Saturday, September 29, 2012

ஏதுவாக



அனைத்தும் எனக்குப்பிடிக்காத
காலங்களில் நடந்து முடிந்துவிடுகின்றது
பின்னர் ஆறஅமர உட்கார்ந்து
என்னுள் அழுதுகொள்ள ஏதுவாக


அனைத்தும் எனக்குப்பிடிக்காத
காலங்களில் என்னை விட்டு
விலகிச்சென்றுவிடுகின்றது
பின்னர் எங்கேனும் அமர்ந்து ஆசுவாசத்துடன்
என்னைத் தேற்றிக்கொள்ள ஏதுவாக


அனைத்தும் எனக்குப்பிடிக்காத
காலங்களில் என்னால் மறுதலிக்கப்படுகின்றன
பின்னர் எனக்குப்பிடித்த காலங்களில்
அவைகள் பற்றி நினைத்து
எனக்குள் மாய்ந்துகொள்ள ஏதுவாக


எனக்குப்பிடித்த எதுவும்
நான் விரும்பும் காலங்களில்
என்னோடேயே இருந்துவிடுமாயின்
இப்படி எழுதி வைத்துக்கொள்ள வாய்க்காது
உங்களிடம் வந்து நான் சொல்வதற்கு ஏதுவாக.





.

5 comments:

  1. உண்மை தாங்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. @ ராமலக்ஷ்மி : மிக்க நன்றி..!

    ReplyDelete
  3. @ சசிகலா : வாழ்த்துகளுக்கு நன்றி.

    ReplyDelete
  4. உண்மை வரிகள்...

    "நடக்கும் என்பார் நடக்காது...
    நடக்காதென்பார் நடந்து விடும்..."

    ReplyDelete