Friday, September 9, 2011

சொல்வலைவேட்டுவன்





தொடங்கத்தயங்கி நின்ற
எனது காற்புள்ளிகள்
உனது மேற்கோள்கள்

தொடத்தயங்கும்
உனது பதங்கள்
எனது வரிகள்

தர்க்கங்களைக்கடந்து
நிற்கும் உனது விவாதங்கள்
எனது வாக்கியங்கள்

பொருளை வெளிச்சொல்ல
தாமே நாணி நின்ற
உந்தன் சொற்கள்
எனக்கு இடைவெளிகள்

நீ விட்ட இடத்திலிருந்து
நான் துவங்கினால் அது கவிதை
நீ துவங்கினால் ?




.

5 comments:

  1. shammi muthuvel says:
    August 15, 2011 at 1:51 am

    logic does matters a lot ….
    நீ விட்ட இடத்திலிருந்து
    நான் துவங்கினால் அது கவிதை
    நீ துவங்கினால் ?
    it is a poetry at start for you and it would be a epic for him/her …superb…

    ReplyDelete
  2. ''...நீ விட்ட இடத்திலிருந்து.
    நான் துவங்கினால் அது கவிதை.
    நீ துவங்கினால்?''

    வாழ்த்துகள்
    வேதா. இலங்காதிலகம்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சகோ மேல துவங்குங்கள் கவிதை
    அருவியாய்க் கொட்டும் .ஓட்டெல்லாம் போட்டாச்சு .
    என் தளத்திற்கும் உங்கள் வருகையினைக் காட்டுங்கள் .
    நன்றி பகிர்வுக்கு .........

    ReplyDelete
  4. அம்பாளடியாள் ,நிறைய எழுதறீங்க..எளிமையா இருக்கு உங்க கவிதைகள்..வருகைக்கு நன்றி..!

    ReplyDelete