Wednesday, November 11, 2015

இணையவெளியினிலே

தினமணி இளைஞர்மணி 'இணையவெளியினிலே' பகுதியில் வெளிவந்த எனது பதிவுகள்...!


http://epaper.dinamani.com/620453/Ilaignarmani/27102015#page/4/3



http://epaper.dinamani.com/632596/Ilaignarmani/10112015#page/4/1


Tuesday, November 3, 2015

சிறுமழைத்துளிகள்




பலகாலம் தூசிபடிந்த
அறையைத்துடைத்துக்கொண்டிருந்தேன்
வண்ணத்துப்பூச்சியின்
இறக்கைகள் கிடைத்தது

***

சிலந்தி
பூக்களுக்கு விரிக்கவில்லை
வலை

***

தவறி விழுந்த குஞ்சுகளை
கூட்டில் சேர்க்க
அதன் தாய்மொழி
தெரிந்திருக்கவேண்டியதில்லை

***

புத்தனுக்கும் தெரியாத
ஒன்று
எனக்குத்தெரியும்

***

வண்ணத்துப்பூச்சிகளை
ஹெர்பேரியத்தில் மட்டுமே
பார்க்கப்பிடிக்கும்

***

சலனங்களில்லாத
கவிஞன் நான்


***
உரத்துச்சொல்லவியலாத
கதை ஒன்று
என்னிடம் உள்ளது
என்பது
உனக்கு மட்டுமே தெரியும்

***

நேற்றிலிருந்து
அந்தப்பறவை
உன் பெயர் சொல்லித்தான்
அழைத்துக்கொண்டிருக்கிறது

***

சிந்தாமல் சாப்பிடு
என்று ரொட்டித்துண்டுகளை
கொடுத்துவிட்டுச்சென்றாள்
அவசியமாய்ச்சிந்திக்கொண்டே
உண்டுமுடித்தேன்
என் பாதங்களின் கீழ்
எறும்புகள்

***
கட்டுடைத்து வெளிவந்த
முன்னவீனத்துவம்
அவை

***
கவிதை சுயமைதுனம்
அதில் ஹைக்கூ
துரித ஸ்கலிதம்

***