Saturday, March 5, 2011

தன்னிலை

திண்ணையில் வெளியான எனது கவிதை

யாரிடமும் முகம் கொடுத்து
பேசத்தோன்றாது

சதா தனக்குள்ளேயே
யோசித்துக்கொண்டிருக்கத்தோன்றும்

தலைவிரி கோலமாக அலைவதை
கண்டுசொன்னாலும் கவனிக்கத்தோன்றாது

தமக்குத்தாமே சிரித்துக்கொள்வதையும்
பின் அழுவதையும் கட்டுப்படுத்தஇயலாது

சில சமயம் தனிமையே சுகம் என்று
ஒதுங்கிக்கிடக்கவும் தோன்றும்.

பல்துலக்கச்சென்றால் பலமணி நேரம்
ஆவதை கவனிக்கத்தோன்றாது

என்னிலை கண்டு
இலை அடித்தால் சரியாகுமா
என உறவினரும் நினைக்கத்தோன்றும்

இவையெல்லாம்
ஒரு கவிதை எழுத நினைத்தபோது
நேர்ந்தகதி……

யாரைப்பற்றி என மட்டும்
கேட்காதீர்கள்..!


.

No comments:

Post a Comment