Friday, January 6, 2012

சங்கத்தில் பாடாத கவிதை



எழுதிக்கொண்டிருந்த
கவிதையை
தென்றல் அடித்து
கலைத்துக்கொண்டிருந்தது

எழுதி முடித்த சொற்களின்
மேல் பல இடங்களில்
அது தன் புள்ளிகளை
கோலங்களை இட்டுச்சென்றது

சில வரிகளில்
சந்திகளில் ஒற்று
மிகுந்து அவற்றை
வலுவாக்கியது

சில வரிகளில்
ஒற்றுகளை சேதப்படுத்தி
சொற்களைத் தனிமையில்
நிற்கச்செய்தது.

இப்படி எல்லாம் செய்த
தென்றல் பாதியிலேயே
விட்டுச்சென்றுவிட்டது

கவிதையை முடித்து வைக்க
இன்னொரு தென்றலை
எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்
யாரேனும் அதைக்கண்டால்
கொஞ்சம் என்னிடம்
அனுப்பி வையுங்கள்.



.

5 comments:

  1. @ ராஜா :
    கலைத்துப்போட்டது தென்றலல்லவா ?
    அழகியதாகத்தானிருக்கும்..!

    ReplyDelete
  2. @ நண்டு

    தூது செல்ல ஒரு தோழியில்லையெனத்துயர்
    கொண்ட கவிதை இது..

    ReplyDelete