Thursday, December 22, 2011

காதல் கவிதைகள்



கொஞ்சம் காதல்
கவிதைகள்
எழுதித்தரவேண்டும்
என பதிப்பாளர்
என்னிடம் கேட்டிருக்கிறார்,
யாருக்கேனும் என் கனவில்
வந்து போக விருப்பமா ?

ஏற்கனவே பிறரின் கனவுகளில்
உலவியவராயிருப்பினும்
பரவாயில்லை.
நீங்களும் உங்கள் நினைவுகளும்
என் காதல் கவிதைகளில்
நிச்சயம் இடம்பெறும்
என்பது உறுதி.

என் கனவுகளில் என்றும்
நிலைத்திருக்க வேண்டிவரும்
என்று அஞ்சத்தேவையில்லை.
அச்சில் வெளிவரப்
பெறுமானமுள்ள
கவிதைகள் தேறும் வரையே
உங்களின் நினைவுகள்
எனக்குத் தேவைப்படும்

நான் உறங்கிக்கொண்டிருக்கும்
நேரம் பார்த்து என் கனவுகளில்
நுழைந்துவிடுங்கள்
நான் விழித்திருக்கும் நேரம்
நுழைய நேர்ந்தால்
எப்போதும் அழியாமல்
தங்கிவிட வாய்ப்புண்டு.



.

13 comments:

  1. விழித்திருக்கையில் இந்தக் கவிதை
    மனத்தினில் நுழைந்துவிட்டது
    அதனால் இது வெளியெற
    வாய்ப்பில்லையென நினைக்கிறேன்
    த.ம 2

    ReplyDelete
  2. அடடா...கவிதையின் விளைவா இது..?!
    நல்லாருக்கே ரமணி..! :-)

    ReplyDelete
  3. ந.பெரியசாமி said...

    ரசித்து படிக்கச் செய்தது கவிதை. அசத்துங்க சின்னப்பயல்

    ReplyDelete
  4. இயற்கைசிவம் said...

    கவனம் தப்பி காதலில் விழாமல்
    கவனமாய் காதலில் விழும் சாதுர்யம்
    மிளிரும் கவிதை இது.
    -இயற்கைசிவம் , வெயில்நதி வலைப் பூ .

    ReplyDelete
  5. hemgan said...

    ரொம்ப நல்லா இருக்கு. பாராட்டுகள்.

    ReplyDelete
  6. நன்றி ரதனவேல் சார், ரொம்ப
    நாளைக்குப்பிறகு :-)

    ReplyDelete
  7. நன்றி சசிகலா..முதல் வருகைக்கும்
    வாழ்த்துகளுக்கும்..!

    ReplyDelete
  8. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அருமையான கவிதை
    பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/03/blog-post_12.html

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. அன்பின் சின்னப்பயல் - கவிதை அருமை - நவீன விருட்சத்தில் வெளியானது குறித்து பாராட்டுகள் - காதல் கவிதை எழுத - கனவில் வர அன்பான அழைப்பு - உறங்கும் போது வராமல் விழித்திருகும் போது வந்து நிரந்தரமாகத் தங்க அழைப்பு - அடடா அடடா - என்ன ஆசை - நிறைவேற் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete