Tuesday, November 23, 2010

நிகழ்வு




நிகழ்வு

உனக்கும் எனக்கும்
இடையேயான
வாதம் மிக வலுவானது.
எனவே இது
மீண்டும் மீண்டும் வருவது
விவாதத்தைத் தாண்டி
ஒன்றுமே நிகழ்வதில்லை
என்பதையே காட்டுகிறது.
இதனிடையே நாம்
மௌனித்துப் போகும்
கணங்கள் எம் இருவருக்கும்
உவப்பானதாகவே
இருக்கிறது
முடிவு என்ற ஒன்றை
விரும்பாத வரைக்கும்,
தன்னைத் தயார்படுத்திக்
கொள்வதற்கும்.


மொழியும் மௌனமும்

பிற மொழிகளின்
மூலம் தேடி அலைந்த போது
தமிழை வந்தடைந்தேன்
உன் மொழியின்
மூலம் தேடி அலைந்த போது
மௌனத்தை வந்தடைந்தேன்
தமிழுக்கு முன்னால்
வெறும் மௌனம்
தான் இருந்தது போலும்.



.

3 comments:

  1. அருமையான கவிதைகள்


    வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நன்றி வேலு
    நன்றி வெறும்பய..

    ReplyDelete