Thursday, December 28, 2017

பீலா பீலா’ பீலா பீலா’

பீலா பீலா’ன்னு ஒரு பாட்டு போட்ருக்கான் தம்பி அநிருத் ஆஹா.. சிலோன் ‘பைலா’ மீசங்கி மச்சி. நல்ல ரெட்ரொ. அருமை. ரொம்ப நாளாச்சி இது மாதிரி பாடல் கேட்டு. அவனுக்கு எல்லாம் தெரியுதுடா. :) இதே பைலா’ இசையில் தேவா ரொம்ப நாள் முன்னால ‘சிலோனு சிங்களப்பெண்ணே சிணுங்காதே’ன்னு இசைத்திருந்தார். அப்புறமும் ரொம்ப பிரபலமான ‘சுராங்கனி சுராங்கனி’ சிலோன் மனோகரன் பாடினது தான் இந்தப்பைலா.! இதே பாடலை ராசைய்யா ‘அவர் எனக்கே சொந்தம்’ படத்தில் அப்படியே எடுத்து பயன்படுத்தியிருந்தார் மலேசியா வாசுதேவனைப்பாடவைத்து. வரிகள் மட்டும்.தமிழில்.. 





ஈழத்தில் எழுபதுகளில் பொப்பிசைப்பாடல்கள் ( பாப் இசைப்பாடல்கள் தான் …அஹ்ஹ்ஹ்ஹ்ஹா அவங்க அப்டித்தான் சொல்லுவாங்க. :) ) வெளிவந்த ‘சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே..பள்ளிக்கு போனாளோ ?” என்ற மிகப்பிரபலமான பாடல். எல்லாம் பைலா.! பைலா’ன்னா இசை’ என்றர்த்தமாம் சிங்களத்தில். இறங்கிப்போட்ருக்கான் தம்பி. எந்தவொரு மாற்றமும், இடைச் செருகலும் இல்லாது ஒரிஜினல் ரெட்ரோ. மீளக்கொணர்ந்து கொடுத்திருக்கிறார்.:) கேளுங்கோ கேளுங்கோ…கேட்டுக்கிட்டே இருங்கோ :)

Tuesday, December 12, 2017

‘நான் விரும்பி அடையும் பொன்சிறையே’

இறைவா அடுத்த ராக் அநிருத்திடமிருந்து. பரவலாக ராக்’ இசையில் அமைந்த இது போன்ற பாடல்களை ரசிக்க ஆரம்பித்திருக்கின்றனர் அனைவரும், ராக்ஸ்டார் பட்டத்துக்கு பொருத்தமானவர் தான் தம்பி அநிருத். ஜீவீப்பீல்லாம் நடிக்க வந்துட்டான். தம்பி நடிக்கவும் வரலாம் அத்தனை தகுதியும் இருக்கு. என்ன பாக்றதுக்கு ரகுவரன் மாதிரி தெரிவார். அதனால பரவால்ல. தனுஷ் கூட இந்த ஒடம்ப வெச்சுக்கிட்டே இந்தப்போடு போடலியா?! :)
 
இது கொஞ்சம் காதல் ஏக்கம். ஐயா படத்துல வந்த அந்தப்பாடல் போல ‘ஒரு வார்த்த சொல்ல ஒரு வருசம் காத்திருந்தேன்’ ரகம். அங்கயும் நயன் தான் ஆஹா.. சாதனா சர்கம் ஆர்வமிகுதியில பூரிப்பில் பாடுவார். கேகே இருக்கும் அத்தனை சலிப்பையும் சொல்லி அழுவார். அதே போல இங்கும். 

எம்ஜியார் பாடல்கள், சிவாஜி பாடல்கள் என இன்னமும் சொல்லிக்கொண்டு அலைவதும்,அதைப்பாடிய டி எம் எஸ்ஸுக்கு எந்தப்பெயரும் வராது எல்லாப்பெயர்களும் நடிகர்களுக்கு கிடைத்த காலம் போய், இந்தப்பாடலில் அநிருத்தும், ஜொனிதாவும் தோன்றிப்பாடுகின்றனர், எனக்கென்னவோ இனியும் சிவகாவும், நயனும் அபிநயித்த காட்சிகள் வெளி வந்த போதிலும் இவர்கள் தோன்றிப்பாடிய வெர்ஷனே நிலைக்கும் என நினைக்கிறேன். அத்தனை ஆழமாகப் பதிந்துவிட்டது.





இந்தச்சிறு உருவத்துக்குள் இருந்து , மழைக்குருவி போல அத்தனை உச்சஸ்தாயி எல்லாம் செம. சம்மதிக்கணும் தம்பி அநிருத். ‘உட்தா பஞ்சாப்’பில் ராக் இசைக்கலைஞர்கள் பாடுமுன் கொஞ்சம் வீட்(கஞ்சா) உட்கொண்டே பாடுவர். இல்லாவிட்டால் அத்தனை உற்சாகமும், உத்வேகமும் குரல்வளையிலிருந்து வெளிவராது.கிட்டத்தட்ட அத்தனை ராக் இசைக்கலைஞர்களுமே ‘உட்கொள்ளும்’ வகையினர் தான். அதெல்லாம் எடுக்காமல் பாட முடியாதா எனக்கேட்கலாம்,டி எம் எஸ், மதுரை சோமு இவர்களெல்லாம் அந்தக்காலத்தில் என்ன உட்கொண்டு பாடினர் அத்தனை உச்சஸ்தாயியில்.?.. ஏன் பாரதி கூட எழுத அமருமுன்னர் உருண்டை’யை விழுங்கி விட்டே எழுத ஆரம்பிப்பார் என அறிந்திருக்கிறேன்.

‘கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்’ என அற்புதமான ஜாஸ் இசையில் வெளிவந்த அந்தப்பாடலில் முன் இசையாக வரும் அந்த மென்மையான கிட்டாரின் ஒலியை ஒத்திருக்கும் இங்கும் முன்னிசை. கெபா ஜெரீமியாவின் கிட்டார். ஆஹா ராக் இசைப்பாடலுக்கு முன்னிசை ஜாஸிலா. :) மெலடியும் ராக்’கும் அருமையான கலவை இதே கிட்டார் பீஸ் , ஜொனிதா’வின் பாடும் அத்தனை பாகங்களிலும் கொஞ்சி விளையாடுகிறது இருப்பினும் அநிருத்தின் குரல் வா வா வென ஒலிக்கும் போதெல்லாம் பின்னில் அரற்றும் அந்த அழுத்தமான மின்கித்தாரின் ஒலி இது ஒரிஜினல் ராக்’டே என்று கூவ வைக்கும். ஜொனிதாவின் பகுதியில் ஆழமாக அந்த பெர்குஷன் அடி மனதைக்கலக்குகிறது இதே ஜொனிதா காந்தி தான் ‘எந்திரன் 1-ல் லேடியோ பாடினவர் :) ‘நான் விரும்பி அடையும் பொன்சிறையே’ #இறைவா

.

Sunday, November 12, 2017

'ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம்'


பரமக்குடியில் எங்கள் வீட்டுக்கு ‘ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம்’ என்று ராமகிருஷ்ணா மடத்திலிருந்து வெளிவரும் பத்திரிக்கையை கொண்டு வந்து போடுவதற்காக ஒரு பிராமண முதியவர் எப்போதும்,மாதந்தோரும் வருவார். அவர் கையில் உள்ள துணிப்பையில் புத்தகக்கட்டும், மறுகையில் ஒரு குடையும் பிடித்தவாறு வந்துசேருவார். காலை பதினோரு மணியளவில் வேகாத வெய்யிலில் வந்து சேருவார். அதில் வரும் படக்கதையை நான் விரும்பிப்படிப்பது வழக்கம். வரும்போதெல்லாம் என்னை எங்கே என்று தேடிக்கொண்டே வருவார் , என்னைக்கண்டதும் தம்பி, ‘இன்னிக்கு என்ன செய்ற’ என்று கேட்டுக்கொண்டே கொஞ்சம் சிக்கலான கணக்குகளை கொடுத்து விடுவிக்கச்சொல்வார். எனக்கு அப்போதே கணக்கு என்றாலே பிணக்கு ஆமணக்கு வகையறாதான். எதோ என்னாலியன்றவரை விடையளிக்க முற்படுவேன். சிரித்துக்கொண்டே , ஹ்ம், ‘கொஞ்சம் சொம்பில் தண்ணீர் கொண்டுவா’ என்று கூறிக்கொண்டு வெளியே இருக்கும் மரக்கட்டிலில் உட்கார்ந்து கொண்டு , எப்படி எளிதாக கணக்குகளை விடுவிப்பது என்று சில சூத்திரங்களை எனக்கு வேண்டாமென்றாலும் விளக்கிக்கூறுவார்.

மாதத்தில் இன்ன நாளில்தான் வருவார் என்று தெரியாது. கடைசி வாரம் இல்லையேல் முதல் வாரத்தில் இன்னும் சிக்கலான கணக்குகளோடு ‘ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தையும்’ கூடவே கொண்டு வருவார். ஒவ்வொரு மாதமும் கணக்கு ஏகத்துக்கு சிக்கலாகிக்கொண்டே போக எனக்கு ஏற்கனவே வெறுப்பு. எப்படியாவது அவர் வரும் போது வீட்டில் இல்லாமல் போய்விடவேண்டும் என நினைப்பேன். ஒவ்வொரு தடவையும் சரியாக மாட்டிக்கொள்வேன் அவரிடம். எங்கள் ஊரில் கணக்காசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் அவர்.

ஒரு நாள் அவரின் பைக்கூடும் குடையும் அவர் தூரத்தே வருவதைக்காட்டிக் கொடுத்தது. ஓடிப்போய் அருகிலிருந்த பெரியம்மாவின் வீட்டில் போய் ஒளிந்துகொண்டேன். வந்தவர் புத்தகத்தைக்கொடுத்துவிட்டு எனக்காக காத்திருந்து பார்த்திருக்கிறார். அவர் சென்றதும் எனது அண்ணனின் பையன், நான் ஒளிந்து கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு,அவனின் அம்மா’விடம் எனக்கு முன்னாலேயே சொல்லிவிட்டான் “அம்மா அந்தத்தாத்தா , ராமகிருஷ்ணவிஜயம் போட்ற தாத்தா இவங்களைத் தேடிக்கிட்டிருந்து விட்டு, கணக்கு கேட்பேன்னு நினைச்சு ஓடி ஒளிஞ்சுக்கிட்டானா’ன்னு கேட்டார்மா என்று போட்டு உடைத்துவிட்டான். பின்னரும் அவர் வருவதும் நான் ஒளிவதும் சிலநாட்களில் மாட்டிக்கொள்வதுமாகக் கழிந்தது.

அவர் கணக்கு சொல்லிக்கொடுக்கும் முறையில் , கடுமையாக இருப்பார், அதனால் யாரும் அவரிடம் ட்யூஷன் கூட வைத்துக்கொள்ளமாட்டர்கள் :) பிறகு சில மாதங்களாக அவரைக்காணவில்லை. நிம்மதி. திடீரென ஒரு நாள் அதே பையை எடுத்துக்கொண்டு ஒரு நடுத்தர வயதினன், எங்கள் வீட்டிற்கு வந்து , ‘பெரிய ஐயா’ இந்தப்புத்தகத்தை கொடுத்துவிட்டு காசு வாங்கி வரச்சொன்னார்கள்’ என்றான். ‘இந்தப்புத்தகம் வாங்குவதே அந்த பெரியவர் தள்ளாத வயதில் வந்து கொடுக்கிறாரே’ என்றுதான் எனச்சொல்லி ‘புத்தகம் வேண்டாம்’ எனக்கூறி அனுப்பிவிட்டனர். புத்தகமும், தர்மசங்கடங்களை உண்டாக்கும் கணக்குகளுக்கும் ஒரு பெரிய டாட்டா :)

இன்றைக்கு பெங்களூரில் அப்பார்ட்மெண்ட்டில்,கீழ்த்தளத்தில் செக்யூரிட்டி அனைவர்க்கும் வரும் தபாலை வீடு வாரியாக பிரித்து வைப்பது வழக்கம்.அப்போது அந்த ‘ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம்’ என் கண்ணில் பட்டது. மேலிருக்கும் எந்த வீட்டினரோ அந்தப்புத்தகத்துக்கு சந்தா கட்டியிருப்பர் போல, நல்ல பிளாஸ்ட்டிக் தாள் பேக்’கில் பெயரும், முகவரியும் தெளிவாகத்தெரியும்படி அந்த ‘ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம்’ மேஜையில் கிடந்தது. புத்தகமும் அதில் தொடர்ந்தும் வாசித்த படக்கதைகளும் மறந்துபோய் ,கணக்கும் பைக்கூட்டுடன் குடையும் கையில் வைத்திருந்த அந்த முதியவர் மட்டுமே தெரிந்தார்.


 .

Saturday, October 28, 2017

2.0 ஒலிக !


இந்த தீவாளிக்கு Sennheiser CX 300 II Precision Noise Isolating In-Ear Headphone வாங்கினேன். என்னா வெலன்னு அமேஸான்ல பாக்கலாம், அத என் லாப்டாப்ல செருகி, 'ஹெலிகாப்டர்ல பெல்ட் போட்டு இறுக்கி உக்காரவெச்சு அப்பால மேடைல எறக்கிவிட்டு, எப்டீப்பா இவ்ளவ் எளிமையா இருக்கீங்கன்னு கேட்டாங்களாமே, அந்தப்பாட்ட கேட்டுக்கிட்டு இருக்கேன். ஏம்ப்பா ராஹ்மான் வெச்சு செய்ற ?. புதுசா ஏதும் செய்யக்கூடாதா? சின்னப்புள்ளைஹ ஸ்கூல்ல பீட்டீ பீரியட்க்கு ட்ரில் வாசிச்ச மேரி ஒரு மீஸங்கி. பின்னால ஓ ஓன்னு கத்தவிட்டு கடுப்பேத்றார். என்னா ஒரு இன்னோவேஷனே இல்லை. சரக்கு மட்டம். இத 2030ல தாம் கேக்கணும்னு ஒரு கூட்டம் கெளம்பிருக்கு.


ஆமா அது ராஜாளி'யா இல்ல ராசாலி'யா? தமிழால் வளர்ந்த குழந்தை கார்க்கி,யாரு கண்ணு வெச்சான்னு தெரியல, இப்டீல்லாம் எழுத ஆரம்பிச்சிருச்சி. கொஞ்சம் முன்னால தான் கவிஞர் தாமரை 'பறக்கும் ராசாளியே'ன்னு எழுதினார். (அதிலும் 'ஜா' வடமொழி இல்லை ) வலுக்கட்டாயமாக தமிழ் மட்டுமே எழுதுவேன் என்ற பிடிவாதத்துடன் எழுதி வருகிறார். ஆணைத் தொடர்கள் இயந்திர மனிதனுக்கு தமிழிலும் எழுதலாம்ப்பா. பாட்ட கேக்கவே முடியலையே இங்க. ஹ்ம்.. ஒரு வர்சம் ஆனப்புறம் கூட. 'தள்ளிப்போகாதே' வையே இன்னும் கேக்க சகிக்கலை. என்னா பண்றது அவருக்கு வாய்ச்சத குடுக்றார்.


இந்திர லோகத்து சுந்தரியே' சித் ஸ்ரீராமா அது ?. இப்பதான் தர்புகா சிவா இசைல ஒரு பாட்டு இன்னமும் லூப்ல உந்தி. மறுவார்த்தை பேசாதே'ன்னு. இங்க யய்ய்யய்யா யாய்ய்யாஆஆஆ... ஒரே குஷ்டம்ப்பா. எந்திரன் ஒண்ணுலயாவது நல்ல மெலடி கேட்கக் கிடைத்தது, இங்க எல்லாம் ஒரே எலெக்ட்ரானிக் இசை. இரைச்சல். வேஸ்ட்டு. #2.0



.

Wednesday, October 25, 2017

பிறக்கும்போதே கிழவன்




'யாவரும் பதிப்பகம்' ஜீவகரிகாலன் பகிர்ந்த 'போர்ஹேஸ் எழுத்துகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பு வெளியீடு' காணொலிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். போர்ஹேஸ்/ இடாலொ கால்வினோ/சார்த்தர் என்ற பெயர்கள் எனக்கு அறிமுகமானது சில ஆண்டுகள் முன்பாகத்தான். பிரம்மராஜனின் வேர்ட்ப்ரஸ் வலைத்தளத்தில் ஒரு சிலமுறைகள் வாசித்திருக்கிறேன். காணொலியில் குணா, பின்னர் பாலா மற்றும் ஆசிரியர் பிரம்மராஜனும் பேசியவற்றை பார்த்தேன். என்னைபொருத்தவரையில் பேசியவர்களில் கொஞ்சம் ஆதன்டிக்காக பேசியது பாலா மட்டுந்தான் எனத்தோன்றியது. பாலா அதிலிருக்கும் கதைகளைப்பற்றி அதிகம் பேசவில்லை, இருப்பினும் பொதுவாக போர்ஹேஸ் எப்படிப்பட்டவர், எத்தகைய மானுடம் அவர், ஆன்ட்டி மார்டன் (anti modern),எடெர்னிட்டி,இம்மார்ட்டலிட்டி, டைம் என்பன பற்றியே அதிகம் பேசுகின்றன போர்ஹேஸின் எழுத்துகள்.மேலும் பிறக்கும்போதே கிழவனாகப் பிறந்தவர் ;), அவரின்  குணாதிசயங்கள் என்ன என்பனவற்றை விவரித்தார். அவரின் எழுத்துகள் மூலமே இத்தனையையும் அறிய முடிந்திருக்கிறது. சிற்சில பேட்டிகளையும் மேற்கோள் காட்டி பேசினார். மொழிபெயர்ப்பு எங்கனம் ஆரம்பித்தது என்ற விளக்கம் எனக்கு புதிது. இப்படியெல்லாம் சில நிகழ்ச்சிகள் வாயிலாகத்தான்  இப்படிப்பட்ட விஷயங்கள் தெரியவருகின்றன .

குணா தொகுப்பை முழுதுமாக வாசிக்கவில்லை என்பது அவர் பேசிய விதத்திலேயே தெரிந்தது. 'வந்து வந்து என நிறைய வந்(த)து அவர் பேச்சில். இருப்பினும்  போர்ஹேஸ் அவர்தம் சிறு வயதில் வசித்த வீட்டிற்கு சென்றிருந்தேன் என்றார்.தமிழனாகப்பிறந்த அனைவருக்கும் ஒருமுறையேனும் பாரதி வசித்த இல்லத்துக்கு செல்லவேணும் என்ற அவா. அதிலென்ன இருக்கிறது. இருப்பினும் இடம்,காலம், பொருள் எல்லாமே முக்கியமாகத்தான் இருக்கிறது அவன் எழுத்தாளனாயினும் கூட!

நானும் தான் ப்ராக்(செக்கோஸ்லொவேக்கியா) நகரில் சுற்றித்திரிந்த காலங்கள் உண்டு. இருந்தாலும் கஃப்க்கா வசித்த வீட்டைப்பார்க்க ஒருமுறை கூடப்போகவேயில்லை. பல முறை சென்றுவந்த ஜூவிஷ் சினகாக் (கல்லறை)க்குப்பின்னர் உள்ள தெருவில் தான் வசித்திருக்கிறார் என்பது விக்கி மூலமாகத்தெரிய வந்தது. ஏன் போய்ப்பார்க்கவில்லை,,, அப்பல்லாம் எனக்கு எழுத்து/இலக்கியம்/கவிதைகள் மற்றும் இன்னபிற வஸ்துக்களில் பரிச்சயமில்லை. நிறைய மேற்கத்திய இசைக்கூடங்களுக்கு கால்கள் வலிக்க வலிக்க நடந்தே சென்று ரசித்திருக்கிறேன். ஓவியக்கண்காட்சிகளில் பல மணி நேரம் செலவழித்து இருக்கிறேன். புகழ்பெற்ற சார்லஸ் பிரிட்ஜில் தெருப்பாடகர்களின் இசையை கைப்பிடிச்சுவரில் சாய்ந்து நின்றபடியே ரசித்திருக்கிறேன்.

கடைசியாக பேசிய பிரம்மராஜன்,பெரும்பாலும் சம காலத்தில் வசிக்கும் இன்னொரு தலையணை எழுத்தாளரைப்பற்றியே பேசி போரடித்துவிட்டார். ஆல மரத்துக்கும் உச்சி மரத்துக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் எழுதி வைத்திருக்கிறார் என்றார். கல்யாணவீட்டு  மேடைகளில் அரசியல் பேசியது போல எனக்கு தோன்றியது.

பாலா எழுதிய 'துரதிர்ஷ்டம்பிடித்த கப்பலின் கதை'யை ஒரே வாரத்தில் ஷிஃட் போட்டு வாசித்து முடித்தேன். அதே கெதியில் விமர்சனமும் எழுதிஅனுப்பினேன் கரிகாலனுக்கு,கணையாழியில் வெளிவந்தது . இப்போது இந்த புத்தகத்தையும் வாசித்தே ஆகவேணும் என்ற ஆவல் காணொலிகள் மூலம் வந்துவிட்டது. எத்தனை காலம் பிடிக்கும் புரிந்து கொள்ள...பார்க்கலாம். இணையவழி ஆணை கொடுக்கலாமா என்ற யோசனையில்..இப்போது :) 


.

Saturday, October 21, 2017

'பிஜேபி வந்தாலும் வரும்'


பக்கா மசாலா அஞ்சு ரூபா டாக்டர். இடைவேளைக்குப்பிறகு நிறைய வெட்டியிருக்கலாம். இன்னமும் க்ரிஸ்ப்பாக வந்திருக்கும். கடைசீல ரெண்டு வசனம் பேசி, கையை உயர்த்திக்காட்டினதுக்கா இவ்வளவு பெரிய கட்சி மெர்சலாகிக்கெடக்கு. அடக்கருமமே. பயம்..வேறொண்ணுமில்ல.  அவ்வளவு சீரியஸால்லாம் இத எடுத்துக்கொள்ள வேண்டியதேயில்லை. அப்படியே விட்ருந்தா எப்பவும் உள்ளது தானேன்னு போயிருக்கும்.மெர்ஸல்VSமோடின்னு ஹாஷ்டேக் வெக்கிற அளவுக்கெல்லாம், அதுவும் அகில இதிய ட்ரென்ட் அடிக்கிற லெவலுக்கு...ஹிஹி...ஒண்ணுமே இல்லீங்ணா. 'பிஜேபி வந்தாலும் வரும்' சண்டைக்கின்னு விஜயோ இல்ல அட்லியோ நினைச்சிக்கூட பாத்துருக்க மாட்டாங்க.ஹிஹி அந்த கடைசி சீன் வசனங்களெல்லாம் கட் பண்ணா மேரியே தெர்ல..ஹிஹி..முழுக்க ஓடுதுங்ணா. பெங்களூர்ல சில இடங்கள்ல இருக்கும் தியேட்டர்களில் தான் பிரச்னை. அதுவும் லோக்கல் காங்கிரஸ் கவுர்மென்டு தமீழ்ஸ் ஓட்டு சிக்காங்கில்லா'ன்னு பயந்து ஆதரிச்சதால வந்த பிரச்னை அத விடுங்க.


பாரீஸில் வேட்டி உடுத்தி வரும் தமிழனை சீண்டிப்பார்க்கும் உள்ளூர் போலீஸ், அப்புறம் அவர் டாக்டர்னு காமிக்கிறதுக்கு எங்கயோ லாபில விழும் பெண்ணைக் காப்பாற்றுவது, எம்ஜியார் இப்டித்தான் செவனேன்னு அவர்பாட்டுக்கு வீட்டுக்கு ஓடு அடுக்கிக்கிட்டு இருப்பாரு எங்கியோ, அஞ்சு தெரு தள்ளி காருக்கு குறுக்கா வந்துவிடும் ஆட்டுக்குட்டியை அத்தனை வீட்டு ஓட்டையும் ஒடச்சி போட்டு வந்து காப்பாத்துவார்.அது மாதிரி இங்க.. ஹிஹி..

படத்துல தேடிப்பார்க்க வேண்டியிருப்பது ஆஸ்கார் நாயகன் தான். எவ்வளவு வயசாயிடுச்சி அவருக்குன்னு இப்பதான் தெரியுது.பாட்டெல்லாம் எங்கெங்கயோ வந்து விழுது,புனே'யில் மல்யுத்தத்திற்கு பிறகு வர்ற இசையெல்லாம் வெண்டாவி அத்து வரும்வேளையில் அண்டங்காக்கா கரைந்த மாதிரி சூழலுக்கு ஒவ்வாத மெட்டுகள்.. சின்னப்பசங்கள வெச்சு இசைக்க விட்டுருக்கணும். பேசும் போதும் பின்னால ஹார்மனில்லாம் தேவையா. வசனமே கேக்கல.



வில்லனுக்கு பஞ்சமா? இப்பல்லாம் எஸ் ஜே சூரியா அடிக்கடி இந்த மாதிரி வர்றார். ப்ரகாஷ் ராஜ்,சாயாஜி ஷின்டேக்கெல்லாம் வயசாயிடுச்சி போல.இவ்வளவு இங்கிலீஷெல்லாம் பேசுற நித்யா மேனனுக்கு மொத்த ஆஸ்பத்திரியையே எழுதிக்கொடுக்கும் போது என்னெ ஏதூன்னு கேக்கத்தோணலியா..ஹ்ம்..?

மூன்று தலைவிகளையும் அவரவர்க்கேத்த இடத்தில் வைத்திருந்தாலும் அந்த ரோஸ்மில்க் அக்கினேனி பாக சால உந்தி அட்லி.. 'நானாவது அஞ்சு நிமிஷம் பஞ்ச் பேசி அடிப்பேன், அவன் அடிச்சிட்டுதான் பேசவே ஆரம்பிப்பான்னு' தன்னையே கலாய்த்துக்கொள்ள அனுமதித்த விஜய்க்கு ரொம்ப நாளைக்கிப்பிறகு ஒரு செம ஹிட். ஆஹா மறந்துட்டேன்.. ஜோஸஃப் விஜய்க்கு மெர்சல் ஹிட்டுங்ணா <3 br="">


.

Monday, October 9, 2017

Look What You Just Made Me do!




Taylor Swift - Look What You Made Me Do

Pre-order Taylor Swift's new album, reputation, including "Look What You Made Me Do," here: http://smarturl.it/reputationTS http://vevo.ly/MOlgkR



Look What You Made Me do! Taylor Swift புதுப்பாடல். வழக்கம்போல இருக்கும் பெப்பி திங் மிஸ்ஸிங். வழக்கமான பாப் இசைதான். ஒண்ணும் வித்தியாசமில்லை. இருக்கிற அனோரெக்ஸிக் பாடிக்கு சும்மா ஒப்பனை இல்லாம வந்தாலே எலும்புக்கூடு மாதிரி தான் இருப்பாங்கோ :) இதுல ஸ்கெலிடன் மேக்கப் வேறயா? ரெப்பூட்டேஷன் ரொம்பவே கலங்கி கிடக்கு போல. ஹிஹி அது என்ன லிப்ஸ்டிக்கா இல்லை ஏஷியன் பெயின்ட்ஸா ?! ‘மறக்க முடியுமா'ன்னு ஒரு பழைய படம். எஸ் எஸ் ஆர் நடிச்சது. அதுல கடைசி சீன்ல இது மாதிரி தான் அவங்க அந்தப்படத்தில நடிச்ச கேரக்டரைப் பற்றி சொல்லி பின்னர் மறக்க முடியுமான்னு கேக்கற நாடகத்தனம் மாதிரி , இங்க டெய்லர் ஸ்விஃப்ட் கட்டின அத்தனை வேஷமும் ஒண்ணா நின்னுக்கிட்டு.. ஹ்ம். என்னத்த சொல்றது? பல இடங்களில் இவரின் முகம் எனக்கு 'ப்ரிட்னி ஸ்பியர்ஸ்' போலவே தோணுகிறது.

இதுல ஹாப்பிட் மாதிரி என்விரான்மெண்ட் எல்லாம் க்ரியேட் பண்ணி… ம்யூஸிக் வீடியோக்கு மெனக்கிட்ட மாதிரி கொஞ்சம் பாட்டுக்கும் 'கிட்டி'ருக்கலாம். ரெப்பூட்டேஷன்னு பேர் வெச்சதுக்கு 'ரெற்றொஸ்பெக்ட்'ன்னு வெச்சிருக்கலாம். எல்லாக் கலைஞர்களும் இது போன்ற ஒரு நிலைக்கு வந்து செல்வர்னுதான் நினைக்கிறேன். வரிகளும் சொல்லிக்கிர்ற மாதிரி இல்லை ..இந்த நாலு வரிய வேணா சொல்லலாம்.

The world moves on, another day, another drama, drama
But not for me, not for me, all I think about is karma
And then the world moves on, but one thing's for sure
Maybe I got mine, but you'll all get yours 


ஹே டி எஸ் ,Look What You Made Me do! Look what you just made me do ;) ;)


.

Friday, October 6, 2017

நந்தவனத்தில் ஓர் ஆண்டி


நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி ..ஹிஹி.. அதுக்கப்புறம் நம்ம முருக்டாஸைத்தான் கேக்கோணும். பிறர் அழுவதைபார்த்து மகிழும் செம்மம். எல்லாருந்தான். எஸ் ஜெ சூர்யாதான் ஹீரோ. 'டை ஹார்ட் வித் வெஞ்சென்ஸ்' ஜெரீமி அயன்ஸ் போல பாறையை உடைக்க சொல்யூஷனை ஊற்று எனக்கூறிவிட்டு இந்தப் பக்கம் ஆஸுபத்திரியை தகர்க்க,இல்லை இல்லை பேங்க்கை கொள்ளையடிக்க முற்படும் வில்லன். மகேஷு பாவு என்டு ஒருத்தர் தான் ஈரோவாம். எப்படிப்பாத்தாலும் 'அம்மா பாட்டில்ல இவ்ளவ்தான் பாலா, இன்னுங்கொஞ்சம் ஊத்தும்மா'ன்னு கேக்கறா மேரி ஒரு மூஞ்சி. ஆக்ரோசம், அவமானம், அழுகை, சிரிப்பு,எல்லா எழவுக்கும் ஒரே மொகச்சாடை. பீடை. அடக்கருமமே இவனெயெல்லாம் அக்கட டேஸம் எப்டித்தான் சூஸ்த்துன்னாரோ ? கெரஹம்டா.

 
எஸ் ஜெ சூர்யா, கதாப்பாத்திரத்தேர்வு அமர்க்களம். அந்த மனிதி படத்துக்கப்புறம் ஆளு சொம்மா எல்லாருக்கும் சவால் விட்றாபோல நடிக்கிறார்ங்ணா. என்ன கிறிஸ்டோஃபர் நோலனின் 'ஜோக்கர்' போல வேஷங்கட்டிக்காம நடிச்சிருக்கார். இரண்டு விரல்களை துப்பாக்கி போல குறுக்கி வைத்துக்கொண்டு ஆசுவாச நடை பயிலும் ஜோக்கர். முன்னவர் ஸ்கேட்டிங்க் போர்டில் வருவார், இங்கு வெறுமனே நடை அவ்ளவ்தான். தம்பியை அந்த ஈரோ 'பால் புட்டி' கன்பாயிண்ட்ல நிக்கவெச்சு பாயிண்ட் ப்ளாங்க்ல போட்டுத்தள்ளும்போது இதழ்க்கடையோரம் ஃபூ'ங்கறார். பயம்னா என்னான்னு கைல விலங்க அவுத்துவிடச் சொல்லிட்டு முன்னால உக்காந்திருக்கிற 'ஃபீடிங்க் பாட்டிலுக்கு' வெளக்கம் சொல்றார். ஜெயகாந்தனின் நந்தவனத்தில் ஓர் ஆண்டி எஸ் ஜெ சூர்யா. எல்லாரும் அழணும் தான் அதப்பாத்து மகிழணும். இயல்பாவே அது போலவே இருக்கார். ஆமா எதுக்கு,அது மட்டும் கேக்கப்பிடாது. அது அப்டித்தான்.



ஹாரீஸுக்கு ஒரு வேலையுமில்லை. சூர்யாவின் காட்சிகளில் வெறுமனே மயானச்சங்கை ஊதி ஊதி வாய் வலிச்சது தான் மிச்சம் போலருக்கு, அவருக்கு எப்பவோ சின்னப்பயலுஹள்லாம் இங்க சேர்ந்து ஊதீட்டாங்ய :) #ஸ்பைடர்

.

Sunday, October 1, 2017

ஏழு தோட்டாக்கள்



'ஐ யாம் கௌரி' நேற்று சாயங்காலம் செயிண்ட் ஜோஸஃப் கல்லூரி அரங்கத்தில் திரையிடப் பட்டது. அரங்கு நிறைந்த மௌனம். ஆங்கிலம் மட்டுமே பிழையின்றி எழுதிப்பேசிக் கொண்டிருந்த கௌரி, கன்னடத்திலும் வெகு குறுகிய காலத்திலேயே பத்திகள் எழுதுமளவுக்கு தேர்ந்தார். பத்திரிகைகளில் வரும் எழுத்துப்பிழைகளை சரிபார்க்கும் அளவுக்கு முன்னேறினார். பிறப்பால் கன்னடராயினும் ஆங்கில வழிக்கல்வி பயின்றவர். பங்காளிச்சண்டையில் 'லங்கேஷ் பத்திரிகே' கை நழுவிப்போன போது கொஞ்சமும் அசராமல் இரண்டே வாரங்களில் 'கௌரி லங்கேஷ் பத்ரிகே' என ஒன்றைத்தொடங்கி இன்று வரை அதை நடத்திக் கொண்டிருந்தார். எடுத்துக்கொண்ட பிரச்னைகள் அவரை இந்த அளவிற்கு வன்முறைக்கு இலக்காக்கியிருக்கிறது. பழங்குடியினரின் வாழ்வாதாரம், ஜேஎன்யூ மாணவர்கள் கன்னையா குமார்/ஷீலா ரஷீத் போன்றவர்களை அரவணைத்துச்சென்றது, ஆர் எஸ் எஸ்ஸிற்கு கங்கணம் கட்டிக்கொண்டு எதிர்த்துப்பேசியது என.

ஐந்து மணிக்கு எனக்கூறியிருந்த போதும் , படம் திரையிட தாமதமானது. இயக்குநர் தீப்பு மன்னிப்புக்கூறிக்கொண்டு படத்தை தொடங்கி வைத்தார். தங்கு தடையின்றி கௌரி லங்கேஷின் பேச்சு, அவரது நடவடிக்கைகள் என தொடர்ந்தும் சம்பவங்கள் கோவையாக வந்து விழுந்தன. ஒரு ஆவணப்படம் பார்ப்பது போன்ற உணர்வே இல்லை. கிட்டத்தட்ட ஒன்றரை மணிக்கூறு படம் ஓடியிருக்கும். அரங்கில் அவரது அன்னை, மற்றும் நண்பர்களும் அமர்ந்திருந்தனர். வழக்கம்போல எல்லா அம்மாக்களையும் போல என் மகள் டாக்டராக வேணும் என்றுதான் விரும்பினேன் அவள் தான் ஜர்னலிஸம் எடுத்துப்படிக்கப்போகிறேன் என அதையே படித்து பின் முழுநேர பணியாக்கிக்கொண்டார்.

லிங்காயத் பிரச்னைகளையும் முன்னெடுத்துச்சென்றிருக்கிறார். லிங்காயத் வகுப்பைச்சேர்ந்த துறவிகளும் இறுதி ஊர்வலத்தில் பங்கெடுத்துக் கொண்டதைக்காண நேர்ந்தது. இஸ்லாமியர்களும் பர்தாக்களுடன் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். Communal Harmony என்றால் என்னவெனப்போதிக்க முயன்றவருக்கு பரிசு ஏழு தோட்டாக்கள். கௌரியால் கர்நாடக முதலமைச்சரை ஒரு ஃபோன் காலில் அழைத்து அவரை சந்திக்க முடிந்ததையும் நினைவு கூர்ந்தனர். எல்லோரும் வெகு எளிதில் அணுகும் படியான தூரத்திலேயே இருந்திருக்கிறார். திருநங்கைகளுடன் அவர் பேணிய உறவு, பழங்குடியினருடன் அவர் உரையாடியது என அத்தனையும் ஆவணக்கோப்பில் பதிவாகியிருக்கிறது.

அவர் சுடப்பட்ட அன்று உடன் வெளியான அத்தனை ட்வீட்களையும் இயக்குநர் தீப்பு' படத்தில் ஆவணப்படுத்தியிருக்கிறார். மாவோயிஸ்ட் கொல்லப்பட்டதில் என்ன தவறு என்று காரசாரமாக அவர் என்ன செய்ய விழைந்தார் என அறிந்துகொள்ளாமலேயே முன்கூட்டிய அவதானிப்பில் அள்ளித் தெளித்திருந்த கோலங்களைப் பதிவு செய்திருந்தார்.

அவருடன் பணியாற்றிய பத்திரிக்கை நண்பர்கள் அனைவரும் ஆவணப்படத்தில் பேசியி ருக்கின்றனர். எத்தனை பெரிய பத்திரிக்கைகளிலும் சம்பளம் நேரத்துக்கு கிடைப்பதில்லை எனினும் கௌரி லங்கே ஷ் பத்ரிக்கையில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தினத்தன்று சம்பளம் வழங்கப்பட்டதை நினைவு கூர்ந்தனர். கடைசி செப்டம்பர் மாதச் சம்பளத்துக்கென கௌரி லங்கேஷ் தமது எல் ஐ சி பாலிசியை சரண்டர் செய்திருப்பதாகவும் அதன் மூலம் இம்மாதம் வழங்கப்படும் எனவும் கூறியிருந்ததை எண்ணி மாய்ந்து போகிறார் பதிப்பாளர். தொடர்ந்தும் பத்திரிக்கை நடக்கும் என மேடையில் முழங்குகிறார். இரவு இரண்டு மணி எனப்பாராது விமான நிலையம் வரை வந்து தம்மை அன்புடன் அழைத்துச் சென்றதை நினைவு கூறுகிறார் கன்னையா குமார்/மேவானி. பின்னரும் காலை பத்து மணியளவில் தானே காரை ஓட்டிக்கொண்டு இவர்களை கூட்டம் நடக்கும் இடத்திற்கும் அழைத்துச்செல்கிறார். உழைக்கத்தயங்காத கௌரி.

இந்த ஆவணப்படத்தயாரிப்பில் பங்கெடுத்துக்கொண்ட அத்தனை பேரும் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்கள் , ஏற்கனவே கௌரி லங்கேஷுடன் இணைந்து பணியாற்றியவர்கள். இதே அரங்கில் தான் சென்ற ஆண்டு ஷீலா ரஷீத்' காஷ்மீர் போராளியின் பேச்சும் நடந்தது. படம் முடிந்ததும் அரங்கின் வெளியில் இயக்குநரை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தோம் நான் ஸ்ரீனி மற்றும் தோழர் சௌரி. இந்த ஆவணப்படத்தை தமிழகத்தில் திரையிட திட்டமிட்டிருப்பதை எங்களிடம் கூறினார் தீப்பு. எனது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பிரதி அனுப்பிவைக்க கோரிக்கை விடுத்தேன். தோழர் சௌரியும் அதையே வேண்டிக் கொண்டார். இரண்டொரு நாளில் இந்தப்படத்தை யூட்யூபில் பதிவேற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது என்ற தகவலையும் தெரிவித்தார் இயக்குநர்.

படம் முடிந்ததும் வழக்கமாக நாற்காலிகள் நகற்றுவதும். சலசலவென பேச்சு கிளம்புவதும் இயல்பு. அப்படி ஏதும் இங்கு அரங்கில் நிகழவேயில்லை. சட்டென விளக்குகள் எரியத்தொடங்கியதும் அவசர அவசரமாக கண்ணீரைத் துடைத்துக்கொள்ள எத்தனித்தனர் அனைவரும். அரங்கில் மயான அமைதி. மைக் எடுத்து இயக்குநர் தீப்பு பேசத்துவங்கியதுமே நிலமை சகஜமானது. எழுத்தை எதிர் எழுத்தால் சரி செய்ய வேண்டுமென்ற காலமெல்லாம் போயே போய்விட்டது.

ஆவணப்படத்தில் பணியாற்றிய அத்தனை பெயர்களும் பட்டியலிட்ட பிறகு ,கௌரி நம்மை நோக்கி 'உங்களுக்கென இன்னமும் இரண்டொரு வார்த்தைகள் உள்ளது பிறகு பேசுகிறேன்' என்று கூறியதும் திரை விழுந்தது. அவர் எப்போதும் பேசுவார் நம்முடன் அவரின் எழுத்துகள் மூலம் அதை யாராலும் தடுக்க இயலாது. .


.

Monday, September 25, 2017

ஒன் அண்டு ஹாஃப்/டபுள்

நேற்று சாயங்காலம் ஐயா பொதியவெற்பனின் பிரியாவிடை சந்திப்பிற்கென செந்தில் வீட்டுக்கு விரைந்து கொண்டிருந்தேன். சில்க் போர்டிலிருந்து ஆட்டோ எடுத்தேன், வழக்கம் போல நூறு நுற்றைம்பது என்றனர். ஏம்ப்பா என்ஜீவி காம்ப்ளெக்ஸுக்கு இவ்வளவா என்றவனை, ட்ராஃபிக் சார் என்னா பண்றது என்றார் தமிழில். அட நம்மூரு என்று எண்பதுக்கு ஒத்துக்கொள்ள வைத்துவிட்டு ஏற முயன்றபோது,கையில் சிகரெட் வைத்திருந்தார். இல்ல எனக்கு புகை ஆகாது , அத முடிச்சிருங்க என்று கேட்டுக்கொண்டதன் பேரில் அவசர அவசரமான ஊதித்தள்ளி விட்டு அணைத்தார். ஏறிக்கொண்டேன். போகும் வழியில் நினைத்ததை விட அத்தனை ட்ராஃபிக். 92ல வந்தேன் சார், இங்க தர்மபுரி பக்கத்துலருந்துவந்த நாள்லருந்து இதே ட்ராஃபிக் தான் சார். வாழ்க்கையே ட்ராஃபிக்ல தான் ஓடுது என்று சலித்துக்கொண்டார். எங்க சார் இப்பல்லாம் வருமானம்? ஓலா,ஊபர் காரன் எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு போய்ட்டான். நைட்லாம் ஒன் அண்டு ஹாஃப்/டபுள் வாங்கி ஓட்டிக்கிருந்த தெல்லாம் சுத்தமா வழிச்சிட்டான். நீங்களும் ஓலா'வில ஆட்டோவை சேர்த்துர வேண்டியது தானே. இல்ல நானும் வெச்சிருக்கேன், ஆனா மீட்டருக்கு மேலே பத்து காசு வாங்கமுடியாது அதான் கனெக்ட் பண்றதேயில்ல என்றார்.

பேசிக்கொண்டேயிருந்தவர் , இப்ப நான் குடிச்சிட்டு தான் வண்டி ஓட்டிக்கிட்டுருக்கேன் என்று குண்டைத்தூக்கிப்போட்டார் ...அடப்பாவி, இருந்தாலும் ஸ்டெடியா ஓட்டுவேன் சார், பயப்படாதீங்க என்று என்னை தைரிய மூட்டினார். என்ன சார் பண்றது வருமானம் பூரா கம்மியாயிருச்சி, மேவரும்படி இல்ல, வீட்டுக்கு போனா சதா சண்டை, அதான் அப்பப்ப கட்டிங் போட்டுருவேன். போன வாரம் என் மாமனாருக்கு இப்டித்தான் சார் ஆக்ஸிடெண்ட் ஆயிருச்சு என்று கலவரமூட்டினார். எப்டி என்றேன். ராத்திரில மூணு பேர் வண்டில போய்ட்டிருக்கும் போது பைக்காரனுக்கு வழி விட்றேன்னு சொல்லிட்டு வேகம் குறைக்க முடியாம பேரிகேட் மதில் சுவர்ல முட்டி என்றெல்லாம் கூறிக்கொண்டேயிருந்தார். இவன் ஒழுங்கா கொண்டுபோய் சேர்ப்பானா என்றாகிவிட்டது. அப்புறம், ஒண்ணும் இல்ல சார், ரெண்டு பேருக்கு கை ஒடைஞ்சு, மாமனாருக்கு நெற்றி பிளந்துகொண்டது, நாலு நாள் ஆச்சு சார் டிஸ்சார்ஜ் ஆகி என்றார். அதான் அவர் வண்டியத்தான் இப்ப ஓட்டிக்கிட்ருக்கேன் என்றார். இவன் செந்தில் வீட்டுக்கு போவானா இல்ல வேறேங்கயாவது கொண்டு போய் சேர்ப்பானா ?! என்றாகிவிட்டது எனக்கு.

சிக்னல் ரொம்ப நேரம் சிவப்பு. செந்தில் அழைத்தார் என்ன ராம் இவ்வளவு நேரமா என்றார். எப்டி சொல்றது, இந்தா வந்துர்றேன் என்றேன். ‘ட்ரங்க அன் ட்ரைவ்' புடிக்க மாட்டாங்களா என்றேன். அதெல்லாம் இந்த ஏரியால இல்ல சார் அப்டியே வந்தாலும் ஐநூறு குடுத்தா விட்ருவான் என்று நம்பிக்கையாக சொன்னார். பெரும்பாலும் ஆட்டோக்காரங்களை பிடிக்க மாட்டாங்க சார் அதான்.. ஒண்ணும் பயமில்ல என்றார். எனக்குத்தான பயம். கொஞ்சம் மெதுவாவே போங்க எனக்கு ஒண்ணும் அவசரமில்லை என்றேன். என்ன தம்பி பயந்துட்டீங்களா என்று சிரித்தார். வாடை வீசியது. ஒரு வழியாக காம்ப்ளெக்ஸ் வந்திறங்கியதும் , சரியான சில்லறை கொடுத்தார். பாத்து போங்க, வேகம்லாம் வேணாம் என்றேன். அடப்போங்க தம்பி, என்று சிரித்தவாறே ஆட்டோவைத்திருப்பிக்கொண்டு விரைந்தார்.

Thursday, August 31, 2017

தும்பைப்பூத்'தல


'பயத்துக்கு பாஷை இல்லை'.ஹ்ம்,, நல்லாருக்கு சிவா. இது மாதிரி தெறி வசனமெல்லாம் அஜீத் பேசும் போது நல்லாத்தானிருக்கு, ஆனாலும் மொழி தெரியாம படம் பாக்கறவங்கள மனசில வெச்சே ஒவ்வொரு சொல்லையும் இருபது செகண்ட் இடைவெளி விட்டு பேச வெச்சது தான் படத்த ரெண்ற மணி நேரத்துக்கு இழுத்துவிட்ருக்கு. 'சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க' எனப்பாடிக்கொண்டிருந்த அஜித் அழகு அமுல் பேபிய காடு, மேடு, மலை, ஐஸூ, துப்பாக்கி வெடிகுண்டுன்னு கெளப்பி விட்றுக்கார் சிவா.

அஜீத் தாவுகிறார், பைக்கில் எகிறுகிறார், மேலிருந்து குதிக்கிறார், மரக்கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்கிவிழுகிறார். அவ்வப்போது பில்லாவில் பழகிய நடையை இன்னும் மறக்காது வராண்டாவின் நீளம் அளக்கிறார். கமாண்டோ ஆர்னி போல வலுவான மரம் சுமக்கிறார், துப்பாக்கி குண்டுகளால் சுவரை AK என்றெழுதி நிறைக்கிறார். இடையே கொஞ்சம் மையலும் சமையலும் செய்கிறார். அது பிரியாணியா எனத்தெரியவில்லை. எத்தனையோ தொழில்நுட்ப விஷயங்களை புதுமையாக புகுத்தியவர் , இந்த வாசனையையும் தியேட்டரில் பரவ விடும் தொ.நு'வையும் செய்திருக்கலாம்.அடுத்த படத்தில் செய்வார்.


ஹேக்கர் இந்தப்பதம் இப்போதெல்லாம் பரவலாக புழங்க ஆரம்பித்துவிட்டது. எல்லாம் ரேன்ஸம்வேர் சாறுண்ணியால் வந்த விளைவு. ஹ்ம். நல்லது தான் தமிழ் கூறும் நல்லுலகம் இவ்வாறான பதங்களை சினிமா வாயிலாகவாவது அறிந்துகொள்கிறதே. முன்னெல்லாம் கேன்சர் குணப்படுத்தவே முடியாத வியாதி என்ற அரிய பெரிய உண்மைகளை மட்டுமே கூறி வந்த தமிழ் சினி உலகம் இவ்வாறான தகவல் தொ.நுட்ப அறிவையும் அறிமுகப்படுத்தி வைக்கிறது. ஹாலோக்ராம்' ஏற்கனவே சுஜாதா எழுதியது தானே. என் இனிய இயந்திராவில் கடைசி அத்தியாயங்களில் ஹாலோக்ராம் உருவம் கொண்டே இத்தனை நாள் உலகை ஆண்டது என்ற உண்மையை தெரிய வைப்பார்.ஆகவே இங்கு அதொன்றும் புதிதில்லை.

ஐஸ்குச்சி உறிஞ்சும் ஐந்தாம் வகுப்பு பெண்ணும் சொல்லிவிடுவாள் அடுத்து என்ன காட்சி என.அங்குதான் திரைக்கதை சொதப்புகிறது. எப்பவுமே ஹீரோதான் ஜெயிப்பார் என்று தெரிந்தே பார்க்க முற்படும் படங்கள் மட்டுமே எப்போதும் வருகின்றன. ஒரு மாறுதலுக்கு ஹீரோ தோற்று ஒழியட்டுமே. ஹ்ம்.. அதெல்லாம் நடக்குமா என்ன? நான் லீனியர் திரைக்கதையோ இல்லை இடைவேளைக்குப்பிறகு சடாரென எதிர்பாராத மாற்றமோ எதுவும் இல்லை. இதே கதைக்களத்தை ரேக்ளா ரேஸ் வைத்துக்கொண்டு , உள்ளூர் கண்மாயில் விஷம் கலக்கும் வில்லனை வீழுத்துவது போலவும் எடுக்கலாம். என்ன 'செர்பியா' போக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. செம்பரம் பாக்கத்திலேயே எடுத்து ரெண்டு பொங்கல் பாடல்கள் வைத்து முடித்திருக்கலாம். ஆஹா.. அதான் வீரம்'னு ஏற்கனவே எடுத்துட்டார்லப்பூ.


சுனாமி அடித்தபோது விவேக் ஓபராய் தமிழகம் வந்து ரெண்டு மாதம் தங்கியிருந்து அத்தனை மக்களுக்கும் அந்தப்பகுதியில் சேவை செய்தார். அதற்கு நன்றிக்கடன் வில்லன் வேஷம் போலருக்கு இங்க. என்ன காரணத்துக்காக விவேக் ஓப்ராய் அஜித்துக்கு துரோகம் செய்கிறார்? அவர் சாப்பாட்டில் மண்ணள்ளிப் போட்டாரா ? இல்லை அவர் கேர்ள்ஃப்ரென்டை ஆட்டையத்தான் போட்டாரா அஜித்? அப்படி ஒன்றுமே நடக்கவில்லையே ?. சிவாதான் பதில் சொல்லோணும். ஆ ஊன்னா துரோகம் பண்ணக் கிளம்பிர்றாரு ஆர்யன். ஒரு இணுக்கில் கூட ஆர்யனின் உள்ளர்த்தம் தெரியாமலா பழகியிருப்பார் அஜீத்...நம்பும்படி இல்லை ..ஹ்ம்.. அஜித் தமது பிள்ளைத்தமிழ் பேசி நடித்து வெளிவந்த ஆசை, வாலி போன்ற படங்களே எனது தெரிவு. முறுக்கேற்றி சிக்ஸ் பேக் காட்டி இன்னபிற ஆர்னி வகைறாக்களை எல்லாம் ரசிக்க இயலவில்லை. எல்லாம் சரி கூடவே அலைந்து கொண்டிருக்கும் அந்த வெளிநாட்டு பெண்மணிக்கு காதல் மன்னன் அஜித் மேலே மையலே இல்லையே ஏன்..? அழகை இழந்துவிட்டாரா அஜித்.?

ஜேம்ஸ்பாண்ட் பாணி படங்கள் எடுக்கலாம் தான். லாஜிக் முக்கியம் ஞாயம்மாரே. ஏழு தடவ திருப்பி திருப்பி சுட்டா எந்த புல்லட் ப்ரூஃபும் தெறிக்கும். கக்கத்திலேயே கட்டி வைத்துக் கொண்டு இருக்கும் குண்டு பொதிகள் எத்தனை தாவி அடித்த போதும் பொட்டித் தெறிப்பதில்லை, பல நாட்கள் உணவேயின்றி அத்துவானக்காட்டில் அலைந்த போதும் மரக்கிளையில் புல்லப்ஸ் எடுக்க முடியும், பின்னர் அத்தனை ரிவ்யூக்களிலும் சொல்லிக் களைத்த நானூறு பேர் சுற்றிக்கொண்டு சுடும்போதும், நான்கு ஹெலிகாப்டர்கள் கீழ்நோக்கி குறிவைத்தும் தல' தப்புவது தம்பிரான் புண்ணியம் போன்ற காட்சிகள் 'எஸ் வி சேகரின்' நாடக டைட்டில்.

கமலின் விக்ரமில் துபாஷ் ஜனகராஜ் சபாஷ். இங்கு கருணாகரன் வெறும் டப்மாஷ்.



தம்பி அநிருத் புகுந்து விளையாடிருக்கான். இந்தப்பசங்களுக்கு எல்லாம் கீ போர்டு சகிதமே பிறந்த இக்காலப்பிள்ளைகளுக்கு இசை உருவாவது, வாழ்வது பின்னர் சப்தமின்றி மரணிப்பது என்பதெல்லாம் சிந்த்'தில் மட்டுமே. சர்வைவா' ஒரு ரியல் ராக். ஆம், ஹெவி மெட்டல் தான். அடித்து சொல்வேன். ப்ளாக் சப்பாத், லிங்கின் பார்க், ஹார்ட் ராக் கஃபே அயிட்டம் தான். ஆனாலும் அதை வைத்தே ஒப்பேற்ற முடியுமா? தீம் இசை என ஒன்றுமில்லை. பழைய பாணியாகி விட்டது போல. ரெட்ரோ வேண்டாம் என முடிவெடுத்து இசைத்திருக்கிறார். என்றாலும் பின்னணி இசை என்ற ஒன்றிற்கு டால்பி சர்ரவுண்டு சவுன்டு என்றெல்லாம் வந்த பிறகு அடித்து துவைத்தால் போதும் என்பதில்லை இசை. இப்பதான் டன்கிர்க் வந்திருக்கு, அதையாவது கேட்டிருக்கலாம்.

இழையோடும் இசை வேண்டும், ஃபேமிலி செண்டிமெண்ட்டுக் காகவாவது இசைத்திருக்கலாம் ஒரு தீம். எங்குமில்லை. அடிதடி இசை. ஹ்ம்.. இருப்பினும் இன்னமும் வளரவேணும் தம்பி பின்னணி இசையில். ‘உதயம்' பாரு தம்பி ராசைய்யா இறங்கி அடித்த படம். காட்சியே பார்க்கவேணாம். அடிவயிறு சில்லிட்டுப் போகும் ஒவ்வொரு முறை ரகுவரன் தோன்றும் காட்சிகளெல்லாம். இப்போதெல்லாம் இது போன்ற படங்களுக்கு ராசைய்யா இசைப்பதே இல்லை என முடிவெடுத்துவிட்டதே பெரிய குறை. இங்கு பிற பாடல்கள் எடுபடவில்லை. மேலும் பாடல்களை பின்னணியில் இசைத்துவிட்டு போவதால் லயிக்க இயலவில்லை.

அக்ஷரா'வை வரவழைக்கவென வரும் காட்சியில் அந்தத் தெரு இசைக்கலைஞன் இசைக்கும் ட்ரம்ஸ் சம்மதிக்கணும்டா தம்பி அநிருத். முழுக்காட்சி கோவையுமே அற்புதம். சிவா'வை இங்கு மட்டுமே மெச்சலாம். எதிர்பாராத ப்ளான் பி! நைஸ் சிவா. அஜித்தும் சொல்லும் அந்த பிளான் பி என்ற கரகரத்த குரல் ஹ்ம்..ப்யூட்டிஃபுல்.



'மற்றவர்கள் அவரோடு உழைச்சவங்க, நான் அவரோடு பிழைச்சவ' என்ற மாதிரியான சவ சவவென ஒரு வசனம் பேசிக்கொண்டு இருக்கிறார் காஜல். மேக்ஸிம் பத்திரிக்கைக்கு ட்யூப் டாப் கூட இல்லாமல் கைகளை வைத்து 'ஹேண்ட்பிரா' என மறைத்துக்கொண்டு போஸ் கொடுத்து மாடலிங்கிற்கென உழைத்ததை விட இங்கு ஆறுகெஜம் புடவையை சுற்றிக் கொண்டு அக்ரஹாரத்து அம்மணி மாதிரி வந்ததற்கு அதிகமாக ஒப்பனை செய்திருக்க வேணும். உழைத்திருக்க வேணும். ‘பயத்துக்கும் பெருமைக்கும் இடையில் வாழ்கிறேன்' என்கிறார். செண்டிமெண்ட் பாகங்கள் ஜேம்ஸ்பாண்டு படங்களில் காணக்கிடைப்பதேயில்லை. இந்த கேர்ள்ஃப்ரெண்ட் இல்லைன்னா இன்னொண்ணுன்னு போய்ட்டே இருப்பார் பாண்டு. இது தமிழல்லவா , மண்ணின் பெருமை காக்கவேணும் தோழா , அதுனால வைஃப் செண்டிமெண்ட். எம்' எப்பவும் பாண்டு வேட்டைக்கு போகும்போது ' Come back alive James’ என்பார். அது போல காஜல் இங்கு திரும்பி வாங்க என்கிறார். அஜீத்திற்கு அந்த 'Ready to Rage’ ஒப்பனை பிரமாதம். ஃபர்ஸ்ட் ப்ளட்டில் சில்வெஸ்ட்டரின் ஒப்பனையை ஒத்திருந்தது.காயங்களும் கிழிந்த சட்டையும், குத்தி துளைத்தெடுத்த சதைத்துணுக்குகளுமென அதகளம்.

வில்லன் கூட்டதில் ஒருத்தனை பிடித்து வைத்து விசாரிக்கும்போது அவனிடம் இருக்கும் வெடி கொண்டு வெடிக்கப்போகிறது, அந்த நேரத்தில் காஜல் அஜீத்தை அழைக்கிறார். இல்லக்கிழத்தி சொல் தவறாக்கணவனாக அந்த இடத்தை விட்டகல்கிறார் ,,ஓ குண்டு வெடிப்பிலிருந்து தப்பிக்கிறார் தலை'வன். அதனால இனிமே பெண்சாதி இருக்கப்பட்டவா'ல்லாம் அவா கூப்பிட்டா ஒடனே எங்கருந்தாலும் ஸ்தலம் விட்ருங்கோன்னேன்... ஹிஹி..அதான் கேட்டேளா?

கிட்டத்தட்ட இதே பின்னணியில் ஆர்னால்டு நடித்த 'ட்ரூ லைஸ்' பாருங்க. கொஞ்சம் ஃபேமிலி செண்டிமெண்ட்டும் கலந்து குழைந்து கொடுத்திருப்பர். காதல் மன்னனை பிறன்மனை நோக்கா பெருமானாக ஆக்கிவிட்டிருக்கிறார் சிவா. இருப்பினும் பிறந்த குழந்தைக்கு , ஆ அதான பாத்தேன்...அது பெண் குழந்தைங்ணா, அக்ஷராவின் பெயரான நடாஷா எனப்பெயர் சூட்டி மகிழ்கிறது ஃபேமிலி. படம் முடியும்போது காரினுள் இருக்கும் அந்தச்சிறிய மானிட்டரில் அடுத்த ஆப்பறேஷன் என்று என்னவோ பச்சைத்திரவம் ஒளிர்கிறது. நமக்குள் புளி கரைகிறது.


Wednesday, August 16, 2017

புதிதாய்ப்பிறந்த மகள்


நேற்று புதிதாய்ப்பிறந்த கேகேயின் புது மகளைக்காண இன்று ஓசூர் சென்றிருந்தேன் செந்திலுடன். அரைமணி விழித்திருப்பை பார்க்க வாய்க்கவில்லை. பாட்டியின் மடியில் கைகளை அசைத்து உறங்கிக் கொண்டு இருந்தாள். வரவேற்ற பெரியசாமி 'குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்' தொகுப்பைக் கொடுத்து வாசித்துப் பாருங்கள் என்றார். வெளியில் தேநீர் அருந்த வந்த போது அடை மழை. கவிஞனுக்கு பிடித்தது வெறும் சிறுமழை. ஒரு மணிக்கும் கூடுதல் மழை. ஒதுங்கி நின்றோம் நானும் செந்தில் மற்றும் முகிலனும். 

முகிலன் இந்தோனேஷியக்கதைகளை விலாவரியாக விளக்கிக் கொண்டிருந்தார். எட்டு மணி நேர வேலை மட்டும்.பதவி உயர்வே தேவையில்லை, நான் இப்படியே ஓய்வுறும்வரை பணீயாற்றவே விருப்பம் என எழுதிக்கொடுத்து விட்டு வேலை செய்யலாமாம். ஹ்ம். அதெல்லாம் நம்ம ஐ.டி' யில் நடக்கிற காரியமா ? ஆறுமணி நேரப்பயணம் கடந்தே பணிக்கு செல்லவும் வீடு திரும்பவும் அத்தனை ட்ராஃபிக். பொதுப் பேருந்துகளே இல்லை என சொல்லிக்கொண்டே இருந்தார். மழை வலுத்தது. குளம் போல கணுக்கால் வரை நனைத்தது. வீட்டுக்குள் மழை புகுந்துவிட்டதாம் எனக்கூறி விட்டு சென்றுவிட்டார்.

பொழுது போகவில்லை மழையின் ஒச்சை அடங்கமறுத்தது. கிளி ஜோசியக்காரர் மழைக்கு ஒதுங்கி தமக்கு தேநீர் அருந்த வந்திருந்தார். வலுவான மழை. பெட்டியைக்கீழே வைத்துவிட்டு குடித்துக் கொண்டிருந்தார். உள்ளுக்குள் கிளி மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. செந்திலுக்கு ஒரு சிறிய விருப்பம். ராம் கிளி ஜோசியம் பார்க்கலாமா? (என்னைக்கேட்டா கிளிக்கு வேண்ணா ஜோசியம் பார்க்கிறேன்.) வேணுன்னா நீங்க பாருங்க என்றேன். தேநீர்க்கடை உரிமையாளரிடம் அனுமதி வாங்கி கடை விரித்தார். நீங்க உட்காரணும்னு அவசியமில்லை. தட்சிணை வைத்து விட்டு பேர் சொல்லுங்க என்றார். கிளி வெளியே வந்தது, யார் பேருக்கு சீட்டு எடுக்கிறாய் என்றார். செந்திலின் காலடியைத் தொட்டு விட்டு வந்து மூன்றாவது சீட்டை எடுத்துக் கொடுத்து விட்டு தாமாக உள்ளே சென்று உட்கார்ந்து கொண்டது.

பலன் சொல்லி முடித்தார். செந்தில் ஏதும் பேசவில்லை. நான் அவரிடம் பேச்சு கொடுத்தேன். 'ஐயா நீங்க இந்த கம்பளத்தார்' வகையைச் சேர்ந்தவரா என வினவினேன். ஆமா தம்பி, இப்பல்லாம் யார் தம்பி ஜோசியம் பார்க்கிறா, தொழில் செய்யத்தெரியாதவ ரெல்லாம் இதை செய்ய ஆரம்பித்து விட்டனர். சிபாரிசுகள் மற்றும் அறிந்தவர் மட்டுமே இப்போது தம்மிடம் பார்க்க வருகின்றனர் என்றார். கைரேகையெல்லாம் பார்ப்பீங்களா ..இல்லை தம்பி அது எனக்கு பழக்கமில்லை. கிளியை நீங்க பழக்கினீங்களா என்றேன். இல்லை இது பழக்கியே வைத்திருந்த கிளி அதை வாங்கி இப்போது இருபது வருசமா வைத்திருக்கிறேன், சோறு,பழம், நெல்லு இதை மட்டும் நேரா நேரத்துக்கு கொடுத்துவிட்டால் அது பாட்டுக்கு இருக்கும் தம்பி என்றார். 

அவருக்கும் பொழுது போகவில்லை.மழை விடாது பெய்து கொண்டிருந்தது. கேகேவிடம் சொல்லிவிட்டு இப்படியே பெங்களூர் திரும்பலாம் என்று நினைத்தோம் பின்னரும் இன்ன பிற நண்பர்கள் மருத்துவமனை வந்திருப்பதை அறிந்து ஜீன்ஸை மூட்டு வரை ஏற்றிக் கட்டிக்கொண்டு நீந்தி சென்றடைந்தோம். 

திரும்ப பெங்களூர் வரும்போதும் அடை மழை. பேருந்தில் நிற்கவும் இடமில்லை. கடைசி இருக்கை அருகில் சென்று ஒண்டிக்கொண்டேன். பெரியசாமி'யின் கவிதைப்புத்தகத்தை விரித்து வாசித்துக் கொண்டிருந்தேன். அதிலிருந்து ஒரு கவிதை

தாள் ஒன்று
தன்னில் எதையாவது வரையுமாறு
அழைப்பதாகக்கூறிச்சென்றான்
வர்ணங்களைச் சரிபார்த்து
ஒன்றிரண்டை வாங்கிவரப் பணித்தான்
மகாபாரதம் தொடரில் கண்ணுற்ற
ரதம் ஒன்றை செய்யத்துவங்கினான்
ஒளிர்வில் வீடு மினுங்க
நின்றது பேரழகோடு


மற்றொரு நாளில்
புரவிகளை உயிர்ப்பித்துப்பூட்டினான்
அதிசயித்து ஊர் நோக்க
வானில்
பவனி வந்தான்



.

Friday, August 11, 2017

மெர்சல்


எண்பதுகளில் ஆல் இந்தியா ரேடியோவில், தேசபக்திப்பாடல்கள் என இசைக்கப்படும். அத்தகைய தரத்தில் இப்போது ரஹ்மானின் மெர்சல். நிலையக் கலைஞர்களை வைத்துக்கொண்டு சம்பளத்துக்கு கடனே என வாசிப்பார்கள்,கொஞ்சமும் கேட்டே விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு இசைத்தது போலிருக்கும். இங்கும் அதே போல கைலாஷ் கேர்,ரஹ்மான், தீபக்,சத்யப்ரகாஷ், மற்றும் தீபா என ஆஸ்தான வித்துவான்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாத கோஷ்டி கானம். புதிய கற்பனை என்ற வஸ்துவே கரைந்துவிட்டது போல என்ன தான் சொல்வது ?. இடையிசை எல்லாம் ரஹ்மான் தானா என கேட்கவைக்கின்றன.

பொதுவாக முதல் பாடல் வெளியீடு என்பது மிரட்டலான பாடல்களாகவே இருக்கும். அதுவே இப்படி என்றால் ?! சொய்வு தெரிகிறது. அவரே இசைத்த பழைய பாடல்களின் அத்தனை சாயல்களும் தெள்ளத் தெளிவாக தெரிவது சலிப்பு. கேட்கப்போனால் 'ரெட்ரொ' என்ற சப்பைக்கட்டு பதில் வரும். பொதுவாகவே ரஹ்மானுக்கும் விஜய்'க்கும் அத்தனை ராசி இருப்பதில்லை. அவர் இவருக்கென இசைத்தவை எல்லாம் காற்றோடு என்றோ கரைந்து போய்விட்டன. அத்தோடு இதுவும் ஒன்றாகும்.

இப்போது ராசைய்யாவும் மலையாள 'க்ளிண்ட்'ல் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை என்பதே நிஜம். பாஸ்ட் லாரல்ஸ்ஸுடன் (Past Laurels) இருந்துகொள்ள வேண்டியது தான்,
#மெர்சல்

பாடலின் சுட்டி


https://www.saavn.com/p/album/tamil/Aalaporaan-Thamizhan-From-Mersal-2017/vKRNQcDdNqQ_


.

Thursday, August 10, 2017

வெண்ணிலாவும் மின்னலும்


தீபன்' பார்க்க போயிருந்தேன், புலம்பெயர் படங்கள் வரிசையில் இந்தப்படம் இன்று திரையிட்டனர் பெங்களூர் டெரி அமைப்பின் அரங்கத்தில். படத்தில தமிழ்ல பேசும் வசனங்களுக்கு ஆங்கிலத்தில் சப் டைட்டில். அதே படம் முழுக்க வரும் ஃப்ரென்ச்சுக்கு இல்லை. என்ன கொடுமை. ஒண்டுமே விளங்க இல்ல. :) தமிழர்களுக்கு அண்டர் ஆக்டிங்கெல்லாம் வரவே வராது. இங்கும் அதுவே. அந்தோனிதாசனும் அப்படியே. உறுமிக்கொண்டிருந்த புலியை கூண்டில் அடைத்துவைத்த போதும் உறுமத்தான் செய்யும் உள்ளுக்குள்ளாவது. அதை வெளிக்காட்டவே தெரியவில்லை. யாழினி'யாக நடித்தவர் தேவலை. 

இதையே ஒரு நல்ல தமிழ் இயக்குனரிடம் கொடுத்திருந்தால் இன்னமும் சிறப்பாக வடிவமைத்திருப்பார். அதெல்லாம் சரி எதுக்கு யானையை இரண்டுமுறை காட்டுகிறார். இலங்கைக்காட்டில் யானையா மதம் கொண்டது அடப்பாவமே.. நந்திக்கடல்லயே எல்லாம் முடிஞ்சுபோய்ட்டுது என்னும் காட்சி பரவாயில்லை. பிறகு வீறு கொண்டு ஒரு வீரமிகு பாடல் தமிழில் பாடுகிறார். ஹ்ம்.. என்னவோ அந்தோனி தாசன் உருவத்துக்கு,உடலுக்கு குரல் கொஞ்சமும் பொருந்தவேயில்லை. பூனைக்குரல் போல இருக்கிறது, இயல்புக்குரலே அது தானா இல்லை டப் செய்ததா?!

சேர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பவரிடையே காதல் வருவது, எதோ ஒரு அட்ஜெஸ்மண்டில் கூடவே இருக்கும் சிறுபெண் மீது பாசம் வருவது என்பதெல்லாம் கடைந்தெடுத்த க்ளீஷே. ஃப்ரெஞ்ச் குடியுரிமை அதிகாரி தலைவனை நோக்கி கேள்வி கேட்கும் காட்சிகள் 'ஸ்கார்ஃபேஸை' ஞாபகப் படுத்துவது போல இல்லை என்பது அல்ல பிரச்னை,அதன் அருகில் கூட அந்தக்காட்சி போகவில்லை என்பதே வருத்தம்.

தமிழ்ப்படம் என்பதாலோ என்னவோ அரங்கில் அத்தனை கூட்டமில்லை. குளிரைக்கூட்டிக் கொண்டு ஏசி ஓடிக்கொண்டிருந்தது. நோ ஃபையர் ஸோன்' என்று அறைகூவல் விடுக்கிறார். ஹ்ம்.. சம்மதிக்கலாம் அதன் பிறகு அந்தக்கோடு என்னவாயிற்று. உள்ளுக்குள் போய் குண்டுமழை பொழியவே அந்தக்கோடுகள். கடைசிக் காட்சிகளை மிகச்சரியான தமிழ்ப்பட உச்சக்கட்ட காட்சிபோலவே அமைத்திருப்பது சலிப்பு. சிவதாஸன் அத்தனை சுகமில்லை.#தீபன்

.
 

Saturday, July 29, 2017

I'm just talking to myself




இந்தப்பாடலைப்பாடிய லீட் ஸிங்கர் 'செஸ்ட்டர் பெனிங்டன்' இறந்து கிடந்தார். இந்தப்பாடல் வெளிவரும் நாளில் 20 ஜுலை 2017. லிங்க்கின் பார்க்' புகழ்பெற்ற ராக் பேண்ட் பாய் பேண்ட். லைட்டாக கொஞ்சம் பாப்' ஸ்டைலில் இந்த ராக் பாடல். வலுக்கட்டாயமாக உச்சஸ்த்தாயியில் பாடியே ஆகவேணும் என்று பாடியதைப்போல , எல்லா ராக் பாடல்களும் அப்டித்தாங்ணா.


வரிகள் எல்லாம் சூப் பாய்ஸ் லைன்ஸ்தான். ‘ எனக்குள்ளேயே பேசிக்கொள்கிறேன்' அதத்தான் செய்ய முடியும் வேறு என்ன செய்வது ? I'm just talking to myself இதே குழுவின் இன்னொரு பாடகரும் இதே போல் தற்கொலை செய்துகொண்டார் சில ஆண்டுகளுக்கு முன்னர். இசை கொல்லுமா? ஹ்ம்.. கொலையும் செய்யும் போலிருக்கிறது


இந்தக்காட்டுக்கத்தலை பொறுத்துக்கொள்ளும் மனமிருந்தால் பாடலை ரசிக்கலாம். Pure Rock Band Song. இந்த வீடியோ ஸீக்வென்ஸை கட் செய்து முடித்து இயக்குநர் யூட்யூபில் ஏற்றி சில மணிகளுக்குப் பிறகே இறப்பு நிகழ்ந்திருக்கிறது. I'm just talking to myself கடைசியில் ஒலிக்கும் அந்த கிட்டார் பீஸ். மாயம்.

கடந்த இரண்டு நாட்களாக லிங்கின் பார்க்' குழுவிற்காக ட்ரிப்யூட் என 'விஎச்1’ சேனலில் தொடர்ந்து இக்குழுவினரின் பாடல்கள் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. முக்கியமாக இந்தப்பாடல். மேலும் இக்குழுவினரின் பாடல்கள் மட்டுமே அடங்கிய 'டாப் 20’ பல முறை ஒளிபரப்பாகியது.

The truth is, you turn into someone else
You keep running like the sky is falling
I can whisper, I can yell
But I know, yeah I know, yeah I know
I'm just talking to myself
Talking to myself

மிஸஸ் டவுட்ஃபையரில் நடித்த (அவ்வை சண்முகி ஆங்கில மூலம்) ரொபின் வில்லியம்ஸும் இதே போல தற்கொலை செய்துகொண்டே இறந்தார். அதீத மன அழுத்தம் காரணமாக. அப்போது நம்ம கமல் அவரைக்கடிந்து கொண்டார். (இங்கயும் கமல் வந்துட்டாரா ?!) அதீத மன அழுத்தமோ அல்லது தாங்க முடியாத துயரோ ஏற்படும்போது காட்டுக்கூச்சல் போட்டுக் கத்தினால் அத்தனை ரிலீஃப் ஆக இருக்கும். செய்து பாருங்களேன். பிறகேன் செஸ்ட்டர் இந்த முடிவை எடுத்தார் ??? இந்தக்குழுவிட ம் இல்லாத பணமோ ,புகழோ,  ஏகத்துக்கு ரசிகர் கூட்டமோ என வேறேந்தெக்குழுவிற்கும் இல்லை. எல்லாருமிருந்தும் இப்படி ஒரு முடிவு.!
# I'mJustTalkingToMyself