Thursday, September 15, 2011

கடற்கன்னியின் கால்கள்



கடற்கரையின் மணல்
சீமைச்சர்க்கரை போலவே
விரிந்து கிடக்கிறது.

இரவுகளில் அவை
நிலவொளியுடன் இணைந்து
இன்னும் இனிக்கும் போலிருக்கிறது

அலைகள் வந்து அடித்தும்
அவை இன்னும் உப்பாகவில்லை.

நண்டுகளும் ,
அலையிலிருந்து
ஒதுங்கிக்கொள்ளும்
சிறிய சிப்பிகளும்,
ஆமைகளும் கரை தேடி
வந்துதான் வளைகள்
அமைக்கின்றன.

இவை அனைத்தையும்
ரசித்துக்கொண்டே
முடிவற்ற கடற்கரையில்
அமர்ந்து அவள் தன்
கால்களை
நனைத்துக்கொண்டிருந்தாள்

அவை இன்னும்
ஏன் கடற்கன்னியின்
வாலாக மாறவில்லை
என்ற வியப்புடன் நான்.

 .


2 comments:

  1. நன்றி சமந்த்தா...வாழ்த்துக்களுக்கு நன்றி..:-)

    ReplyDelete