Monday, January 17, 2011

என் உறவுகள்

கீற்று இணைய இதழில் எனது கவிதை

இன்றைக்கும்
தனக்கேயுரிய
தர்க்கங்களோடும், நியாயங்களோடும்
எனது அப்பா

அன்றைக்கிருந்த
அதே பரிவோடும், அன்போடும்
எனது அம்மா

நெருங்கிப்பேசினால்
தவறாகுமோ என்ற
என்றைக்குமில்லாத தயக்கத்தோடு
எனது அண்ணா

கணவனின் மறைவில்
நின்று கொண்டு பரிவையும்
அளவோடு பகிர்ந்து கொள்ளும்
எனது அக்கா

என்றைக்குமான
கேலியோடும், சிரிப்போடும்
எனது சகா

இவையுடன்
நாளைக்குமான உறவுக்காக
நானும்.



.

2 comments:

  1. நல்லகவிதை வாழ்த்துக்கள்
    உங்கள்டேம்லேட் அழகாக உளது

    ReplyDelete
  2. நன்றி யாதவன்..முதல் வருகைக்கும் , வாழ்த்துக்கும்..!

    ReplyDelete