Saturday, October 28, 2017

2.0 ஒலிக !


இந்த தீவாளிக்கு Sennheiser CX 300 II Precision Noise Isolating In-Ear Headphone வாங்கினேன். என்னா வெலன்னு அமேஸான்ல பாக்கலாம், அத என் லாப்டாப்ல செருகி, 'ஹெலிகாப்டர்ல பெல்ட் போட்டு இறுக்கி உக்காரவெச்சு அப்பால மேடைல எறக்கிவிட்டு, எப்டீப்பா இவ்ளவ் எளிமையா இருக்கீங்கன்னு கேட்டாங்களாமே, அந்தப்பாட்ட கேட்டுக்கிட்டு இருக்கேன். ஏம்ப்பா ராஹ்மான் வெச்சு செய்ற ?. புதுசா ஏதும் செய்யக்கூடாதா? சின்னப்புள்ளைஹ ஸ்கூல்ல பீட்டீ பீரியட்க்கு ட்ரில் வாசிச்ச மேரி ஒரு மீஸங்கி. பின்னால ஓ ஓன்னு கத்தவிட்டு கடுப்பேத்றார். என்னா ஒரு இன்னோவேஷனே இல்லை. சரக்கு மட்டம். இத 2030ல தாம் கேக்கணும்னு ஒரு கூட்டம் கெளம்பிருக்கு.


ஆமா அது ராஜாளி'யா இல்ல ராசாலி'யா? தமிழால் வளர்ந்த குழந்தை கார்க்கி,யாரு கண்ணு வெச்சான்னு தெரியல, இப்டீல்லாம் எழுத ஆரம்பிச்சிருச்சி. கொஞ்சம் முன்னால தான் கவிஞர் தாமரை 'பறக்கும் ராசாளியே'ன்னு எழுதினார். (அதிலும் 'ஜா' வடமொழி இல்லை ) வலுக்கட்டாயமாக தமிழ் மட்டுமே எழுதுவேன் என்ற பிடிவாதத்துடன் எழுதி வருகிறார். ஆணைத் தொடர்கள் இயந்திர மனிதனுக்கு தமிழிலும் எழுதலாம்ப்பா. பாட்ட கேக்கவே முடியலையே இங்க. ஹ்ம்.. ஒரு வர்சம் ஆனப்புறம் கூட. 'தள்ளிப்போகாதே' வையே இன்னும் கேக்க சகிக்கலை. என்னா பண்றது அவருக்கு வாய்ச்சத குடுக்றார்.


இந்திர லோகத்து சுந்தரியே' சித் ஸ்ரீராமா அது ?. இப்பதான் தர்புகா சிவா இசைல ஒரு பாட்டு இன்னமும் லூப்ல உந்தி. மறுவார்த்தை பேசாதே'ன்னு. இங்க யய்ய்யய்யா யாய்ய்யாஆஆஆ... ஒரே குஷ்டம்ப்பா. எந்திரன் ஒண்ணுலயாவது நல்ல மெலடி கேட்கக் கிடைத்தது, இங்க எல்லாம் ஒரே எலெக்ட்ரானிக் இசை. இரைச்சல். வேஸ்ட்டு. #2.0



.

1 comment: