Monday, July 23, 2012

மழையில் நனைந்த மைனாக்கள்



தொடர்ந்து கூவிக்கொண்டிருக்கும்
மைனாக்களுக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
முதல் கூவல் யார் கூவல் என்பது
எனக்கும்


தொடர்ந்து தூறிக்கொண்டிருக்கும்
மழைக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
முதல் துளி எந்தத்துளி என்பது
எனக்கும்

தொடர்ந்து உதிர்த்துக்கொண்டிருக்கும்
மரத்துக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
முதல் இலை எந்த இலை என்பது
எனக்கும்

தொடர்ந்து அழுது கொண்டிருக்கும்
மனதுக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
முதலில் யார் காரணம் என்று
உனக்கும் ?


.

10 comments:

  1. அருமையான இக் கவிதைக்கு என் பாராட்டுக்களும்
    வாழ்த்துக்களும் சகோ .

    ReplyDelete
  2. @ சங்கவி

    நன்றி வாழ்த்துகளுக்கும் வருகைக்கும்..!

    ReplyDelete
  3. @ அம்பாளடியாள்

    நன்றி ,, வெகுநாட்களுக்குப்பிறகான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்.. :-) தொடர்ந்து வாங்க.. :-)

    ReplyDelete
  4. படமும் ,கவிதையும் அருமை.

    ReplyDelete
  5. @ நண்டு...மிக்க நன்றி!

    ReplyDelete
  6. வணக்கம் சின்னப்பயல்.சுகம்தானே !

    அழகான கவிதை.கடைசி வரி...உண்மைதான் யாரால்-எப்போ-ஏன் அழத்தொடங்கினோம் !

    ReplyDelete
  7. @ ஹேமா : ஹ்ம்...அழுவதே ஒரு சுகம் தான்...
    நன்றி..!

    ReplyDelete
  8. மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் ..!!

    ReplyDelete