Sunday, May 21, 2017

மஞ்சள் பூசும் வானம்






Twenty One Pilots , Stressed Out பாட்டு கேளுங்களேன். நல்ல ராப், அருமையான பீட். எல்லோரும் ராப் போட்றாங்கள். இருந்தாலும் , ஈஸியானது, அவ்வளவு யோசிக்கல்லாம் வேணாம். யார் வேணாலும் பாடலாம்ங்கற மாதிரி இந்த ராப்'பை மாத்திட்டாங்கள்/ எவ்வளவுதான் சொன்னாலும் , திரும்பத்திரும்ப வரும் பீட்(தாளம்) , வேற எதையுமே யோசிக்கவிடாத , நினைக்கவிடாத வரிகள் , ஒரு கட்டத்தில் சலிப்பூட்டத்தான் செய்யும். இருந்தாலும் சில பாட்டுகள் ராப்பின் அடிப்படையில் வைத்துக்கொண்டு , பிற இசைக் கோவைகளையும் சேர்த்து , ராப் வெளித்தெரியாமல் பார்த்துக் கொள்ளும் போது கேட்கத்தூண்டும். அப்படியான ஒரு வகையில் இந்தப்பாடல்.

ராப் கேட்கலாம். முன்னால நம்ம ஊருல 'அப்பாச்சி இண்டியன்'னு ஒரு ஆளு கடிச்சுகொதறிக்கிட்டிருந்தாரு. அதையும் கேட்டுக்கிட்டு தானிருந்தோம். இசை என்றால் ஏற்கனவே இருக்கும் ராகங்களை கொஞ்சம் கற்பனை கலந்து மெருகேற்றி பழைய வாசனை தெரியாது கொடுப்பது. மறுமாற்றம் மட்டுமே. எனக்கு இந்த ஸ்டைலுன்னு சொல்லிட்டு ப்ளாக்யரைஸ்டாவே தமது பாடல்களிலிருந்தே வெளிவரவே இயலாத ஆசாமிகளும் உண்டு. ஹாரிஸு அப்டித்தான். எமினெம் ராப்பில் நிறையச்செய்திருந்தார். ரஹ்மான் போட்ட பேட்டை ராப், இப்ப கெளதம் மேனன் படத்துக்குன்னு காவடிச்சிந்தில்,அருணகிரி நாதரை திரும்பக்கொணர்ந்தார்.
 
இந்த 'ஸ்ட்ரெஸ்ஸ்ட் அவுட்' பாடலில் இந்த வரிகள் வரும்போது பாருங்க அந்தத்தாளம் தான். அள்ளிக்கொண்டு போகும். பின்னர் தொடரும் அந்த குட்டைக்குரல் மவனே இது ராப்பைத்தவிர வேறேதும் இல்லடேன்னு பறைசாற்றும். கிராமிக்கூட நாமினேஷன் ஆனது இந்தப்பாடல்.

Wish we could turn back time, to the good ol’ days,
When our momma sang us to sleep but now we’re stressed out.

இந்த வரிகளில் வரும் தாளம் , நம்ம படத்துல ஒரு பாட்டு இருக்கு, ‘மஞ்சள் பூசும் வானம் தொட்டுப் பார்த்தேன்'னு ராசைய்யா இசைத்த 'ப்ரென்ட்ஸ்' படத்தில் வரும் பாடல். இந்த மெல்லுடலி பாடலை யாராவது ராப்'புன்னு சொல்ல முடியுமா?..ஹ்ம். அதான். அதான் சொல்றேன் தெரியாம மாத்திரை கொடுக்கணும், என்ன உள்ள போகுதுன்னே தெரியக்கூடாது. உடனே ராசைய்யாவைப் பாத்து இந்தப்பயலுஹ காப்பி அடிச்சிட்டானுஹன்னு சொல்லப்பிடாது. இது ராப் பீட் . அதையே எடுத்து ஒரு நல்ல மெலடிக்கும் கூடப்பயன்படுத்த இயலும்னு காமிச்சது அப்டீன்னு வெச்சுக்கலாம். துள்ளலிசைதான் , செருப்பிடாத அம்மணக் கால்களுடன் எரிந்து இன்னமும் அடங்காத சிறிய சிகரெட் துண்டை தவறாக மிதித்துவிட்டாற்போல ஒரு துள்ளலை ஏற்படுத்தும் பாடல் மற்றும் பீட் ;)

ஜப்பான்காரன் தயாரித்த அத்தனை சிந்த்'திலும் இந்த பீட் டீஃபால்ட்டாக கிடைப்பது தான். இதைப்பின்னணியில் இசைக்க விட்டுப்பாடிக் கொண்டிருக்கலாம். ஒன்றும் பிரமாதமில்லை. எங்க எதைப்பயன்படுத்த வேணும் என்பதில் இருக்கிறது இசை. அட! ஆமால்ல. :) 




.

Sunday, May 14, 2017

வடக்கின் வசந்தம் (El Norte)


டெரி' அமைப்பு பெங்களுர் தொம்லூரில் 'எல் நார்ட்டி' El Norte என்ற திரைப்படம் திரையிட்டனர். மாயன் பழங்குடியினர் அண்ணனும் தங்கையுமாக பிழைக்க வழியின்றி வட அமேரிக்காவுக்கு சட்ட விரோதமாக பயணம் செய்வது பின்னர் அங்கேயும் வாழ இயலாது பல இன்னல்களுக்கு உள்ளாவது என்ற பிரச்னையைப்பற்றியது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் படம். போய்ச்சேருவதற்கு நேரமாகிவிட்டது. அத்தனை ட்ராஃபிக்கில் சிக்கி சென்று அரங்கு நுழைந்து இருக்கை தேடி அமர்வது என்பதை படத்துடன் ஒப்பிட்டுப்பார்த்துக்கொண்டேன். கிட்டத்தட்ட தமிழினத்திற்கும் இது போன்றே இன்னல்களும் இடர்ப்பாடுகளும் இருக்கத்தான் செய்கிறது.

குவாட்டமாலயிலிருந்து வட அமெரிக்கா நோக்கி பயணிப்பது அதுவும் சட்டவிரோதமாக என்பது தற்கொலைக்கு சமம். கண்டவுடன் சுட்டுவிடுவர் இல்லையேல் தலையைக்கொய்து விடுவர். மெக்ஸிகோ'விலிருந்தும் இது போன்ற சட்டவிரோத நகர்வுகள் சகஜம் என்பதால் பெரிய சுவர் எழுப்பியிருக்கிறார்கள் . ட்ரம்ப் கூட அதைப்பற்றி கேலியாக ஒரு ட்வீட் போட்டிருந்தார்.

இப்படி பயணிப்பவரை அமெரிக்க எல்லை வரை கொண்டு சேர்ப்பதற்கு கயோட்டிகள் என்றழைக்கப்படும் உள்ளூர் கடத்தல்காரர்கள் உதவுகின்றனர். தலைக்கு 100/200 அமெரிக்க டாலர்கள் வசூல் செய்துகொண்டு (அதுவும் உத்திரவாதமில்லை!) அடுத்த கரை வரை கொண்டு சேர்த்தவுடன் அவர்களின் பணி முடிந்துவிடும், பிறகு சென்றவர்கள் பாடு, வசிப்பதும் மடிவதுமென.

பயணம் என்பது அடர்த்தியான காட்டு மிருகங்கள் வசிக்கும் காட்டின் ஊடே. வழிப்பறி கொள்ளைகளும் , சகஜமான கொலைகளும் வழக்கமாக நடக்கக்கூடியவை. யாரும் கேள்வி கேட்பார் இல்லை. ஹெலிகாப்டரில் வளைத்து வளைத்து ரோந்துப்பணிகள் அமெரிக்க ராணுவம் தொடர்ந்து கொண்டிருக்கும். சந்தேகத்துக்குரிய வகையில் யாரும் சென்றால் கைது/கொலை.



இந்த என்ரிக்கே/ரோஸா இருவரும் தெரிந்த ஒருவரின் பெயர் சொல்லிக்கொண்டு இக்கரை வரை வந்து சேர்ந்துவிடுகின்றனர். ஆனால் அவரைத்தேடிப்பிடிப்பது என்பது படாத பாடு. அதற்குள்ளாக இவர்களின் அமெச்சூர்த்தனமான முகம் கண்டு ஏமாற்ற நினைக்கும் கயவர்கள். பின்னிலும் அதிலொருவன் நைச்சியமாகப்பேசி இரவில் காடு வழி கொண்டு சேர்க்கிறேன் எனச்சொல்லி பணத்தைக்கையாட எண்ணுகிறான். அவனை அடித்து மீண்டு வருவதற்குள் இருவருக்கும் போதும் போதுமென்றாகிவிடுகிறது.( சில ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து சில சட்ட விரோதப்பயணிகள் விமானத்தின் டயரில் அமர்ந்துகொண்டு பயணிப்பதாக செய்திகள் வந்திருந்தன )

ஒரு வழியாக அந்த தெரிந்த நண்பரை ஒரு சிறிய ஓட்டலில் சந்திக்கிறான். தொடர்ந்த கெஞ்சல்களுக்குப்பின் வட அமெரிக்காவிற்கு அவர்களை கொண்டு செல்ல சம்மதிக்கிறான். இருப்பினும் காட்டு வழியல்ல. சில பயன்படுத்தாத/புழக்கத்தில் இல்லாத பழைய டனல்கள் (குழாய்கள்) வழியாக. பாதுகாப்பானது, யாராலும் சந்தேகிக்க இயலாது என்றெல்லாம் கூறி தலைக்கு 100 டாலர் வாங்கிக்கொண்டு அனுப்பி வைக்கிறான். மூக்கில் கர்ச்சீஃப் கட்டிக்கொள்ள கூறி கிட்டத்தட்ட பல கிலோமீட்டர்கள் இருக்கும் அந்த காட்டை குழாய்கள் வழி கடக்கச் சொல்கிறான். வேறு வழியின்றி அவர்களும் செல்ல ஒத்துக்கொள்கின்றனர். அடுத்த பக்கம் வெளியே நீங்கள் வரும்போது அங்கே நான் உங்களுக்காக காத்து நிற்பேன் என்கிறான்.

உள்ளே நுழைந்தால் ஒரே கும்மிருட்டு, வழியே தெரியவில்லை. கையிலிருக்கும் டாச்சை அடிக்கிறான் என்ரிக்கே. அத்தனை குப்பை கூளம், பூனைகள் இறந்து கிடக்கின்றன. பெயர் தெரியாத பூச்சிகள் ஊர்ந்து செல்கின்றன. பார்த்துக்கொண்டு இருக்கும் எனக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. அந்த வழி சென்றே ஆகவேண்டியிருக்கிறது.



கொடிய பயணம். யாருக்கும் வாய்க்கக்கூடாதது/.கொஞ்ச நாட்கள் முன்னால் கருட புராணம் வாசித்துக்கொண்டிருந்தேன் ( சும்மாதான் வாட்ஸப்பில் கிடைத்த பிடிஎப்ஃ) இறந்த உயிர் பயணிப்பது பல லட்சம் காதம் என்றும் , பாதை அத்தனை கொடிது எனவும், அதுவும் அவரவர் செய்த பஞ்சமாபாதகங்களுக்கு ஏற்றாற்போல் அத்தனை சித்திரவதைகளும் பயணத்தில் கிடைக்குமெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுபோன்ற நரகம் நோக்கிய பயணம் அவர்களுக்கு. மூச்சு விட வழியில்லை. பல கிலோமீட்டர்கள் முட்டி போட்டுக்கொண்டு கைகளை ஊன்றி தவழ்ந்தே செல்லவேண்டிய துயரம்.

வழியில் இடையில் எங்கிருந்தோ வரும் கூட்டமான எலிகள் கடித்துக்குதறத்தொடங்குகின்றன இந்த இருவரையும். தப்பிக்க வழியில்லை, திரும்பிப்போவது என்பது இயலாத காரியம். கைகளை உயர்த்தியோ இல்லை உடலை வளைத்தோ எலிகளைத்தவிர்ப்பது என்பதெல்லாம் செய்யவே இயலாது. கொடுமை என்றால் அப்படி ஒரு கொடுமை. கிட்டத்தட்ட பத்துப்பதினைந்து நிமிடங்கள் தொடரும் அவலம். ஒரு வழியாக கைகளைக்கொண்டு அடித்தும் நசுக்கியும் பல எலிகளைக்கொன்று போட்டு விட்டு அந்த இடத்தை விட்டு நகர்கின்றனர். எப்போதடா இங்கிருந்து விலகிச்செல்வர் என பார்ப்போர் மனதை கரைக்கிறது.

ஒருவழியாக குழாய்களின் முடிவு தெரிகிறது, வெளிச்சம். குழாயின் தொடுவாய் சென்றடையும் போது அமெரிக்க ராணுவத்தின் ஹெலிகாப்டர் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறது , இவர்கள் வெளிவரும் குழாயின் முகத்துவாரத்தில் .விக்கித்து உள்ளுக்குள்ளேயே பதுங்கிக் கொள்கின்றனர். இந்த அவலம் சிறிது நேரம். ஒரு வழியாக ஹெலி சென்றதும் குழாயின் வெளியே வந்து அமர்கின்றனர். சொன்னது போல அந்த கயோட்டி' அங்கே நிற்கிறான்



மீண்டு வந்தவர்களை ஒரு ஏஜண்ட்டிடம் ஒப்படைக்கிறான். அந்த ஏஜண்ட் இதுபோன்ற சட்டவிரோத பயணிகளை வைத்து பிழைப்பு நடத்துபவன். அதற்கும் காசு வாங்கிக்கொண்டு தான். உள்ளூர் ஓட்டல்களில், துணி தைக்கும் நிறுவனங்களில், கட்டிட வேலைகளுக்கு என இவர்களை வைத்துக்கொண்டு சீப் லேபர்களை சப்ளை செய்கிறான். எந்த நேரமும் அமேரிக்க குடியுரிமை இந்த நிறுவனங்களுக்கு ரெய்ட் வருவது என்பது சகஜம், அங்கனம் வரும்போது பிடிபடுபவர்களுக்கு கடுமையாக தண்டனை , நாடு கடத்துதல் இன்னும் என்னென்னவோ தண்டனைகள். (பங்களாதேஷ் மக்கள் இப்படித்தான் இந்தியாவெங்கும் பரவிக்கிடக்கின்றனர். பாம்பேயில் பால் தாக்கரே ஆட்சி வந்ததும் அத்தனை பேரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்.)

எங்கு சென்றாலும் நிம்மதியின்மை. குடியுரிமை இல்லாது ஒரு மருத்துவமனைக்கோ இல்லை பொது இடங்களுக்கோ செல்வது என்பது இயலாத காரியம் . வேலை முடிந்து விட்டால் அந்த ஒரு அறைக்கு வந்தே ஆக வேண்டிய கட்டாயம். இருப்பினும் உள்ளூர் அமெரிக்கர்களை விட ஏகத்துக்கும் குறைவான சம்பளமே. வேலைக்கு சேர்க்கும் முதலாளிகளும் இதையெல்லாம் சட்டை செய்வதில்லை. அவர்களுக்கு தேவையானதெல்லாம் சீப் லேபர்ஸ்.! யார் வந்து பிடித்துக்கொண்டு போனால் என்னவென விட்டுவிடுவார்கள். ஏனெனில் இப்படி நாளொன்றுக்கு வருபவர்கள் ஆயிரக்கணக்கில். அப்படி அரசாங்கம் பிடித்துக்கொண்டு போனவர்களின் குழந்தைகளை அநாதை விடுதிகளுக்கு விற்றுவிடுவான் இந்த ஏஜண்ட். அதுமட்டுமின்றி கூட வேலை பார்ப்பவர்களுக்கும் இந்த விவரம் தெரிந்து போலீஸுக்கு தகவல் சொல்லி பிடித்துக்கொடுத்து பணம் சம்பாதிப்பர் சிலர்.



சொல்லொணாத்துயரம். சொந்த நாட்டை விட்டு பஞ்சம் பிழைக்க/ உயிர் பிழைக்க வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்வது என்பதெல்லாம் அனுபவித்துப்பார்ப்பவர்க்கு தெரியும் . இந்தப்படம் எண்பதுகளில் வெளிவந்திருக்கிறது. இதே அரங்கில் வரிசையாக உள்ளூர் இஸ்ரேலிய தூதரகம் அவர்கள் நாட்டு திரைப்படங்களை திரையிட்டனர் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு, அது போல இந்தப்படமும். ஆஸ்கர் நாமினேஷன் ஆகியிருக்கிறது இரண்டொரு விருதுகளையும் வென்றிருக்கிறது.


சம்பாதிப்பதுஅங்கேயே செலவாகிவிடுகிறது , சேமிக்க ஏதும் இல்லை. மீண்டும் மீண்டும் நிலையற்ற தன்மை.சலிப்பு மேலிடுகிறது இருவருக்கும். இடையில் ரோசா வேலை செய்துகொண்டிருக்கும்போது மயங்கி விழுகிறாள். என்ரிக்கே'விற்கு சிக்காகோ செல்ல ஒரு பெருமாட்டியின் மூலம் வாய்ப்பு கிடைக்கிறது. க்ரீன் கார்ட் வாங்கித்தரவும் சம்மதிக்கிறாள். சிக்காகோ செல்ல ஆயத்தமாகிவிட்ட நிலையில் ரோசா'வின் மரணம் என்று வாழ்க்கையில் மீண்டும் ஒரு சுழற்சியில் சிக்கிக்கொள்கிறான் என்ரிக்கே.

யூட்யூபில் வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.முழுதும் பார்க்க இயலாமலேயே போகும். அத்தனையும் துயரம்.




.

Sunday, May 7, 2017

தேவசேனா..


தேவசேனா..ஹ்ம்..சரி சரி மலர் டீச்சர் மாதிரி .ஹிஹி. அவ்வளவு அழகு.பேசாம அவரையே சிவகாமி ராணியா அறிவிச்சிருந்தா இன்னும் நல்லாருந்திருக்கும். வழக்கம் போல மேல் ஷாவனிஸக்கத தானேங்ணா.. அவ்வளவ் பெரிய லிங்கம்லாம் வெச்சிகினு சக்திய எப்டி ராணியாக்கறது ? அதுவும் சர்தான். இவ்வளவு பெரிய ராணி சிவகாமி சூழ்ச்சி கூடவா தெரியாம இருப்பார்? சகுனியின் சூழ்ச்சியில் சிக்கி தவறான முடிவுகளை எடுத்து தத்தளிக்கிறார். அந்தப்பாவத்துக்குத்தான் கைகளை உயர்த்திப்பிடித்து பாகுபலியைக்காப்பாற்றி தன்னை மாய்க்கிறார். இளையவனுக்கு மணமகள் , மூத்தவனுக்கு மணிமகுடம் என்று ஸ்ப்பிளிட் செகண்ட்ஸ்ல முடிவெடுக்கும் சிவகாமி. ஆஹா.. இப்டில்லாம் இப்ப யாராவது இருக்காங்களா? அடுத்த தேர்தல் வரைக்கும் கொஞ்சம் அடை காப்போம்னு காத்துக்கெடக்கற ஆட்கள் தானே குமிஞ்சி கெடக்காங்ய :) 


விஎஃப்எக்ஸ், சிஜி, எல்லாம் இப்ப தண்ணி பட்ட பாடாப்போச்சு. இங்க ஒரு மாயான்னு ஒரு இன்ஸ்ட்டிட்யூட் எல்லாம் இந்த நகாசு வேலே பண்றவா தான். அதுல விளம்பரத்துல இந்தப்படத்துல வேலே பாத்தவா எல்லாப்பேரும் இங்க தான் படிச்சிருக்கான்னு போட்ருந்தான்..ஹிஹி.. வீடியோ கேம்ஸ் நிறைய வருது இதை விடவும் மிரட்டலா. அதனால இந்த சிஜின்னா இதுக்கு மேலே யாராவது எதாவது செஞ்சு காட்ட மாட்டாளோன்னு மனசு கெடந்து அடிச்சிக்கிது. ஸ்டார் ட்ரெக் காலங்களிலிருந்து , ப்ரிடேட்டர், ஏலியன்ஸ், பொம்ப்பி, க்ளாடியேட்டர், இடையில சிப்மங்க்ஸ் கூட மனிதர்களை இணைத்துன்னு எக்கச்சக்கமா ஆயிட்டதால ஒண்ணும் பிரமாதமில்லை இங்கு.



மிரட்டல் காட்சி என்றால் பல்லா'வுக்கு மகுடம் சூட்டும் காட்சி தான். எல்லாம் முடிந்து பாகுபலி படைத்தளபதி எனப்பேர் சொன்னதும், ஒவ்வொரு குழுவாக ஆர்ப்பரிப்பதும், யானைப்படை காலாட்படை, என ஒவ்வொன்றாக அதிரவைக்கும் கோஷங்கள். அரியணை வரை அதிருகிறது. தேவசேனையின் இருக்கை அதிர்ந்து மெல்ல இடம் மாறுகிறது. மன்னவனின் இருக்கையில் அரிமா வரை அதிர்கிறது. சிவகாமி வெளிக்காட்டாமல் திரும்பி பாகுபலியைப் பார்க்கிறாள். கொற்றம் கொடி கும்பம் சாய்கிறது..படிகளில் தவறி விழுந்து சிந்திச்சிதறி அடடா அது தாண்டா பிரம்மாண்டம். கடைசிக்கு பாகுபலி போய்த்தான் கொற்றக்குடையை விழாமல் பிடித்துப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது . பின்னர் நடக்கப்போவதை அப்படியே சொல்லியிருக்கிறார் அந்தப்பத்து நிமிடங்கள்ல…. ..அதாண்டா ராஸ்மவுலி...வாழ்த்துகள்ங்ணாஆ….!

ஆமா ஏன் நேரடியாதமிழ்ல கொடுக்கவில்லை, பல இடங்கள்ல லிப் ஸிங்க் ஆகாம கொல்ட்டி டப்பிங் பாத்தாமேரி ஒரு ஃபீலிங்கி. அந்தக்காலத்துல நரசிம்ம ராஜூன்னு ஒரு நடிகர் நடித்து ஜெயமாலினில்லாம் பேயா வரும் படங்கள் மாதிரியே பல இடங்கள்ல எனக்கு தோணியது. இப்ப அந்தப்படங்கள்லாம் 'முரசு'ல போட்டுத்தள்றான். சின்னப்பிள்ளைகள்ல பார்த்தது, திரும்ப ஞாபகப்படுத்துறார் ராஸ்மௌலி..ஹ்ம்.. ..!

பாகுபலி அவந்திகா காதலைவிட , பாகுபலி தேவசேனா காதலைச்சொன்னவிதம் லயிக்கும்படி இல்லை. போர்த்திறமும், மதிநுட்பமும், காதலாகுமா ?..ஹ்ம்.. படைத்தளபதியை தேர்ந்தெடுக்கிறார் என்றால் சரி. ..இது காதலய்யா காதல். ஹ்ம்.. வேஸ்ட். எப்பவும் வில்லும் அம்புமா அலையிற பொண்ணை எப்படியப்பா மயக்குவது என்று விட்டால் பாகுபலி நம்மிடமே கேட்பார் போலிருக்கிறது :) அவர் தோள் மீதேறி இருமருங்குமாக நடந்து சென்று படகில் ஏறும் காட்சி மட்டும் கொஞ்சம் லவ்ஸ்ங்ணா.. அந்தப்படகு ஒரு சர்ரியலிஸப்படம் ஒன்றை நினைவு படுத்தத்தவறவில்லை. கடல், பாலம், மற்றும் சிறுகச்சிறுக பாலங்கள் ஒன்று கூடி பாய்மரப் படகுகள் போல காட்சி தரும். அது மாதிரி இறக்கைகள் எல்லாம் பாய்மரங்கள், இருபுறமும் பறந்து விரிந்து அடங்கும் துடுப்புகள் எல்லாம் கால்கள் , முகமோ ஒரு அன்னப்பட்சி, அதன் திறந்த கழுத்தில் தலைவனும் தலைவியும்……...அடடா , சாபு சிரில்ணே அசத்திட்டீங்கோ :)



எல்லாம் சரி, ப்ராபாஸின் முகத்தில் பல இடங்களில் களைப்பு தெரிகிறதே என்ன காரணம் ? என்னய்யா மெளலி சீக்கிரம் படத்த எடுத்துவிடுய்யா என்ற உணர்வா? போட்டு சவ்வாஆ இழுத்துக்கிட்டு திரியிற…?!

இசைக்கும் இந்தப்படத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. பிரம்மாண்டங்களை செவிக்கு எடுத்துச்செல்ல ஒரு நல்ல தீம் கூட இல்லை. பாட்டுகள் எல்லாம் பக்கா ஆண்ட்றா லோக்கல். அதுலயும் ஒரு பாட்டுல கூட தமிழ்ல வாயசைப்பே இல்லை. முதல் படம் நேரடியாத்தமிழ்ல கொடுத்ததால இரண்டாவதை எப்டிக்குடுத்தாலும் பாப்பாங்க்யன்னு நெனச்சிட்டார் போலருக்கு. இந்திக்காரங்க்யள விடுங்க. அவங்கயளுக்கு விந்திய மலைகள் தாண்டினா எல்லாம் மத்ராஸி தான். எல்லாம் ஒரே கடகடாகுடுகுடு தான். தகரடப்பால கல்லப்போட்டு குலுக்கினாப்போலன்னு எங்கிட்டயே சொல்லுவாங்க்ய..ஹ்ம்..!

நிறைய ரஜினி ஃபார்முலா. பதவி மறுப்பு, ஊரை விட்டு (இங்க அரண்மனைய) விலக்கி வைத்தல், சூழ்ச்சி பண்ணி அவரது மனைவியையே சபை முன்னால நிறுத்தி அவமானப் படுத்துதல்னு ஏகத்துக்கு "அச்சச்சோ இத்தன நல்லது பண்ற மனுசனுக்கு இப்டி கெடுதி யாராச்சும் பண்ணுவாஹளா" சமாச்சாரங்கள். இதெல்லாம் ரஸ்னி படத்துலயே இப்பல்லாம் யாரும் காமிக்கிறதில்லை. பிள்ளைவாள் கொஞ்சம் கவனிச்சிருக்கணும்



ஃபேன்டஸியா புராணக்கதையா இல்லை வெறும் புருடாவா என்பதெல்லாம் சர்ச்சையே இங்கு தேவையேயில்லை. ஏனென்றல் அத்தனை சர்ச்சை செய்யுமளவிற்கு படத்தில் ஒன்றுமேயில்லை. சினிமான்னாலே கொஞ்சம் மிகைதான். இது வழக்கமான தெலுகு மிகை. பாக சால பூந்தி. முதல் படத்தில் ஊற்றிக்கொடுக்கும் சின்ன கேமியோ ரோலில் வந்தவர் இந்தப்படத்தில் ஏன் வரலை ?!..ஹ்ம். சிஜிக்கே பிராணனன் போய்ட்டுது போலருக்கு...ஹிஹி..

உண்மையைச்சொல்லணும்னா என்னால் முதலை ரசிக்கமுடிந்த அளவிற்கு இரண்டாவதை ரசிக்க முடியவில்லை. முதலே முடிவாக இருந்திருக்கலாம். நல்லவேளை இரண்டாவதிலாவது முடிந்ததே என்ற சலிப்பு மேற்படுவதை ஒருக்காலும் தவிர்க்க இயலவில்லை.