Friday, July 6, 2012

நிலைத்தகவல்



கூச்சல்களும் எதிர்ப்புகளும்
நிலைத்தகவல்களிலேயே முடிந்துவிடுகிறது


ஆதரவுகளும் அரவணைப்புகளும்
ஒருசில லைக்குகளோடு முடிந்துவிடுகிறது


பெண்ணியமும் ஆணியமும்
ஆங்கில விசைப்பலகையின் விசை கொண்டு
தமிழுருவில் எழுதப்பட்ட வலைப்பதிவோடு முடிந்துவிடுகிறது


அவலங்களும் அராஜகங்களும்
பின்னூட்டங்களிலும் எதிர்வினைகளிலுமே தீர்ந்து விடுகிறது


எனக்கென்னவாயிற்று,
ஒரு கையில் கோப்பைத்தேநீருடன்
நானெழுதிய இந்தக்கவிதை(?)
பிரபல வாரப்பத்திரிக்கையில்
வெளிவந்தால் மட்டும்
எனக்குப் போதுமென்றாகிவிட்டது.

 



.

10 comments:

  1. kavibhanu says:
    June 11, 2012 at 4:29 am

    நிலைத்தகவலாய் இந்த கவிதையும் வருமோ பின்னாளில்….

    ReplyDelete
  2. சின்னப்பயல் says:
    June 12, 2012 at 10:18 am

    @ கவி பானு வரும் வரும்.. :-)

    ReplyDelete
  3. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

    5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

    உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
    http://www.valaiyakam.com/page.php?page=votetools

    நன்றி

    வலையகம்
    http://www.valaiyakam.com/

    ReplyDelete
  4. நண்டு @ வெகுநாட்களுக்குப்பிறகு,,நன்றி..!

    ReplyDelete
  5. @ விஜயா: ஹ்ம்..என்ன செய்வது,,,இப்படியாவது எழுதித்தீர்த்துக்கொள்வோம்..நன்றி..!

    ReplyDelete
  6. அருமை. அதே சமயம் வருத்தமாகவும் இருந்தது.

    ReplyDelete
  7. கவிதையை தொடர்ந்த விதமும் முடித்த விதமும்
    மனம் கவர்ந்தது
    எனக்கு சும்மா இருக்க பிடித்தமில்லை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete