Thursday, August 10, 2017

வெண்ணிலாவும் மின்னலும்


தீபன்' பார்க்க போயிருந்தேன், புலம்பெயர் படங்கள் வரிசையில் இந்தப்படம் இன்று திரையிட்டனர் பெங்களூர் டெரி அமைப்பின் அரங்கத்தில். படத்தில தமிழ்ல பேசும் வசனங்களுக்கு ஆங்கிலத்தில் சப் டைட்டில். அதே படம் முழுக்க வரும் ஃப்ரென்ச்சுக்கு இல்லை. என்ன கொடுமை. ஒண்டுமே விளங்க இல்ல. :) தமிழர்களுக்கு அண்டர் ஆக்டிங்கெல்லாம் வரவே வராது. இங்கும் அதுவே. அந்தோனிதாசனும் அப்படியே. உறுமிக்கொண்டிருந்த புலியை கூண்டில் அடைத்துவைத்த போதும் உறுமத்தான் செய்யும் உள்ளுக்குள்ளாவது. அதை வெளிக்காட்டவே தெரியவில்லை. யாழினி'யாக நடித்தவர் தேவலை. 

இதையே ஒரு நல்ல தமிழ் இயக்குனரிடம் கொடுத்திருந்தால் இன்னமும் சிறப்பாக வடிவமைத்திருப்பார். அதெல்லாம் சரி எதுக்கு யானையை இரண்டுமுறை காட்டுகிறார். இலங்கைக்காட்டில் யானையா மதம் கொண்டது அடப்பாவமே.. நந்திக்கடல்லயே எல்லாம் முடிஞ்சுபோய்ட்டுது என்னும் காட்சி பரவாயில்லை. பிறகு வீறு கொண்டு ஒரு வீரமிகு பாடல் தமிழில் பாடுகிறார். ஹ்ம்.. என்னவோ அந்தோனி தாசன் உருவத்துக்கு,உடலுக்கு குரல் கொஞ்சமும் பொருந்தவேயில்லை. பூனைக்குரல் போல இருக்கிறது, இயல்புக்குரலே அது தானா இல்லை டப் செய்ததா?!

சேர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பவரிடையே காதல் வருவது, எதோ ஒரு அட்ஜெஸ்மண்டில் கூடவே இருக்கும் சிறுபெண் மீது பாசம் வருவது என்பதெல்லாம் கடைந்தெடுத்த க்ளீஷே. ஃப்ரெஞ்ச் குடியுரிமை அதிகாரி தலைவனை நோக்கி கேள்வி கேட்கும் காட்சிகள் 'ஸ்கார்ஃபேஸை' ஞாபகப் படுத்துவது போல இல்லை என்பது அல்ல பிரச்னை,அதன் அருகில் கூட அந்தக்காட்சி போகவில்லை என்பதே வருத்தம்.

தமிழ்ப்படம் என்பதாலோ என்னவோ அரங்கில் அத்தனை கூட்டமில்லை. குளிரைக்கூட்டிக் கொண்டு ஏசி ஓடிக்கொண்டிருந்தது. நோ ஃபையர் ஸோன்' என்று அறைகூவல் விடுக்கிறார். ஹ்ம்.. சம்மதிக்கலாம் அதன் பிறகு அந்தக்கோடு என்னவாயிற்று. உள்ளுக்குள் போய் குண்டுமழை பொழியவே அந்தக்கோடுகள். கடைசிக் காட்சிகளை மிகச்சரியான தமிழ்ப்பட உச்சக்கட்ட காட்சிபோலவே அமைத்திருப்பது சலிப்பு. சிவதாஸன் அத்தனை சுகமில்லை.#தீபன்

.
 

No comments:

Post a Comment