Friday, September 30, 2011

முதல் நிலவு



சூரியக்குடும்பத்தில் ஒரு கோளுக்கு
இருபத்தேழு நிலவுகள் இருப்பதாக
ஆய்வுகளின் முடிகள் தெரிவிக்கின்றன.
பகலென்ன இரவென்ன ?
எப்போதும் நிலவுகளின் ஒளியில்
எனை நனைத்துக்கொண்டேயிருப்பேன்
ஆதலால் நான் என்னை
அங்கே செலுத்திக்கொள்ளலாம்
என்றிருக்கிறேன்
இப்படிச்சொன்னதிலிருந்து
ஒரு நிலவு என்னுடன்
பேச மறுத்துவிட்டது.



.

1 comment:

  1. கவிதை நன்று நண்பரே...

    ReplyDelete