Monday, June 14, 2010

மனிதம்

வெட்டப்படும் மரத்தின்
இலையிலிருந்து விழுந்தது
கடைசி மழைத்துளி
அதில் கோடரி சிலிர்த்தது.
"எங்கோ படித்தது"
கருவறுக்கப்படும் இனத்தின்
கடைசிக்குழந்தை அழுதது
அதில் மனிதம் சிலிர்த்தது,

- நன்றி யூத்ஃபுல் விகடன்
http://youthful.vikatan.com/youth/Nyouth/chinnappayalpoem140610.asp
.
 

11 comments:

  1. இரண்டே வரிகளில் வாழ்வின் மொத்தமும் அடக்கம் . அருமை . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. Supeeeeeeeeeeeeeeeerrrrrrrrrrrrr.... :)

    ReplyDelete
  3. அருமை.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. பனித்துளி,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    'வளாகம்'பிரபு,
    மகிழ்ச்சி,உங்களை என் பூவில் காண்பதற்கு,..நன்றி.

    சரவணன்,
    நன்றி..,தொடர்ந்து கவனித்து வருவதற்கு....:-)

    ReplyDelete
  5. '' கருவறுக்கப்படும் இனத்தின்
    கடைசிக்குழந்தை ''
    மனம் பதறுகிறது தோழர் !
    உங்கள் வரியில் தெரிவது மானுடத்தின் பெருங்கருணை !

    ReplyDelete
  6. அழகான விதையல்ல இது!
    சிறு தீப்பொறி
    நண்பரே!

    ReplyDelete
  7. நியோ,
    நன்றி....தோழா..

    அண்ணாமலை,
    'பொறி' தட்டியதே எழுதத்தூண்டியது....

    ReplyDelete
  8. சிந்திக்க வைக்கும் வார்த்தைகள்
    அருமை நண்பா
    தொடருங்கள்

    ReplyDelete
  9. அன்பின் சின்னப்பயல் ராம்நாத்

    கோடரி சிலிர்த்ததும் - மனிதம் சிலிர்த்ததும் - உவமை அருமை

    நல்ல கவிதை
    நல்வாழ்த்துகள்
    நட்புடன்சீனா

    ReplyDelete
  10. ஜில்தண்ணி,சீனா,கண்ணன்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete