Wednesday, August 10, 2011

கிறீச்சிடும் பறவை



நாள் தவறாமல்
வந்து என் ஜன்னல்
கம்பிகளில் அமர்ந்து
ஒரு சிறு பறவை
கிறீச்சிடுகிறது
என் கவனத்தைக்கவர.

எதை ஞாபகப்படுத்த ?
மறந்துபோன
இயற்கையுடனான
நட்பையா ?
அல்லது கடந்து சென்ற
காலங்களை
மீள் நினைவூட்டவா ?

எனினும்
நாளையும் வரும்
என்ற எதிர்பார்ப்பை
என்னில்
ஏற்படுத்துவதைத்தவிர.
அது வேறொன்றும்
செய்வதில்லை.

மேலும் அது
ஒரு இறகையும்
உதிர்த்துச்செல்வதில்லை
எனக்கென.


.

No comments:

Post a Comment