Saturday, July 30, 2011

நனவிலி



என்னிலை நினைத்து
வருந்தவும்,
அதைப்பிறரிடம் கூறி
ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும்
அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு
திட்டமிடவும்,
பின் அவற்றைச் செயலாக்கவும்,
உதவிய எந்தன் மொழி
எனது நனவிலி மனதிலிருந்தும்
அகற்றப்பட்டுவிட்டது.
அதை ஒரு வன்முறையாகப்
பார்ப்பவனால்.

விலங்கு மனம்
அவனிலிருந்து இடம்
மாறியது எனக்கு

இப்போது எனக்கு
சிந்திக்க மொழியின்றி
வெறும் உணர்வுகளுடன்
வெளிச்சொல்லத்தெரியாத
குழப்பத்தில் நான்

.

1 comment: