Saturday, January 15, 2011

பொங்கலோ பொங்கல்



பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்

தைப்பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டுச்சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகா நதியைப் போற்றிச்சொல்லடியோ
இந்த வைகை என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி

முப்பாட்டன் காலம் தொட்டு முப்போகம் யாராலே
கல்மேடு தாண்டிவரும் வைகை நீராலே
சேத்தோட சேர்ந்த விதை நாத்து விடாதா
நாத்தோடு சேதி சொல்ல காற்று வராதா
செவ்வாழ செங்கரும்பு சாதி மல்லி தோட்டந்தான்
எல்லாமே இங்கிருக்க ஏதும் இல்ல வாட்டந்தான்
நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி
நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி

தைப்பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டுச்சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகா நதியைப் போற்றிச்சொல்லடியோ
இந்த வைகை என்பவள் தென்னாட்டவர்க்கு அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும் தெய்வ மங்கையடி

பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்


.

1 comment:

  1. எண்ணம் சிறக்க
    பசுமை செழிக்க
    செல்வம் பெருக
    பொங்குக பொங்கல்...

    ReplyDelete