Wednesday, September 2, 2020

யுவன்


அவரை மீண்டும் மீண்டும் அலைக்கழித்துக் கொண்டிருந்த விஷயங்கள் எல்லாம் தீர்ந்துவிட்டன. இனியும் கிலேசங்களுக்கு இடமில்லை என்றானதும் மனது அமைதி கொண்டு விட்டது. எனினும் அத்தனை அலைக்கழிப்புகளும், இடையூறுகளுமே அவரை தொடர்ந்தும் இயங்க வைத்துக்கொண்டிருந்தது என்பதே உண்மை. கலையின் உச்சம் எட்ட நிலையில்லாத் தன்மை அவசியம் என்பதை அவர் பாடல்களில் கண்டிருக்கிறேன். எல்லாம் கிடைத்து விட்ட பிறகு வேறென்ன அமைதி தான். இப்போது அவர் இசையில் இனிமை குன்றி ரசிக்கவியலாமல் போனது என்னவோ உண்மைதான். அவரின் பழைய பாடல்களையே இன்னமும் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை எனக்கும் அமைதி கிட்டினால் அவரின் இப்போதைய பாடல்களையும் ரசிக்க இயலுமோ என்னவோ ?! #யுவன்

No comments:

Post a Comment