Tuesday, September 1, 2020

அப்பா

 


வீட்டுல நடக்கிற அத்தனை கல்யாணத்துக்கும் நான் தான் அனஃபிஷியல் ஃபோட்டோக்ராஃபர். சின்னதா ஒரு நிக்கான் 5.1 மெ.பி. காமிராவை வைத்துக் கொண்டு படமெடுத்துக்கொண்டே அலைவேன். அதுல ஒண்ணும் பெரிசா செய்துவிட இயலாது. இருப்பினும் படங்களின் தரம் நன்றாக இருக்கும். படங்களை எடுத்து முடித்த பின்னர் நிக்கானை டீவீயில் அட்டாச் செய்து ஒவ்வொன்றாக ஸ்லைட் ஷோ ஓட விடுவேன். அப்பாவும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். பின்னர் முன்னோட்டம் முடிந்து அதை சின்ன சாஃப்ட்வேரின் துணையுடன் குறும் படமாக்கி காட்சிகளுக்குப் பொருத்தமான இசை சேர்த்து, தமிழில் எழுத்துகள் கூட்டி ஒலி சேர்த்து கிட்டத்தட்ட ஒரு படம் போலவே ஆக்கி (எல்லா வீடியோக்ராபரும் செய்யக்கூடியது தான்) சிடீயில் பதிந்து பரமக்குடி அனுப்பி வைப்பேன் இல்லையேல் போகும் போது டிவிடி ப்ளெயரில் போட்டு காண்பிப்பேன்.

தொடர்ந்து நடக்கும் அத்தனை விழாக்களையும் இது போல் படமாக்கி போட்டு காண்பிப்பது வழக்கம். அப்பா அதையெல்லாம் ரசித்துப் பார்த்துக் கொண்டே இருந்து விட்டு பின்னர் ஒரு நாள் சாப்பிட உட்காரும் போது ‘டேய் சின்னப் பயலே நீ சினிமால’ சேர்ந்துடா என்றார். எனக்கு ரொம்ப ஆச்சரியம் , இப்டி சொல்லுவார்கள் என ஒருநாளும் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. எல்லா பெற்றோரும் தமது குழந்தைகளின் ’பேஸிக் இன்ஸ்டிங்க்ட்’ தெரிந்து தான் வைத்திருக்கின்றனர். நாமதான் கடைசி வரை அவர்களைப் புரிந்து கொள்வதேயில்லை. இன்று அப்பாவின் முதலாவது நினைவு தினம் #அப்பா

.

No comments:

Post a Comment