Saturday, August 13, 2011

தேவதையும் கோடரியும்



மரம் வெட்டி
தான் தொலைத்த கோடரி
வேண்டி நின்றான்
தேவதையிடம்

தொலைத்த கோடரி தவிர
வேறெந்த உலோகக்கோடரியும்
வேண்டேன் என்றான் அவன்

எந்தக்கோடரியும்
மரத்தை வெட்டவே பயன்படும்
ஆதலால் உனக்கு கோடரிகள்
நான் கொடுப்பதிற்கில்லை

கனி தரும் கன்றுகள்
யாம் தருவோம்
பயிர் செய்து பிழைத்துக்கொள்
என்றாள் தேவதை.

மரக்கன்றுகள் வாங்கி
அவன் சென்று விட்டான்
கொடுத்த மகிழ்வில்
தேவதையும்
மறைந்து விட்டாள்.

இப்போது என்
கையில் இருக்கிறது
அந்தக்கோடரி.


.

2 comments:

  1. மிகச் சிறப்பான கவிதை. பொதுவாக எழுதுபவர் பாத்திரங்களை ஆட்டுவிக்கும் சூத்திரதாரி என எண்ணுகிறோம். உண்மையில் பாத்திரங்கள் அவரவர் நியாயங்களை எழுதுபவர் முன் வைப்பதே நிகழ்கிறது.அதை இந்த கவிதை அழகாகப் பேசுகிறது.அதோடு இந்த உலகின் சமனற்ற நியாயங்களை இயல்பாகவும், புத்துணர்வோடும் முன் வைக்கிறது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி மிருணா..முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்..:-)

    ReplyDelete