Thursday, January 26, 2012

காஃப்கா'வின் குட்டிக் கதை




"அந்தோ"! என்றது எலி,

"ஒவ்வொரு நாளும் உலகம் முழுமையும் சிறிதாகிக் கொண்டேவருகிறது. ஆரம்பத்தில் நான் பயப்படும் அளவுக்கு இது பெரிதாக இருந்தது, நான் ஓடினேன் ஓடினேன், ஓடிக்கொண்டேயிருந்தேன், தூரத்தே வலது புறமும் இடது புறமும் சுவர்கள் தோன்றியதைக் கண்டு மகிழ்ந்தேன், ஆனால் இந்தச் சுவர்கள் விரைவில் குறுகத் தொடங்கின, நான் இப்போது கடைசி இடத்திற்கு ஏற்கனவே வந்து விட்டேன், ஆனால் இங்கு எனக்காக பொறி ஒன்று காத்திருந்தது, அதற்குள்தான் நான் செல்லவேண்டுமாம்".

"நீ உன் திசையை மாற்றவேண்டிய தேவை உள்ளது" என்ற பூனை, அதனை சாப்பிட்டது.



2 comments:

  1. கஃப்கா நாலே வரீல சொன்னாலும் , நச்சென்று சொன்ன கதை..:) நன்றி நண்டு.!

    ReplyDelete