Sunday, April 22, 2018

ரஹ்மானும் ராசைய்யாவும்



ஒரு மாதம் டில்லியில் தங்கியிருந்தபோது உடன் தங்கியிருந்தவர் அனைவரும் கிட்டத்தட்ட வட இந்தியாவைச்சேர்ந்தவர் தான். கொஞ்சம் அங்குமிங்குமாக ஹிந்தி பெல்ட்டிலிருந்து வந்தவர்கள் தான். சாயங்கால வேளைகளில் இல்லை பொழுது போகாது எங்கும் வெளியில் செல்லாத சனி ஞாயிறுகளில் பொதுவில் வைத்திருக்கும் டீவீ'யில் பாடல்கள்/படம் பார்ப்பது வழக்கம். எல்லாவருக்கும் ஒரே டீவி. மக்கள் அனைவரும் ஹிந்தி பெல்ட் ஆனதால் வழக்கமாக ஹிந்தி பாடல்களே பெரும்பாலும் ஓடும். வேறு வழியின்றி நானும் உட்கார்ந்து பார்த்துத் தொலைப்பது வழக்கம். அவர்கள் அடிக்கடி பார்க்கும் சேனல்கள் ஒன்றைக்கூட நான் பெங்களூரில் பார்த்தில்லை. அப்படியான சேனல்களும் இன்னபிற பிரபல ஸ்டார் ஹிந்தி போன்ற சேனல்களும் ஒலிக்கும். எனக்கும் ஹிந்திப் பாடல்களுக்கும் ஏழாம் பொருத்தம். எனக்கென்னவோ ஹிந்திப்பாடல்கள் ஒரு போதும் தமிழின் தரத்தை ஒருக்காலும் எட்டுவதே இல்லை என்றே எண்ணுவேன். அதே கூற்று உறுதிப் படுத்தப்பட்டது. 

அந்த ஒரு மாதத்தில். அமர்ந்து பார்த்தவைகளில் கொஞ்சமும் உழைப்பின்றி, கூடுதல் கற்பனைகளின்றி வழக்கம்போல பஞ்சாபி பாங்க்ராவையும் , ஹிந்துஸ்தானியையும் , பின்னர் ஃப்யூஷன் பேர்வழி என்ற பெயரில் இரண்டையும் கலந்துகட்டி ஆகத்திராபையாகவே பாடல்கள் ஒலித்தன. தமிழ் மருந்துக்குக்கூட ஒலிக்காது. நானும் சர்ஃப் செய்து அலுத்துப் போனேன். இதிலென்ன ப்யூட்டி என்றால் ரஹ்மானின் பாடல்கள் ஒன்று போலும் ஒரு சேனலிலும் ஒலிப்பதில்லை. ஆமாம் நிஜம். ஒரு மாதம் இருந்திருக்கிறேன் நண்பர்களே.. ஒரு பாடலும் எந்தன் காதில் விழுந்ததேயில்லை. எத்தனை சேனல் அத்தனையும் ஹிந்தியன்றி வேறேதுமில்லை. என்றாலும் ஒன்றிலும் நம்ம தமிழ் ரஹ்மானின் நேரடி ஹிந்திப்பாடல்களோ இல்லை மொழி மாற்ற ஹிந்தி பாடல்களோ காணவேயில்லை. அது தான் உண்மை.

நம்மைப்போலவே அவர்களும் ரஹ்மானை ஒதுக்கிவிட்டனர் என்றே தோன்றுகிறது. உள்ளுக்குள் மிதப்பில் என்னடா ரஹ்மான் பாட்டத்தான கேப்பீஹ' என்று இறுமாப்பில் இருந்தவனுக்கு பெரும் இடி. மேலே அறையில் இருக்கும் பொழுதுகளில் அங்கனம் ரஹ்மான் பாடல்கள் ஒலிக்குமாயின் சேனல் மாற்றம் செய்கிறார்களாவென காது கொடுத்துக் கேட்பேன். ஹ்ஹூ,ம் அப்படியெல்லாம் ஒன்றுமேயில்லை.


இப்போது தேசீய விருதுகள் மீண்டும் ஒரு முறை ரஹ்மானுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. யார் கேட்கிறார்கள் ஐயா உமது பாடல்களை ?! என்னைக்கேட்டால் ரஹ்மானும் ராசைய்யாவும் இந்த விருதுகளிலிருந்து விலகி இருக்கலாம். எல்லாம் செய்தாயிற்று, எல்லாப்பாடல்களிலும் அத்தனை வித பரீட்சார்த்த முயற்சிகளும் செய்தாயிற்று. இளைஞர்களுக்கு வழி விடுங்க ஹூஸூர் எஸமான்.

No comments:

Post a Comment