Friday, August 11, 2017

மெர்சல்


எண்பதுகளில் ஆல் இந்தியா ரேடியோவில், தேசபக்திப்பாடல்கள் என இசைக்கப்படும். அத்தகைய தரத்தில் இப்போது ரஹ்மானின் மெர்சல். நிலையக் கலைஞர்களை வைத்துக்கொண்டு சம்பளத்துக்கு கடனே என வாசிப்பார்கள்,கொஞ்சமும் கேட்டே விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு இசைத்தது போலிருக்கும். இங்கும் அதே போல கைலாஷ் கேர்,ரஹ்மான், தீபக்,சத்யப்ரகாஷ், மற்றும் தீபா என ஆஸ்தான வித்துவான்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாத கோஷ்டி கானம். புதிய கற்பனை என்ற வஸ்துவே கரைந்துவிட்டது போல என்ன தான் சொல்வது ?. இடையிசை எல்லாம் ரஹ்மான் தானா என கேட்கவைக்கின்றன.

பொதுவாக முதல் பாடல் வெளியீடு என்பது மிரட்டலான பாடல்களாகவே இருக்கும். அதுவே இப்படி என்றால் ?! சொய்வு தெரிகிறது. அவரே இசைத்த பழைய பாடல்களின் அத்தனை சாயல்களும் தெள்ளத் தெளிவாக தெரிவது சலிப்பு. கேட்கப்போனால் 'ரெட்ரொ' என்ற சப்பைக்கட்டு பதில் வரும். பொதுவாகவே ரஹ்மானுக்கும் விஜய்'க்கும் அத்தனை ராசி இருப்பதில்லை. அவர் இவருக்கென இசைத்தவை எல்லாம் காற்றோடு என்றோ கரைந்து போய்விட்டன. அத்தோடு இதுவும் ஒன்றாகும்.

இப்போது ராசைய்யாவும் மலையாள 'க்ளிண்ட்'ல் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை என்பதே நிஜம். பாஸ்ட் லாரல்ஸ்ஸுடன் (Past Laurels) இருந்துகொள்ள வேண்டியது தான்,
#மெர்சல்

பாடலின் சுட்டி


https://www.saavn.com/p/album/tamil/Aalaporaan-Thamizhan-From-Mersal-2017/vKRNQcDdNqQ_


.

1 comment: