Sunday, June 25, 2017

மேற்கே நடந்தேன்



பாலையை நடந்தே கடந்த முகமது
கந்தனிடம் மயிலைக்கேட்டிருக்கலாம்
சிலுவையுடன் பல கல் தொலைதூரத்தை
தோளில் சுமந்தே கடந்த ஏசு
அதே கந்தனிடம் தொற்றிக்கொள்ள
வேண்டியிருக்கலாம்

*** 

உன்
நிர்வாணத்தைப்
பார்க்கத்தூண்டும்
ஆடை

*** 

மலையில்
வளைந்து நெளிந்து
செல்கிறது பாதை
யாரைத்தேடி ?

*** 

காகம் அடைகாத்த
குயில் நீ
குயில் அடைகாத்த
காகம் நான்

*** 

மேற்கே நடந்தேன் இடித்தான் ஒரு கம்யூனிஸ்ட்
தெற்கே நடந்தேன் இடித்தான் ஒரு ஆர் எஸ் எஸ்
வடக்கே நடந்தேன் இடித்தான் ஒரு காங்கிரஸ்
கிழக்கே நடந்தேன் இடித்தான் ஒரு வஹாபி
குறுக்கே நடந்தேன் இடித்தான் ஒரு மாவோயிஸ்ட்
எம்பிக் குதித்தேன் இடித்தான் ஒரு பிஜேபி
சும்மா இருந்தேன் இடித்தான் ஒரு திராவிடன்

*** 

கிளிகள்
பேசத்தொடங்கியதும்
கூண்டுகளில்
அடைபட்டன

*** 

இன்மையை எழுதுகிறேன்
அதில்
இருக்கிறாய்
*** 

குடையை
மடக்கி வைத்துவிட்டு
மழையில் நடக்கலாம்
கொஞ்சம் குடையும்
நனையட்டும்

*** 


 மலைகள் இதழில் வெளியானவை

Wednesday, June 21, 2017

சர்வைவா!




எனக்கே தெரியாம சாயங்காலம் ஆறுமணிக்கே லிரிக்ஸ் வீடியோவோட பாட்டை ரிலிஸ் பண்ணி விட்டான் தம்பி அநிருத் :) நல்லவேளை 'நெருப்புடா' புகழ் அருண்ராஜ் காமராஜ் பாடவில்லை இந்தப்பாடலை. இல்லன்னா ஒரே க்ளீஷேவா போயிருக்கும். கவனமாத்தவிர்த்து விட்டான் தம்பி :) யோகிபி - திரும்ப வந்திருக்கார். அவரோகணம் கீழிறங்கும் ஸ்ருதிகள் இல்லாத பாடல் போல இதுவும் ஒன்று. ஒவ்வொரு நிமிடத்துக்கும் இடைவெளியில் மீண்டும் மீண்டுமாக மேலேயே பயணித்துக்கொண்டிருக்கும் பாடல். இப்டி வெச்சுக்கலாம் , யுவன் சரோஜால 'நிமிர்ந்து நில்' அப்டீன்னு ஒரு பாட்டு போட்ருந்தார். இந்தப்பாடல் கூட சொல்லலாம் (யுவனின் இன்னொரு பாடலும் அதேபோல மேல் ஸ்ருதியிலேயே நின்றுகொண்டிருக்கும் 'இறகைப்போலே அலைகிறேனே' இங்க காதல் வீழ்ச்சியைக்கண்டு விடக்கூடாது என்பதற்காக வெறுமனே மேல் ஸ்ருதி மட்டுமே,,மேலேயே முன்னேறிச்செல்லவேணும் என்று ..ஹிஹி ) அப்புறம் 'நாடோடிகள்' படத்துல நம்ம சுந்தர் சி பாபு பாடகர் 'சங்கர் மஹாதேவனை'ப்பாட வைத்து 'சம்போ சிவசம்போ சிவசிவசம்போ'ன்னு ஒரு பாட்டு போட்டிருந்தார்


இவையெல்லாம் ஒரு வகையிலான பாடல்கள், எழுப்புதல் கூட்டம் போல..ஹிஹி.. புரட்சி வெடிக்கும், வென்றே தீருவோம் துவண்டு விடல் கூடாது என்று அறிவுரை சொல்லாது உணர்வில் வெளிக்காட்ட வைக்கும் அற்புதப்பாக்கள் :) வணிக நாயகனுக்கு தோல்வி இல்லை என்பது போல எப்போதும் மேலேயே சென்றுகொண்டு இருப்பார். ஆஹா! என்னே ஒரு சிந்தனை!


இங்கு முகப்பிசை 'டெய்லர் ஸ்விஃப்ட்டின் - Say you'll remember me’ பாடலை ஞாபகப் படுத்துகிறது. ஸ்விப்ட்டின் பாடலில் “Standing in a nice dress,Staring at the sunset, babe “ இந்த இரண்டு வரிகளைப்பிசைந்து எடுத்து வைத்துக் கொண்டது போன்ற முகப்பிசை. பின்னர் தொடரும் அந்த லலலலா ல்லலாஆவும் :) இந்த ஒல்லிப்பாச்சி ஸ்விஃப்ட் இப்ப புதுசா பாட்டு ஒண்ணும் ரிலீஸ் பண்ணலை. இப்போதெல்லாம் சின்னக்குட்டி நாத்தனார்கள் தான் கோலோச்சிக் கொண்டிருக்கின்றனர். ஏரியானா க்ராண்டி அப்புறம் செலீனா கோமெஸ் (ஆஹா..ஹ்ம்) போன்ற சிறு பெண்மணிகள் ..ஹிஹி.. :)

யோகி பி இப்பதான் பொல்லாதவன்ல ஒரு ரீமிக்ஸ் ஐயா எமெஸ்வி'யின் 'எங்கேயும் எப்போதும்'னு பாடீருந்தார். என்னவோ அதையே ஞாபகப் படுத்துகிறது , பாடல் அதற்கு அருகில் கூட இல்லாத போதிலும், அவர் குரலும் பாடும் விதமும் கூட ஒரு காரணமாக இருக்கலாம் . பாடலை இடையில் தம்பி அநிருத் தான் பாட்றான். இத்தனை முரட்டுக்குரலுக்குள் சிக்கி எலி போல எழும்புகிறது அவனின் குரல் . லல்லாலான்னு லல்லாபி பாட்றதெல்லாம் ராசைய்யா காலத்துலயே முடிஞ்சு போச்சே.. இப்ப திரும்ப தூசி தட்டி கொண்டு வந்துருக்கான் போல :) ஆனாலும் இந்த இடங்களில் இசை தெறிக்கிறது ட்ரெம்ஸும் முறுக்கேற்றும் எலெக்ட்ரிக் கிட்டாரின் பாஸுமாக. ஆஹா..! மேலும் 'சென்னை சிட்டி கேங்க்ஸ்ட்டா' பாட்டில் வரும் You ain’t got no goa beach You ain’t got no sharukh khan ,You ain’t got no India gate என்ற வரிகள் போன்று இங்கு 'முயன்றால் தான் சாத்தியம்' எனும் சில இடங்களில் தெரிவதும் குறை.

ஆனாலும் எவ்வளவு சொன்னாலும் நம்ம தர லோக்கலு 'ஆலுமா டொலுமா' மேரி இல்ல கண்ணு ! இந்த ராப்/ஹிப் ஹாப்பை எத்தன வாட்டி தான் கேக்றது ?! ஹ்ம்..! Gotta Getup ! #Surviva


Saturday, June 17, 2017

நாயினும் கடையேன்


இன்று பெங்களூரில் மதியம் மூன்று மணிக்கு தொடங்கிய மழை நிற்காது பெய்து கொண்டேயிருந்தது. நிகழ்ச்சி 0630க்கு எனினும் அத்தனை மழையில் ட்ராஃபிக் தொநதரவில் போய்ச்சேரவே 0635 ஆகிவிட்டது. உள்ளே நுழையும் போது மிகச்சரியாக புத்தக வெளியீடு தொடங்கிவிட்டது. பெங்களூர் இன்டர்நேஷனலில் நடைபெற்ற திரு தியோடர் பாஸ்கரனின் 'the book of indian dogs' நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். ராமச்சந்திர குகா வெளியிட்டார். பிறகு தியொடர் அவர்களின் பேச்சு. நாய்களில் இத்தனை வகைகளா?..என்னென்னவொ பெயர் சொல்லி அவைகளின் குணநலன்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

நிறைய சுவாரசியமான தகவல்கள். இந்தியாவில் போலீஸ் நாய்கள், ராணுவத்துக்கு பயன்படும் நாய்கள் அனைத்தும் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்படுவதாக தெரிவித்தார். இன்டியன் ப்ரீட்ஸ்களை தயார்ப்படுத்துவதில்லை. எகிப்து மற்றும் மொகஞ்சதாரோ காலங்களின் வரலாற்று குறிப்புகளை எடுத்து படங்களுடன் காட்டினார். தமிழ்நாட்டில் நடுகற்கள் நாய்களைப்பற்றியும் குறிப்பிடுபவனாக இருப்பதையும் காண்பித்தார். நாய்க்கென கோவில் கட்டியிருப்பது,நாய்களை தம் பிள்ளைகள் போலப்பார்த்துக்கொள்வது என தொடர்ந்தும் பேசினார். வெள்ளைக்காரர்கள் எப்போதும் இன்டியன் ப்ரீட்ஸ் ஒரிஜினல்ஸ் என அழைக்கத் தவறுவதில்லை

பழங்காலத்திலேயே நாய்களை வளர்ப்பு மிருகங்களாக வீட்டில் வைத்து பாதுகாக்கும் முறை இருந்து வந்தது. அவற்றின் கழுத்தில் பட்டி இட்டு பெட் டாக்ஸ்- களாக அவற்றை வளர்த்ததும் தெரிய வருகிறது. இந்தியாவில் அவை இன்னமும் வேட்டையாடவும், பாதுகாப்புக்கெனவுமே அதிக அளவில் பயன்படுகிறது.


நமக்குத்தெரிந்ததெல்லாம் தெரு நாய்கள் தான். இரவில் நடக்கமுடியாதபடி ஊரையே ஆண்டுகொண்டிருப்பவை. கிரீஷ் கர்னாட் வந்திருந்தார். அமைதியாக அமர்ந்து நிகழ்வுகளை கவனித்துக்கொண்டிருந்தார். ராமச்சந்திர குகா தமிழராம்.( எனக்கு இப்பத்தான் தெரியும்) பரபரவென இருக்கிறார், ஒரு இடத்தில் நிலை கொள்ளாது :) புத்தகத்தில் இருந்து குறிப்புகள் எடுத்துக்காட்டி பேசினார். வீரப்பனைப்போல வடநாட்டில் ஒரு கொள்ளையன் இருந்ததாகவும் அவனது அடியாட்களை அவன் வளர்த்து வந்த நாய்களே பிடித்துக்கொடுத்ததாகவும் ஜிம் கார்பெட் புத்தகத்தில் இருக்கிறது, (இந்த சாட்சிகளை எங்கனம் ஒத்துக்கொள்ளாதிருப்பது என அடியாட்கள் சரணடைந்ததாகவும்.)

கொள்ளையனைப் பிடித்தாகிவிட்டது . அவனின் அடியாட்கள் தப்பித்து ஓடும்போது போலீஸ் சுட்டதில் ஒருவனுக்கு மூக்கை அறுத்துக்கொண்டு போயிற்று. இந்த இருவரும் வெளியூர் தப்பிச்செல்ல ரயில்வே ஸ்டேஷ்னில் காத்திருந்த போது அங்கு தேடுதல் வேட்டைக்கு மாறு வேடத்தில் வந்த கமிஷ்னர் , வாருங்கள் ரயில் வர இன்னமும் நேரமிருக்கிறது என்றழைத்துக்கொண்டு அவர்களை வீட்டுக்கு கூட்டிச்சென்றார் அங்கு அந்த கொள்ளைக்காரனின் நாய் இருந்தது இவர்களை பார்த்ததும் பழக்க தோஷத்தில் வாலாட்டிக்கொண்டு கால்களை நக்க ஆரம்பித்திருக்கிறது. இதற்கெனவே காத்திருந்த அதிகாரி அவர்களைக்கைது செய்தார்.
 
மேலும் கொள்ளைக்காரனை தூக்கிலிடும்போது கடைசி ஆசையாக தமது வளர்ப்பு நாயை யாரேனும் வளர்க்க வேணும் என்று கேட்டுகொண்டான் என்ற சுவாரசியமான தகவல்கள் பகிர்ந்து கொண்டார். வீரப்பன் நாயேதும் வளர்த்தானா என்றவரிடம் , அப்படி வளர்த்திருந்தால் சீக்கிரம் பிடிபட்டிருப்பான் என்றார் பாஸ்கரன்.


 
புத்தகத்தில் இருந்து சில துளிகள். திருவாசகத்தில் மாணிக்கவாசகர் , பல இடங்களில் 'நாயினும் கடையேன்' என்ற பதத்தை பயன்படுத்தியிருக்கிறார். நாய்களையும் , பசு மாடுகள் இன்னபிற வளர்ப்பு மிருகங்களை வீட்டினுள் வைத்து வளர்ப்பது தமிழரின் வழக்கம். இது தெரியாது ஜல்லிக்கட்டுக்கு தடை என அறிவிலித்தனமான விஷயங்களை எதிர்க்க தமிழ்நாடே போராட வேண்டியிருந்தது.

நிறைய ஆதாரங்களைக்காட்டி பேசினார் பாஸ்கரன். தெருவில் தனியே சுற்றிக் கொண்டிருப்பவைகளிலும் வகைகள் உள்ளன. சென்னையில் ஒரு முறை தெருநாய்களை சுட்டுத்தள்ளவேண்டும் என அரசு முடிவெடுத்தபோது அதை எதிர்த்து அனிமல் ரைட்ஸ் குழுவினர் போராட்டம் நடத்தினர், அங்கு வந்த அப்போதைய கமிஷ்னர் இதில் எத்தனை பேர் அந்த தெரு நாய்களை தத்தெடுக்கத்தயார் எனக்கேட்ட போது நான்கே பேர் கை தூக்கினர். பின்னர் கூட்டம் முடியும்போது அவர்களும் காணாது போயினர் என்ற போது அரங்கில் சிரிப்பலை. தெரு நாய்கள் என்ற பதத்தை அவர் பயன்படுத்தவேயில்லை. யாரும் சொந்தம் கொண்டாடாத நாய்கள் என்றே கூறுகிறார். (Owner less Dogs) 

மேலும் நாய்களுக்கு 'ரேபிஸ்' வராது தடுக்க ஆண்டுதோறும் ஊசி போட வேண்டிய கட்டாயம் இருக்கிறது . அது ஒரு முறையில் சரியாகும் விடயமில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஊசி போடவேண்டும், அப்போது தான் தடுக்க இயலும்,எந்த அரசு செய்கிறது தெரு நாய்களின் கூட்டத்தை தடுக்க கருத்தடை செய்யலாம் என்ற யோசனையும் சரிவர நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆஸ்திரேலியாவில் ஆடுகளை வேட்டையாடும் நாய்களைச்சுட ஹெலிகாப்டர்களில் செல்வார்கள் என்றார். அங்குள்ள கிராமத்தினர் அவை வேட்டை தான் ஆடுகின்றன. ஆடுகளைப்புணர அல்ல. அதனால் அவற்றை கொல்லுவது பாவம் என்று தடுத்துவிட்டனர்.


 
ராமச்சந்திர குகா பேசுகையில் தமிழனாக இருந்த போதும் இதுவரை தமிழில் எழுதவில்லை. எனக்கு தமிழ் எழுத வராது என்றவர், பாஸ்கரனை நோக்கி இவர் இருமொழியில் எழுதும் வல்லவர். இவரும் ஒரு ரேர் ப்ரீட் என்றார் :)

பாஸ்கரன் வேலை பார்த்தது போஸ்ட் ஆபீஸ் ஜெனரலாக. அவர் இருந்தவரையில் ரேர் ப்ரீட்ஸ் நாய்களின் தபால் தலைகள் கொண்டு வர பகீரத முயற்சி எடுத்தும் அரசு செவி சாய்க்கவில்லை. அவர் ஒய்வு பெற்றதும் பின்னர் கமிட்டியில் உள்ளவர்களின் சிபாரிசின் பேரில் அவை தற்போது கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார். சில தபால் தலைகளின் புகைப்படங்களை காட்டினார்.


பின்னர் பேச்சைக்கேட்க வந்தவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். வெளிநாட்டில் இருந்து 'ஹஸ்கி' நாய்கள் வாங்கி வந்திருப்பதாகவும் அவை இங்கு நிலைக்குமா என்ற கேள்விக்கு அவை எப்போதும் தம்மை இருக்கும் இடத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளும் திறனுள்ளவை என்றவர், லடாக் பகுதியில் உள்ள நாய்களை வளர்க்கவென இங்கு கொணர்ந்தபோது சென்னை மெரீனாவில் அத்தனை வெய்யிலில் தம்போக்கில் விளையாடிக்கொண்டு இருந்தன என்றார். இந்திய நாய்களை ஏன் உள்ளூர் காவல்/ராணுவப்பயன்பாட்டுக்கு ஏற்றுக்கொள்வதில்லை என்ற கேள்விக்கு அவற்றுக்கு பயிற்சி கொடுக்க யாரும் முன்வருவதில்லை. அலட்சியமும் ஒரு காரணம். 1972ல் ஒரு வழக்கில் உள்ளூர் கோம்பை வகை நாயை சாட்சியாக கொண்டு வந்து நிறுத்திய போது 'நாட்டு நாயெல்லாம் சாட்சி சொல்லவந்துருச்சா' என்று நீதிபதி கேலி பேசியதாக ஒரு செய்தி இருக்கிறது என்றார்.



.

Sunday, June 11, 2017

Its complicated’


கேமிலா கேபெலொ' இவங்க 'ஃபிஃப்த் ஹார்மனி' ட்ரூப்ல ரொம்ப ஆக்டிவா இருந்தாங்கோ :) அப்பால வழக்கம்போல உள்ளுக்குள்ள பூசல் வந்து வெளீலே வந்துட்டாங்க. எனக்கு தீனி போட்றா மாதிரி எந்த வாய்ப்பும் இல்லை கேர்ள் பேண்ட்ல(girl band), அதான் தனிப்பாடல் திரட்டு போட்றேன்னு வெளீல வந்துட்டா. கூட்டத்தோட கோயிந்தா போட்றது யாருக்குத்தான் புடிக்கும் ?!...ஹ்ம்….இந்தப்பாட்டு ராப்'பும் கொஞ்சம் பாப்'பும் சேர்ந்த கலவை. Its complicated’ அப்டீன்னு சொல்றப்போ என்னா குழைவு அவா வாய்ஸ்ல. ஹ்ம்..அனுபவிக்கணூங்ணா. மஷின் கன் கெல்லி ராப்' பாட்றார். கொஞ்சம் ஹிப் ஹாப்' இருந்தாலும் கறுப்பினப் பாடகர்கள் போல அத்தனை அட்சர சுத்தம் இந்த வெள்ளைபயலுஹ கிட்ட இருக்கிறதில்ல. அப்பப்ப அந்தாதி' யும் பாடுவார் , கேமிலா முடிக்கும் வார்த்தையை வேறு ஒலியில்/வேற மாதிரி சொல்லிப்பாடுவார். அருமை.. !

எவ்வளவுதான் இருந்தாலும் 03:02 லயும் 03:04லயும் அந்த ஹஹ்ஹா ஹெஹ்ஹ்ஹே' மட்டும் இல்லாம இருந்தால் பாட்டு எங்கயோ போயிருக்கும். இந்த மாதிரி பாமரத்தனமான செய்கைகளாலதான் பாட்டு நாசமாவது. எல்லாருக்கும் அனுபவம் வர்ற வரைக்கும் இம்மாதிரி தப்பெல்லாம் பண்ணிண்டு தானிருப்பா :) தம்பி அனிருத் இதே மாதிரி தான் அப்பப்ப பண்ணிவெப்பான்.ஹிஹி.. 'நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே' பாட்டுல அத்தனை அருமையான மெலடீல இடைல புகுந்து பாமரத்தனமா 'கத்தாள முள்ளா முள்ளா'ன்னு கிராமிய வரிகளை கொஞ்சமும் இந்தப்பாடலின் அலைவரிசைக்குப் பொருந்தாததை வைத்து ..ஹ்ம்.. என்ன சொல்றது.! அதுக்குத்தான் எக்ஸ்பீரியன்ஸ் வேணூங்கறது :)



____________________________________________________________________________

Sweet Escape


எத்தனையோ காதல் பாடல்கள்..ஹ்ம்.. இந்த வீடியோ சீக்வென்ஸ் பிரமாதம். ட்ராஃபிக் லைட்ஸ்லருந்து சிவப்பு மனிதனும் , பச்சை மனுஷியும் காதலைக்கொண்டாட என்னவெல்லாமோ செய்கிறார்கள். :) பச்சையும் சிவப்பும் எதிர் துருவங்கள்..என்னா ஒரு குறியீடு’'ங்ணா ;) சாலையில் கிடத்தி வைத்திருக்கும் சைக்கிளை உரித்தெடுத்து பயணிக்கின்றனர். அட அடா! 'நத்திங் கேன் ஸ்டாப் அஸ் நவ்' காதலைச்சொல்லும் வழி ட்ராஃபிக் சிக்னல்ஸ் ;)

சைக்கிள் மிதித்து களைத்துப்போகும் போது , சிக்னலில் இருக்கும் பைக், பின்னர் கார் சிம்பல் என ஒவ்வொன்றாக எடுத்து பயணிக்கின்றனர். ஆஹா! மேன் ஹோலைத்திறந்து அனைவரும் பார்ட்டி கொண்டாடுகின்றனர். குதிரைகள், நாய்கள் அனைத்துமென ஒவ்வொன்றாக சிம்பல்களிலிருந்து இறங்கி வந்து ..!!அட.. பாடல் முடிந்ததும் அவரவர் இடத்தில் சிக்னல் பலகைகளில் சென்று அமர்ந்துவிடுகின்றனர்.! #'ஸ்வீட் எஸ்கேப்'