Monday, December 19, 2011

அங்கே



அங்கே
பறவைகள் தமது பாடலை
ஒரு கணம் நிறுத்தி பின் இசைக்கின்றன

அங்கே
சீறிப்பாய எத்தனித்த கடலலைகள்
பின் மெதுவாக எழும்பி அடங்குகின்றன

அங்கே
துயில் கொண்டிருந்த மேகங்கள்
சிறிது யோசித்து பின் கலைகின்றன.

அங்கே
பறந்துகொண்டிருந்த
பட்டாம்பூச்சிகள் தம் சிறகுகளை அசைப்பதை
சில வினாடிகள் நிறுத்தி பின் பறக்கின்றன

அங்கே
தெள்ளிய நீரில்
வழுக்கிச்சென்று கொண்டிருந்த மீன்கள்
தமது நீச்சலை நிறுத்தி பின் தொடர்கின்றன

அங்கே
அவர்களின் வயலின்கள் சிறிது
சிணுங்கி பின் தன் வாக்கில் இசைக்கின்றன

அங்கே
என்ன நடக்கிறது
என்று எட்டிப்பார்த்த பின் நானும்
எனது வழமையான பணியைத் தொடர்கின்றேன்.



.


3 comments: