Monday, January 31, 2011

இழந்த தருணங்கள்


 'திண்ணை' இணைய இதழில் எனது கவிதை.

இழந்த தருணங்கள்
மீளக்கிடைத்தால்
அப்போது உணர நினைத்த
அதே சுவையை அது
இப்போதும் தருமா
அதை ஏற்றுக்கொள்ளும்
மனநிலை இப்போதும் உளதா
என்பதும் ஐயமே.

எண்ணி அகமகிழ்தலும்
அசை போடுதலுமாகிய
கடந்த கால நினைவுகள்
நிகழ் காலத்தைக்
கடத்துவதேயன்றி
பெரிதாக ஒன்றும்
சாதித்து விடுவதில்லை

எனினும் இது ஒரு
தொடர் நிகழ்வாக
நடந்து கொண்டு தான்
இருக்கிறது எனக்குள்
எனது கட்டுப்பாடுகளுக்கு
ஆட்படாமல்.


.

No comments:

Post a Comment