Saturday, July 29, 2023

மாமன்னன்


                     Mamannan audio launch to happen on this date- Cinema express

மாமன்னனில் இரண்டு காட்சிகள். மிக முக்கியமான காட்சிகள் எனச் சொல்லப்பட்டவை. ஒன்று வடிவேலுவை உட்காரச்சொல்லாமல் நிற்க வைத்தே பேசுவது, இன்னொன்று தலைவியின் இலவசப் பாடசாலையை அடித்து நொறுக்குவது.

நாற்காலியில் வடிவேலுவை உட்காரச்சொல்லவில்லை சரி. அவர் மகன் உதயநிதியை உட்காரப்பா பேசலாம் எனச்சொல்லத்தானே செய்கிறார் ஃபகத். தாழ்த்தப்படுத்தப்பட்ட சாதியைச்சேர்ந்த ஒருவரின் மகனை தமக்கு சமமாக உட்காரச்சொல்லத்தானே செய்கிறார் ஃபகத்?.. கொதித்தெழுந்தது மகன், பாசம் காரணமாக இருக்கலாம். தம் தந்தைக்கு சரியான மரியாதை தராததால் அடித்து உடைக்கிறார்.சரி ..இது எப்படி ரொம்ப முக்கியமான காட்சியாக பிரகடனப்படுத்தப்பட்டது? அடிப்படையில் சிறு நெருடலெனக்கு. தம்மை உட்காரச்சொன்னது பிடிக்கவில்லையா? அடிப்படையில் தடுமாறும் காட்சி இது.

இன்னொன்று கீர்த்தியின் இலவசப்பாடசாலை எதிரிகளால் அடித்து நொறுக்கப்படுகிறது. சரி. அது எதிரியின் பண்பு. அதற்காக இல்லாவதவர்க்கு நன்மை செய்வதாக கூறிக்கொள்ளும் ஒரு பெண்/படித்தவர் இன்னொரு பாடசாலையை/மாணவர்கள் படிக்கும் பாடசாலையை உதயநிதியுடன் கூடவே சென்று புத்தகம்/கணினி என ஒன்றையும் விடாது அடித்து நொறுக்குகிறாரே எப்படி ? என்னால் செரிக்கவே இயலவில்லை. ஒரு ஆசிரியரின் இடத்தில் இருப்பவர் இப்படி நடந்துகொள்வாரா?

ரஹ்மானின் இசை எனப்போட்டிருந்தது. உள்ளே கேட்கும்போது எல்லாம் ராசைய்யாதான் நிறைந்திருக்கிறார். இதற்கு ராசைய்யாவே இசைத்திருக்கலாம். மண்ணுடன் ஒட்டி உறவாட அவரின் இசை தான் பொருத்தம். படத்துக்குள் ஒரு பொருந்தாத ஜீவன் என்றால் அது ரஹ்மான் தான்.

                 Mamannan Trailer: सच्चाई सुनने वाले कान तलाशता एक गीत, दलित स्ट्रगल और  'विरासत' कनेक्शन - mamannan trailer legacy of dalit struggle a gut  wrenching song with fahadh faasil udaynidhi stalin face off

சுரேஷ் கண்ணன்,வடிவேலுவை நாகேஷுடன் ஒப்பிட்டு உயரம் போதவில்லை என ஆதங்கப்பட்டிருந்தார். நாம் வடிவேலுவை பார்த்ததே அங்கனம் தான். போதாக்குறைக்கு தினமும் அள்ளித்தெறிக்கும் மீம்களும் அவரை அப்படி ஒரு கதாபாத்திரத்தில் பார்க்க ஒப்பவேயில்லை தான். இருப்பினும் வ்டிவேலு தமக்கும் அடக்கி வாசிக்கத்தெரியும் எனவும் மேலும் சீரியஸாக தம்மை நிலைநிறுத்திக்கொள்ளத்தெரியும் என்பது தெளிவு.இவ்வளவு நாளா நாம் இவரை எனக்கென்னவோ சரியாகப் பயன்படுத்தவில்லை என்றே தோணுகிறது.

இடைவேளைக்குப்பிறகு படம் தொய்கிறது என்றனர் பலர். நெட்ஃப்ளிக்ஸில் இடைவேளை என்பதே இல்லை. எனக்கோ அங்கனம் தோணவேயிலை. சரியான திரைக்கதை. நேர்கோட்டில் பயணித்து எதிர்பார்த்த முடிவுடன் நிறைவு. மேலும் இவ்வளவு தைரியமாக படம் எடுக்கத்துணிந்த மாரி படத்தின் பெயரையும் ‘அருந்ததியினர் மகன்’ என்றே வைத்திருக்கலாமே. மாமன்னன் எதற்கு ?

#மாமன்னன்

 

mamannan-5

Sunday, July 23, 2023

ஆணை-புலியின்-ஆணை

 


உங்கப்பன் விசிலக்கேட்டவன்.... ஹ்ம்... அடி பட்டையக்கெளப்பிட்டாண்டே. தம்பி. ஆஸ்காருக்கெல்லாம் சேர்த்து ஒரு பாட்டுல பாடையக் கட்டிப்புட்டான். வீரதீரமா ஒரு பாட்டு கேட்டு நெம்ப நாளாச்சு. அதான் பிச்சிருச்சி இந்தப்பாட்டு. டேய் தம்பி. தலைவரு நிரந்தரம். அர்த்தமாயித்தா ராஜா.?! ஆரம்பத்துல ஏறிக்கொண்டே போகும் அந்த ட்ரெம்ப்பெட்/துந்துபி எது வேணா சொல்லலாம். இனி தலைவரு (?) படத்துக்கெல்லாம் இதையே போட்டுத் தாக்கலாம். ஸ்கூல்ல ட்ரில் வெப்பாங்ய. பீட்ஸ் பாத்தீங்கன்னாஆ அதே தான். அறையுது ட்ரம்ஸ். என்ன ஒரே பிரச்னைன்னா,இதுக்கெல்லாம் தாத்தாவால இதுக்கு ஈடு குடுத்து ஆக்ஸேன் குடுக்க முடியுமான்னு தான்..ஹிஹி. 
 
0:20 லருந்து 0:25 வரை ஒலிக்கும் அந்த ஆரோகணம் ஏறிச்செல்லும் சுதி. கேளுங்க. ஏறிச்செல்லும் ஒலி. பாட்டு முழுக்க தேவையான இடங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்தப்பாட்டுல அவரோகணம்ங்கறதே -கீழிறங்கும் சுதி - இல்லை. ஏன்னா தலைவரு எப்பவுமே முன்னேறியே செல்பவர். அதான்..ஹிஹி.. 03:01ல கேட்கும்போது அப்டியே அள்ளிக்கிட்டு போகுதுடா எலே தம்பி. அங்கங்க தலைவரு ‘ஏ’ ஏ’ன்னு குரல் கொடுப்பது இன்னமும் வெறியேத்தும் சங்கதி. செமடா!
 
நாடோடிகள் படத்துல ஒரு பாட்டு ’சம்போ சிவசம்போ-ன்னு ஒரு பாடல். அதுவும் இதே போல முன்னேறிச் செல்ல மட்டுமே இசைக்கப்பட்ட பாடல். பிரியாணி படத்துல ’எதிர்த்து நில்’லுன்னு ஒரு பாடல். எல்லாம் ஒரே ஜானர்ங்ணா...அப்டியே எடுத்து காப்பியடிச்சுட்டான்னு சொல்லலை. ராசைய்யாவும் சிந்து பைரவில ஒரு பாடல் போட்டிருந்தார் இதே போல. இசைமேடைகளில் முன்னேறிச்செல்கிறார் ஜேகேபி’ங்கறத சொல்றதுக்கு. என்ன அதெல்லாம் இன்னும் வேகமா/ஃபாஸ்ட்டா (ரெண்டும் ஒண்ணுதானே.. ஹிஹி) இருக்கும், இது தாத்தாவின் வயதை கவனத்தில் கொண்டு கொஞ்சம் மெதுவா, ஆனாலும் ஸ்டெடியா போகுது பாடல். ஹுக்கூம்...டைகர் கா ஹுக்கும்.. அளப்பற கெளப்புறம்!
 
#ஆணை-புலியின்-ஆணை

 

Wednesday, July 5, 2023

ஜாஸ் மாலைப்பொழுது.


 

நேற்றிரவு ஒரு ஜாஸ் பியானோ நிகழ்ச்சி. ஷாரீக் ஹாசன். பெங்களூர்காரர் தான். இப்போது வசிப்பது அமேரிக்காவில். வழக்கம்போல ஐந்து வயதிலேயே பியானோ வாசிக்க கற்றுக்கொண்டு பதினைந்து வயதில் அத்தனை பரீட்சைகளிலும் வெற்றி பெற்றிருக்கிறார். 
 
Jazz கொஞ்சம் போரடிக்கும்தான். அத்தனை மெலிது, பட்டால் சுருங்கிவிடுமோ என ஆலோசிக்க வைக்க்ம் இசைக்கூறுகள். பொறுமை அவசியம். Jazz பியானோவில் என்பது இதுவே முதன்முறை முழுக்கச்சேரியும் கேட்பது. வழக்கமாக சாக்ஸஃபோனில் கேட்டே பழக்கம். கென்னி ஜீ எல்லோருக்கும் தெரியும், அற்புதமாக பல இசைக் கோவைகளை Jazz-ல் இசைத்துள்ளார். தமிழ்த்திரையில் ஜாஸ் எனில் ‘மன்றம் வந்த தென்றலுக்கு’, கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம் என ராசைய்யா, பிறகு தம்பி அநிருத் இப்போது இசைத்த ’மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே’ போன்றவற்றை சொல்லலாம்.
 
பழமையான மேற்குலக ஐரோப்பிய இசைக்கூறுகள் மட்டுமன்றி, தென்னெமெரிக்க நாடுகளான அர்ஜெண்டீனா, பிரேஸில் போன்ற நாடுகளிலும் Jazz இசைக்கப்படுகிறது அவர்களின் பாணியில். இந்த செய்தி புதிது எனக்கு. ஏனெனில் Jazz எனில் அமுத்தலான, அடங்கிய மென்மையான இசை. தென்னெமரிக்க நாடுகளின் இசை என்பது கொண்டாட்டத்துக்கானது, பெரும் அடிதடிகள் நிறைந்தது. ஃபொன்ஸியின் டெஸ்பராட்டோ போலான இசைகளை கேட்டே நாம் பழகியிருக்கிறோம். ஒலிவாங்கியில் அறிவிக்கையில் Jazz தென்னெமரிக்க நாடுகளிலும் இசைக்கப் படுகிறதாவென எனக்கு ஆச்சரியம். 
 
Moskowsky என்ற போலிஷ்/ஜெர்மானிய கம்போஸர், நிறைய Etude எனும் இசைக்கூறுகளை இசைத்து வைத்துள்ளார். அதிலொன்று பியானொவில் இடது கை விரல்களால் மட்டுமே இசைக்கக்கூடிய ஒரு இசைக் கோவை. கிட்டாரில் இடது கை விரல்களால் மட்டுமே வாசிக்க இயலும். இங்கு பியானோவில் இரு கைகளும் விரல்களும் சேரவில்லையெனில் முழுமை பெறாது. எனினும் இடக்கை விரல்கள் மட்டுமே கொண்டு வாசித்தார் ஷாரிக். அற்புதம்,இதுபோல புதுமைகளை அறிமுகப்படுத்தி வாசித்தது நல்ல அனுபவமாக இருந்தது. வழக்கம்போல செவ்வியல் இசைக்கோவைகளை திறம்பட வாசித்து விட்டு செல்வது அனைவரும் செய்வதே. பிறகு ஷாரிக் தாம் உருவாக்கிய Jazzல் அமைந்த இசைக்கோவைகளை வாசித்தார்.
 

 
ChatGPT யிடம் இசைக்கோவைக்கான குறிப்புகளைக் கொடுத்துவிட்டு , (குறிப்புகள் எனில் சூழல், இசையின் போக்கு, ரிதம் பேட்டர்ன்ஸ் போன்றவை), அது இசைத்தது என்று ஒன்றை இசைத்துக் காண்பித்தார்.Melancholy Hero எனப்பெயரிட்டிருக்கிறார். சும்மா விளையாட்டுக்காக சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். உண்மையிலேயே Jazz இசைக்கான அத்தனை இலக்கணங்களையும் கொண்டிருந்தது. ஒருவேளை செயற்கை நுண்ணறிவே இதை இசைத்திருக்குமோ என்ற நம்பிக்கையை அளித்தது.கொஞ்சம் கூட சந்தேகம் எழவேயில்லை.
 
சமீபத்தில் மறைந்த தமது நண்பனுக்கென ஒரு இசைக்கோவையை வாசித்தார். அவரே தம்மை Jazz இசைக்கு இழுத்துவந்தவர் என பெருமையாக கூறினார்.பெங்களூர் கோரமங்கலா க்ளப்களில் அமர்ந்து இசை பற்றி விவாதிப்போம், ஒரு லிட்மஸ் டெஸ்ட் என ஒரு இசைக்கோவை இருக்கிறது அதை வாசிக்க வேணும் என்று எப்போதும் கூறுவார் எனச் சொல்லிவிட்டு அந்தக் கோவையை Round Midnight வாசித்துக் காண்பித்தார்.
 
அர்ஜெண்டீனியன் பீஸ் Malambo என ஒன்றை வாசித்துக் காண்பித்தார். அது அவர்களின் நாட்டார் இசை. Folk Music (இந்த இசையை யூட்யூபில் Malambo என்ற பெயரை இட்டு கேட்டுப் பாருங்கள்....ஆஹா பெருங் கொண்ட்டமாக இருக்கும். எ.கா https://youtu.be/aoxMuPguBxc ) பெரிய பெரிய ட்ரம்ஸ்களை வைத்துக் கொண்டு ஆண்கள் இசைக்கும் இசை. பெண்கள் ஆடுவர் அதற்கு. அத்தனை அதிர்வான இசையினை மென்கட்டைகள் கொண்ட பியானோவில் வாசித்தது அருமை. ஆட்டத்திற்கான இசை அது. கிட்டத்தட்ட ‘மைக்கேல் ஜாக்ஸனின்  ‘All I want to say that, they dont really care about us’ பாட்டில் அடித்து நொறுக்கப்படும் ட்ரம்ஸ் போன்ற இசைக் கோர்வை இது. இந்தபாடல் கூட Malambo இசை அதிர்வுகளின் அடிப்படையில் இசைத்திருக்கலாம் தான். (சட்டென நமது நினைவுக்கு வரும் பாடல் அது.) இருப்பினும் பியானோவில் அந்த இசையின் அனுபவத்தை கொணர முயற்சித்தார். 
 
எல்லாம் பரீட்சார்த்த முயற்சிகள் தான். இப்படியான புதுமையான இசை நிகழ்ச்சிகளை காண வேணுமெனில் யூரோவில் கொட்டிக்கொடுக்க் வேணும். ராசைய்யாவின் இப்பொதைய ஜெர்மன் ட்டூர் டிக்கெட் விலை 150 யூரோக்கள், நம் காசுப்படி 15ஆயிரம் உரூபாக்கள். இங்கு பெங்களூர் இண்டர்நேஷனல் செண்டரில் அத்தனையும் இலவசம் வாழ்க நீ எம்மான்.
 
செக் குடியரசு ப்ராக்கில் இருக்கும்போது ஓவ்வொரு வார இறுதியிலும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு சென்றுவிடுவது வழக்கம். எதுவும் இலவசமில்லை. 500-600 க்ரெளன்கள் இருக்கும் அப்போது. 
 
பின்னரும் Jazz ஜாம்பவான்களின் இசையை செவிகுளிர வாசித்தார். நிறைய பெயர்களை சொல்லி அவர்களின் இசைக்கோவகளை அறிமுகப்படுத்தி , அதில் உள்ள இசைத்தருணங்களை தாம் ரசித்தவற்றை பகிர்ந்து கொண்டார். மிகுந்த ஆர்வத்துடன் வாசிக்கும் போது தமது இடக்காலை தரையில் தட்டிக்கொண்டே வாசித்தார். கவனித்தேன்.முழு ஈடுபாடு இல்லையெனில் இதுபோன்ற செய்கைகள் வருவதில்லை.!