Friday, September 25, 2020

இளமை எனும் பூங்காற்று


 
ரேடியோவில் ஒலிக்கும் பாடலை அவர் கூடப்பாடும்போது அவரின் குரல் போலவே தோன்றுவது அத்தனை மகிழ்ச்சி... தனியாகப் பாடும்போது ஏன் இவ்வளவு மோசமா இருக்கேன்னு சிறுவயதில் நினைத்ததுண்டு. இப்ப பாடுனாலும் அதே மாதிரி தான் தோணுது. பாடகனாக வேணும்னு நினைக்கும் ஒவ்வொருவருக்கும் அவர் போலப் பாடணும் என்பது தான் ஆசையாக இருக்க முடியும். அதிக Bass நிறைந்த ஆணுக்குரிய குரல். கரகரப்பில்லாத பிசிறில்லாத பனிக்குழைவு அவரின் குரல். அவருக்குப் பின்னர் எத்தனையோ பேர் வந்த போதும் அவரை அவர் இடத்தை யாராலும் அசைக்க முடியவில்லை என்பது தான் நிஜம்.

அவர் பாடலைப் பாடித்தான் ஏழாவது படிக்கும் போது பரமக்குடி பள்ளியில் பரிசு வாங்கினேன். இன்னமும் ஞாபகமிருக்கிறது அந்தப் பாடல். செய்தி வந்தபோது அத்தனை துக்கமில்லை. ஒவ்வொரு நிலைத் தகவலாகப் பார்க்கும் போது, வாட்ஸப்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடலை பகிரும் போதும் என்னையறியாது எனக்குள்ளிருந்து .... #இளமைஎனும்பூங்காற்று

No comments:

Post a Comment