Friday, October 7, 2016

தக்கதிமி தக்கஜுனு தக்கதிமி தக்கஜுனு




இது என்ன பாட்றா இது..செம.. சுந்தர் சி பாபு, ‘வாளை மீனு'க்கப்புறம் காணாமயே போய்ட்டார். புடிச்சி இஸுத்துக்கொணாந்துருக்கானுஹ இங்க..மச்சி அட்டி தாம்லே.. மாகபா கையைக்கையத்தட்டி 'இது அது எது'ன்னு இங்க வர வண்ட்டான். தகராறு/சண்டைங்கற மாதிரி வரிகள் வரும்போது மட்டும் 'சே குவாரா' பனியனப்போட்டுக்கினு ஆட்றான். சமீபகாலமா கேட்ட ராப்/ஹிப்ஹாபாப்ல இதாண்டா ஒரிஜினல். அழுத்தமான கர்நாடக சங்கீத அக்ரஹாரத்து ராகம் ஒண்ணு இருக்கு இதுல ( கொஞ்சம் பொறுங்க, இன்னான்னி கண்டுபிடிச்சுட்டு பின்னாலே சொல்றேண்டா அம்பி ) தேவாவின் கானா பாடல்கள் ஒரு காலம். இது கொஞ்சம் அட்வான்ஸ்டு வெர்ஷன். ( அவை முழுக்க சிந்துபைரவி ராகத்துல அமைந்தவை)

ஆமா கூட ஆட்றது மிஷ்கின் ஸ்டைல் மஞ்சச்சேலை நம்ம 'சிவா மனசுல சக்தி' அனூயா தானே...ஆஹா ரொம்ப நாளாச்சிபா பார்த்து ..ஆனாலும் இங்க முழுக்க சேலைய சுத்திகினு அவ்ளவ் சுத்தபத்தமா ஹிஹி ரம்பாவோட அஸெட்ஸ்க்கு அப்புறம் அம்மையாரொடது தான். ஆட்ற எல்லாரும் திருவிழா பச்ச மஞ்ச செவப்பு கண்ணாடில்லாம் போட்டுகினு ஸோக்காகீது மச்சி. ‘பழகீட்டா உயிரக்கொடுப்போம்டா மாட்டுவண்டீ கீழதான் படுப்போம்டா' ஆஹா என்ன வரிடா மச்சி..புல்லரிக்கிது.
.
ட்ரேக் (Drake ) இங்கிலீஷ்ல எடுத்து விட்டான் ஒரு ஹிப் ஹாப். you used to call me on a cell phone’ ன்னு ஒரு பாட்டு.டெக்னிக்கலான தாளமும், ஆட்டமும் கொள்ளை போகும் , அதே போல ( அதுவே இல்லை..ஹ்ம்.ச்சை ) தெளிவான வரிகளும் , ஆட்டமும் , நம்ம குப்பத்துல ஆடசொல்லீ காட்டீருக்கானுங்க. இதோட ஓரு நூறுதபா பாத்துட்டேண்ணா.. நீங்களும் கேளுங்களேன், தக்கதிமி தக்கஜுனு தக்கதிமி தக்கஜுனு #அட்டீ


.

No comments:

Post a Comment