Saturday, July 2, 2011

கட்டங்கள் சொற்கள் கோடுகள்


திண்ணை/கீற்று இதழில் வெளியான கவிதை

கட்டங்கள் வரைந்து
சொற்களை உள்ளே இட்டேன்
அவற்றுக்குள் தொடர்பு
ஏற்படுத்த கோடுகள் இழுத்தேன்
கட்டங்கள் ஒன்றோடொன்று
இணைந்தன
சொற்கள் அடைபட்டுப்போய்
பேச மறுத்தன
கட்டங்களை நீக்கி விட்டு
சொற்களையும் கோடுகளையும்
இணைத்து விடலாம் என
எண்ணினேன்
கட்டி வைத்த சொற்களும்,
இணைக்க இழுத்த கோடுகளும்,
ஒட்ட மறுத்தன
மீண்டும் கட்டங்களை
வரைந்தபோது அந்த அதிசயம்
நிகழ்ந்தது.
கட்டங்களும், இணைப்புக்கோடுகளும்
ஒரு சேரக்காணாமல் போயின
எஞ்சிய சொற்கள்
என்னைக்கேலி
செய்து கொண்டிருந்தன
.





6 comments:

  1. ramani says:
    June 19, 2011 at 2:17 pm

    Structures and networking need to be compatible with words lest no meaningful communication can be established.But words appear to be adamant and betrays the writer. In every sense the words have failed and the poem looks pretty pale.

    ReplyDelete
  2. chinnappayal says:
    June 20, 2011 at 2:45 am

    Ramani,

    Thanks for your comments.Just read the poem in the lines of Love.and just give a try :-)

    ReplyDelete
  3. தலைப்பு, கவிதை வடிவம், கவிக்கரு வித்தியாசம்..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. நன்றி #கவிதை வீதி # சௌந்தர். தொடர்ந்து கவனித்து அவ்வப்போது கருத்துகளும் சொல்வதற்கு கூடுதல் நன்றிகள்.!

    ReplyDelete
  5. அஞ்சறைப் பெட்டி அருமையாய் வாசம் வீசுகிறது. பாராட்டுகள்.

    ReplyDelete