Friday, March 9, 2012

உருப்படியான கவிதை



எச்சத்தாற்காணப்படும்

உட்கார
உறங்க
களிக்க
இசை பாட
கூடு கட்ட
முட்டையிட்டு
குஞ்சு பொரிக்க
உணவுகொடுத்து
பசியாற்றிய
மரம்,
விழுங்கிய
பழத்தின்
விதையை
பிறிதொரு இடத்தில்
எச்சம் வழி
ஊன்றச்செய்த
பறவை.



உருப்படியான கவிதை
 

சலவைக்குச்சென்று
திரும்பிய துணிகளில்
போடாத என்
உருப்படியைத்தேடுவது போல
இதழ்களுக்கு அனுப்பாத
என் கவிதைகளை
அதன் பக்கங்களில்
தேடிக்கொண்டிருக்கிறேன்.

.

8 comments:

  1. முதல் கவிதை - நன்றி நவில்தல்
    இரண்டாவது கவிதை - இயல்பு நவிழ்தல்

    ReplyDelete
  2. thanks ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி :))

    ReplyDelete
  3. அழகானக் கவிதை வாழ்த்துகள்

    ReplyDelete
  4. அருமை அன்பரே...இரண்டாவது கவிதை அருமை அன்பரே...

    ReplyDelete
  5. மிக்க நன்றி ரெவெரி..!

    ReplyDelete