருமணிக்கூறு நிகழ்வாக பறையடிக்கும் மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதிலிருந்து நமக்கும் தெளிவாகலாம் தமிழ்ப்பண்ணிலிருந்து தோன்றியது அனைத்தும் என்பது.





ஸ்டாலின் ராஜாங்கம் பேராசியர் என்பதால் அவர் வகுப்பு நடத்துவது போலவே தோன்றியது எனக்கு. ஹிந்து' ரா விநோத்'தின் ஏற்பாட்டில் நிகழ்வு நடந்தது. உரை முடிந்ததும் கலந்துரையாடல். பல பேர் கேள்விகள் கேட்டனர். மாணாக்கர்களுக்கு விளக்கம் சொல்வது போல பொறுமையுடன் பதிலுரைத்தார். பின்னர் அனைவருமாக சேர்ந்து ஷாந்தி சாகரில் தேநீர் அருந்திவிட்டு வீடு கிளம்பினோம்.

 

Thursday, December 22, 2016

அழகிய சூடான பூவே


அழகிய சூடான பூவே - ரொம்ப நீட்டான பாடல். ட்ரெம்ப்பெட்டும்/சாக்ஸும், வழக்கமான பெர்குஷனும் வைத்துக்கொண்டு ஜாஸில் இசைத்திருக்கிறார். இப்பதான் அழகா ஒரு ஜாஸ் ஒண்ணு போட்ருந்தார் 'அக்கம் பக்கம் பார்'னு .இருந்தாலும் மக்களுக்கு போரடிக்கும் இதைக்கேட்டு. 02:44-ல் ஆரம்பிக்கும் அந்த வயலின் இனிமை. விஜய்க்கும் கீர்த்தி சுரேஷுக்கும் இந்தப்பாடல் டூயட்டா...கொஞ்சம் கஷ்ட்டமாத்தான் இருக்குதுங்ணா.. :) இருப்பினும் குரல்கள் புதிது! சூப்பர் சிங்கர்லருந்து யாரோ ரெண்டு பேரப்புடிச்சுக்கொண்டு வந்து பாடவெச்சமாதிரி இருக்கு :) ஹாரிஸ் ஸ்டைல்ல போட்ட மாதிரி இருக்கு. படம் பாக்கப்போனா எங்கூர்ல அதுவரைக்கும் பீகாரில் வெள்ளம் பிரதம மந்திரி போனார் கொல்லம்னு  போட்டு அறுத்துத் தள்ளிட்டு,மெயின் பிக்சர் போடும்போது ஒரு ம்யூஸீக் போடுவாங்ய சாந்தி தியேட்டர்ல அது மாதிரி இருக்கு பாட்டு ஆரம்ப இசை.

நில்லாயோ - வயலினிசையுடன் துவங்கும் பாடல் , கொஞ்சம் பாப்' மற்றும் ஜாஸ் கலவை.வெகு நாட்களுக்குப்பிறகு இசைக்கருவிக்கு முக்கியத்துவம் கொடுத்து இசைத்த மெலடி.! எலெக்ட்ரானிக் பாக்ஸ்களை காண இயலவில்லை. அருமை! பெண்பால் வெயிலோ?! வெளியூர் நிலவோ? பதினாயிரம் ஆண்டுகள் அகவை ஆயினும் இன்னும் இளங்கன்னியாக உலவும் தமிழ் வைரமுத்துவின் வரிகளில்..ஆஹா! கொஞ்சம் முன்னால 'நீர்ப்பறவை'யில்  ரகுநந்தன் இசைத்திருந்தார் 'பற பறவென பறவை ஒன்று' என! ஏறக்குறைய அதேதான். எனினும் இனிமையாக இருக்கிறது இதுபோன்ற இசை கேட்பதற்கு. 'வெரசாப் போகயில'ன்னு இமான் போடிருந்தார் விஜய்க்கென ஜில்லாவில. இப்டி ஏகத்துக்கு க்ளீஷே கிழிஞ்சு தொங்குது! இருப்பினும் ஹரிச்சரன் குரல் பாடலைக்கேட்க வைக்கத்தான் செய்கிறது!


பட்டையக்கெளப்பு - இதெல்லாம் எண்பதுகளில் ராசைய்யா இடதுகையாலயே போட்ட பாடல்களப்பா சலிக்கிறது சநா. 



பாப்பா பாப்பா - டப்பாங்குத்து! வேறொண்ணுமில்லை! இதுல விஜய் வேற பாடீருக்கார். ஹாரீஸ் கூட நல்ல பாடல் கொடுத்திருந்தார் விஜய்க்கு. கூகிள்ல தேடிப்பாக்காமலேயே கேக்கலாம் அந்தப்பாடலை. விஜய் ஆன்டனி மாதிரி ஒரு நாக்க மூக்கா, இல்ல தம்பி அநிருத் 'செல்ஃபி புள்ள' மாதிரி போட்ருக்க வேணாமா சநா. போரடிக்குதூங்ணா.


வர்லாம் வர்லாம் வா - காபாலீஈடாஆ நெருப்புடாஆ ப்ளாக்யிரஸம்டாஆ ..விட்ருங்க சநா போதும் ..இதே மாதிரி 'கொடி'ல தனுஷ்க்காகவும் ஒண்ணு போட்டு எதுக்கு இதெல்லாம்?! ஹ்ம்...இப்ப விஜய்க்காக ஒண்ணு! புதிய இசையாகத் தோன்றவில்லை.பழகிய இசை! எனக்கென்னவோ இது ரெட்ரொ'வாக இசைத்தது போலவே தோன்றுகிறது அரைத்த மாவுக்குப் பேர்தான் ரெட்ரோ'வா ?!..ஹிஹி .... 


 .


Friday, December 16, 2016

சொப்னசுந்தரி


சொப்னசுந்தரி..ஹிஹி.. பாய்ஸ் ஆர் பேக், ஆமா,, வெங்கட்பிரபு அவருக்கு  என்ன செய்ய வருமோ அத ரொம்பவே சரியா செய்திருக்கிறார். முதல் பாதில பாதிக்கும் மேல வாய்ஸ் ஓவர் தான் ஓடுது. கிரிக்கெட்டெல்லாம் பாத்து ரொம்ப நாளாச்சு எனக்கு. இருந்தாலும் ஷார்க்ஸ் டீம் ஆடுனா கண்டிப்பா பார்க்கலாம். நிதின் சத்யா ஆவேசமா , ஆமா பத்து நாள் நான் இப்டித்தான் இருப்பேன் எனக்கு ஃப்ரென்ட்ஸ்ங்க தான் முக்கியம்னு குமுறுதல் அழகு. படத்துலயே சிவா'வுக்கு தான் மொக்க ரோல்.ரெண்டு முட்டை உடையும் சீன் மட்டுமே சிரிப்பு :) சொப்னசுந்தரி சலூனுக்கு வந்திருக்கான்னு ஃபோனப்போட்டு எல்லாரையும் வரவழைக்கிற டெக்னிக் ப்ரேம்ஜியோட சொந்த டெக்னிக்காதான் இருக்கும்.ஹிஹி. அதே ஃப்ரென்ட்ஸ், அதே எடக்கு மடக்கான வசனங்கள். இருந்தாலும் ஜெய்க்கு கல்யாணம் நின்னுபோயி , யாரும் யாரையும் பாக்க வேணாம்னு முடிவு பண்ணீட்டு அப்புறம் அதே க்ரவுன்டல சண்டை போடுவதற்காக வந்துவிட்டு எல்லாருமா சேர்ந்து கல்யாணம் பண்ணி வைப்போம்னு நெகிழ்வா மாறும் சீன்..ஆஹா அற்புதம்.



இப்டி ஒரு உச்சக்கட்ட காட்சில்லாம் வெக்கிறதுக்கு பாக்யராஜைத்தவிர வேற யாருக்கும் திராணி இருக்கான்னு தெரியல. செம செம. எல்லோரும் அவங்களோட பங்கை சரியாக செய்திருக்க யுவன் மட்டுமே டக் அவுட் , படத்தின் பின்னணி முழுக்க தேனியாகி விட்டதால் ராசைய்யாவின் பழைய பாடல்களையே ஓடவிட்டு இதற்கெல்லாம் யுவன் தேவையா? ஹ்ம்... தீம் ம்யூஸிக் ஜெய்க்கு சோகம் வரும்போதெல்லாம் எரிக் க்ளாப்டனின் 'wonderful night'ஐயே ஒலிக்க விடுகிறார். 'வாழ்க்கைய யோசிங்கடா'ன்னு ஒரு க்ளாஸிக்கை இசைத்தவரா இப்படி ?!.. ஸ்கோப் இல்லாமல் இல்லை. அழகான காதல் தருணங்கள் இருக்கத்தான் செய்கிறது , அந்த உறுதிவிழாவில் கூட பாடல் எடுபடவில்லை....அந்த அருவியின் பின்னணியில் ஒலிக்கும் பாடலும்..முதல் பாகத்தின் முழு வெற்றிக்கு கீப்பராக இருந்தவர் இங்கு லெவென்த் மேன் கூட இல்லை. சோகம். வைபவ் புகுந்து வெளாட்றார். எப்டியாவது hook or crook மேட்ச் ஜெயிச்சே ஆகணும்னு ஆஹா. செம டெப்த்தான கேரக்டர்..... சென்னை 28 த்ரீ எப்ப பிரபு சார் ?!#சொப்னசுந்தரி




Sunday, December 4, 2016

சைத்தான்.....ஆ



அரே சைத்தான் கீ பச்சே.. 'சுஜாதா'வையே கொன்னுட்டியே... ஜெயலட்சூமீ... இது ஏதோ 'சித்தீஈஈ' மாதிரி படம் பூரா ஓலம் போடுது. சுஜாதா '' கதைய எப்டி முடிச்சார்னு எனக்கு ஞாபகமில்ல. ஏதோ கேப்டன் படம் இப்பல்லாம் வர்றதில்லங்கறதுக்காக இப்டியா விஜய் ஆன்டனி ?! ஆர்கன் திருட்டு,பூச்சி மருந்து கொலை,பிறன்மனை நோக்குன்னது இப்டீல்லாமா போட்டு கொழப்புறது ?

டோட்டல் ரீக்கால்னு ஒரு படம் , ஆர்னால்ட் நடிச்சது. எல்லாமே நமக்கு நினைவுகள்தானே.? எங்க ஊர் சுத்தீட்டு வந்தாலும், வெளிநாடே போனாலும் ஒரு மாசம் தாய்லாந்து மசாஜ் அடிச்சாலும் கடைசிக்கு மிஞ்சுவது நினைவுகள் தான். வேற்றுக் கிரகங்களுக்கு பயணம், பயணம்னா நெஜமாவே போறதில்லை.. அந்தப் பயணம் பற்றிய நினைவுகள் உங்கள் மனதில் பல ஆண்டுகள் அழியாதிருக்கும்னு ஒரு கார்ப்பொரேட் கம்பெனி விளம்பரம் பாத்துட்டு ஆர்னி அங்க போவார், ஊர் சுத்துறதுன்னா கூடவே ஒரு அம்மணியும் வருவாங்க , யாரை வேணாலும் செலக்ட் பண்ணுங்கன்னு நிறைய படங்கள் காட்டுவார்கள்.  

ஆர்னி கொஞ்சம் எடக்கு மடக்கான பொண்ண தேர்ந்தெடுத்து அவா'வுடன் பயணிக்க நினைப்பார். ஊசி ஏற்றப்பட்டதும் மூளையில் படாத இடத்தில் பட்டு அதே பிறப்பில் அவருக்கு வலுக்கட்டாயமாக அழிக்கப்பட்ட தனது செவ்வாய்க்கிரக போராளியின் நினைவு வந்துவிடும். அப்புறம் அடுத்த ராக்கெட் பிடிச்சு செவ்வாக்கெரஹம் போயி எதிரிய அழிப்பார்னு வெச்சுக்குங்களேன்.. என்ன சைத்தான் மாதிரி இருக்கா...ஹிஹி.. அதே தான்.. ஆனா ஆர்னி 18 இஞ்ச் ஆர்ம்ஸ் வெச்சு சொம்மா மெரட்டீருப்பார். இங்க விஜய் ஆன்டனி ..சரி வேணாம்..ஆ..!


.