Saturday, April 22, 2017

வரைதல்


குங்குமம் 21/04/2017 இதழில் வெளியான கவிதை






Sunday, April 16, 2017

மலைகளில் என் வானவில்



தற்காலிக மனநிலையில்
எடுத்த
உறுதியான முடிவு
என் காதல்

வானவில்லின்
மறுபாதி
அவள்

பிடிக்காத
பாடலின் வரிகள் போல
சிலசமயங்களில்
மாறிவிடுகிறாய்

எழுதிய
நான்கைந்து வரிகளுள்
எது கவிதை வரி என்பது
நீ வாசிப்பதில் இருக்கிறது

தவறி விழுந்த இலையை
காடு சென்று சேர்க்க
அலைகிறது காற்று

ஏதேனின் தோட்டத்தில்
கிடைப்பதை
என் வீட்டுத்தோட்டத்தில்
கண்டெடுத்தேன்

எழுத மறந்த வரிகள்
இன்னும் கவிதையாகத்தான்
இருக்கின்றன

மாற்றம் என்றால்
கம்பளிப்பூச்சியிலிருந்து
வண்ணத்துப்பூச்சி போன்றதாக
இருக்கவேண்டும்

சிமணி சொன்னாரென்று
கையைக்காலாக்கி
நடந்து செல்கிறேன்
கால்களை என்ன செய்ய ?!

கிளிகளைப்
பிடித்துக்கொண்டுவருபவனுக்கு கூட
பூனைகளிடம்
அத்தனை பரிச்சயமில்லை

சோளக்கொல்லை பொம்மையும்
மழையை ரசிக்கிறது
கைகளை விரித்தபடி

எல்லாச்சாலைகளிலும்
நான் பயணி
அத்தனை நதியிலும்
என் ஓடம்

எல்லாக்கோடுகளும்
சிறிதாகி விடுகின்றன காலம் கடக்கும்போது
அருகில்
இன்னொரு பெரிய கோட்டிற்கு
எவ்விதத்தேவையுமின்றி



மலைகள் இதழில் 


.