Sunday, December 25, 2016

"Original Tamils"



நேற்று (24/12/2016) பெங்களூர் காக்ஸ்டவுன் அலொய்ஸிஸ் கல்லூரியின் அரங்கில் ஸ்டாலின் ராஜாங்கம் (அமெரிக்கன் கல்லூரி விரிவுரையாளர்) அயோத்தி தாசர் பற்றி உரையாற்றினார். நிறைய புதிய விஷயங்கள் எனக்குத்தெளிவாகின. 1800 களிலேயே அவரது பணி துவங்கி விட்டதை எடுத்துரைத்தார். "Original Tamils" என்ற வகைப்பாட்டில் தாழ்த்தப்பட்ட சமுகத்தை சேர்க்கவேணும் என்பது, பெரியார்/அம்பேட்கர் ஆகியோருக்கு முன்னரேயே விடுதலை பற்றிப்பேசியது, சிதம்பரத்தில் தீப்புகுந்து தமது பக்தியை நிரூபித்த நந்தன் ஒரு பெளத்த மன்னன் (ஆண்டான் அடிமை அல்ல), பெரும்பான்மையான இலக்கியங்கள் பெளத்த/ சமண மதத்தை சார்ந்தவை,சங்க இலக்கியங்கள் பற்றிய குறிப்புகள் மறைக்கப்பட்டவை, ICS தேர்வை இங்கிலாந்திலேயே நடத்த வேணும், இந்தியாவில் அல்ல, ஏனெனில் இந்தியர்களை ஆளுமையில் ஆங்கிலேயர்கள் சாதிப்பாகுபாடின்றி நடத்துவர் , மேலும் தாதாபாய் நவ்ரோஜி 300 கையெழுத்துகள் கொண்டே இந்த கோரிக்கையை முன்வைத்தார், அயோத்தி தாசரோ மூவாயிரத்துக்கும் மேலான கையெழுத்துகளுடன்  இந்த ஐசிஎஸ் தேர்வை இங்கிலாந்தில் நடத்துவது குறித்து கோரிக்கை முன்வைத்தார். நீதிக்கட்சியின் முன்னோடி தாசருடையது, இதைப்பற்றி பெரியாரே சில இடங்களில் கூறியிருக்கிறார்.இப்படி பல விஷயங்களை எடுத்துரைத்தார்.

கார்த்திகை தீபம் என்பது கார்' என்றால் இருள் துல' என்றால் துலக்கக்கூடிய என்ற பொருள். மேலும் அடிமுடி காணா அண்ணாமலை என்பதெல்லாம் நம்ப வைக்கப்பட்ட கதைகள். ஆமணக்கு விதையிலிருந்து எங்கனம் எள் எடுத்து பின் அதை செக்கிலாட்டி எண்ணெய் பிழிந்தெடுப்பது போல என்ற முயற்சிகள் கொண்ட எண்ணை கொண்டு எரியவைக்கப்படும் விளக்குகள் என்பதே.



திருவையாறில் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஆனை மேல் அம்பாரி வைத்து அந்த ஆனையை முதன்மையாக அணியில் வலம் வரச்செய்யும் மரபு இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. சங்கீத வைபவத்தில் இன்றும் இருமணிக்கூறு நிகழ்வாக பறையடிக்கும் மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதிலிருந்து நமக்கும் தெளிவாகலாம் தமிழ்ப்பண்ணிலிருந்து தோன்றியது அனைத்தும் என்பது.





ஸ்டாலின் ராஜாங்கம் பேராசியர் என்பதால் அவர் வகுப்பு நடத்துவது போலவே தோன்றியது எனக்கு. ஹிந்து' ரா விநோத்'தின் ஏற்பாட்டில் நிகழ்வு நடந்தது. உரை முடிந்ததும் கலந்துரையாடல். பல பேர் கேள்விகள் கேட்டனர். மாணாக்கர்களுக்கு விளக்கம் சொல்வது போல பொறுமையுடன் பதிலுரைத்தார். பின்னர் அனைவருமாக சேர்ந்து ஷாந்தி சாகரில் தேநீர் அருந்திவிட்டு வீடு கிளம்பினோம்.

 

No comments:

Post a Comment