Tuesday, October 11, 2011

இரை




அசையும் புழுவுடன்,
அசைவற்ற மீன்தூண்டில் நரம்பு
அனங்குவதற்கென
மழிக்கப்பட்டிருந்த தலையுடனும்,
பழைய தாமிர உலோக
நிறத் தோலுடனும்.
காத்திருந்தான் ஒரு கற்சிலை போல்

நீருக்குள்ளிருந்த மீன்
அவனைத்தனது
வாலை மட்டும்
அசைத்துக்கொண்டே
பார்த்துக்கொண்டிருந்தது.

வாலசைவால் சலனப்பட்ட நீர்
புழுவையும் சிறிது
அலைபாயச்செய்தது
ஏதுமறியாத புழு ,மீனின் கண்களை
உற்று நோக்கியவாறு வளைந்து
நெளிந்து கொண்டிருந்தது.
கலங்கிய நீர்த்திரைகளினூடே
அவனால் அக்காட்சியைக்காண
இயலவில்லை.

பின்னர் அதிவேகமாக
மீன் தனது வாலைச்சுழற்றி
தூண்டில் நரம்புடன்
மீனவனை உள்ளுக்கிழுத்து
இரையாக்கிக்கொண்டது
மாட்டிக்கொண்டிருந்த
புழு விடுபட்டு
பின்நீந்திச்சென்றது.


4 comments:

  1. Rajesh t says:
    September 18, 2011 at 1:39 am

    //கலங்கிய நீர்த்திரைகளினூடே
    அவனால் அக்காட்சியைக்காண
    இயலவில்லை.//

    //தூண்டில் நரம்புடன்
    மீனவனை உள்ளுக்கிழுத்து
    இரையாக்கிக்கொண்டது
    மாட்டிக்கொண்டிருந்த
    புழு விடுபட்டு
    பின்நீந்திச்சென்றது.//

    உயிர்களின் அன்பின் மிகுதி .

    ReplyDelete
  2. chithra says:
    September 19, 2011 at 6:42 pm

    very nice :) lets a person to think abt this poem in many directions..

    ReplyDelete
  3. ஆழமாக நினைக்க வேண்டிய கவிதை. எல்லோருக்கும் விளங்கிடாது. வாழ்த்துகள்
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete