Sunday, March 15, 2020

#வாத்தீரெய்டூடா

 
ஆனா ஆவன்னா ...வாத்தீ ரெய்டூ... ங்கொம்மா.. செமடா .அற்புதமான ராப்! முதல் ரெண்டு பாட்டு சொதப்பினவொடன லோகேஷ் , தம்பி அநிருத் மேல கரோனாவ ஏவி விட்டு கடிக்க விட்டார் போலருக்கு. துள்ளி எழுந்திரிச்சு மந்திரிச்சு விட்டமேரி அடி பொளந்துட்டான்.. ங்கொய்யால இதாண்டா பாட்டு. என்ன ஒண்ணு, ராப்’ல அதிகமா தமது யோசனை, தமது கற்பனை கலந்து எதுவும் செய்ய விடாத ஜானர். அதான். அப்டியே செய்ன் ரியாக்‌ஷன் மேரி இதுக்கு முன்னால வந்த பேட்ட ராப்’ வர இஸ்த்துக்கினு போயிரும். இருந்தாலும் இண்டர்ல்யூட்களில் வரும் ‘தரநாநா தரநாந’ ஹம்மிங் அடிநாதமாக ஒலித்து (இந்த ஹம்மிங் மட்டும் தம்பி பாடீருக்கார் போல) பாலமாக அமைந்து இரண்டு சரணங்களை இணைத்து ஒர் மென்மையை உருவாக்குகிறது. தெருக்குரல் ‘அறிவு’ இவர கள்ளமெளனி பாட்டுலயே அடையாளம் காண வைத்துவிட்டார். அதான் எமினெம் ஸ்டைல்ல இங்க ஒரு ராப்பு. ஆப்பு. எவ்வளவு சொன்னாலும் ராப்’ ஜானரில் அதிகம் கற்பனை கலக்கவியலாது அதனால் வரிகளை அழுத்தமாக எழுதித்தான் கேட்கவைக்க இயலும். அதுவும் இங்க இழுக்குது. சரி பரவால்ல.

”தெருவில் நடக்கிற ,
கொடுமையக்கடக்குற,
தலை முறை படிக்கிற
தமிழில் இருக்குது
பொதுமுறை எதுக்குன்னு
விலகிற பழக்கம் எனக்கில்லை
எப்போதும் என்னுடம் இருக்கும் பட்டாளம்.
உண்மை உரைக்கும் ,
கட்டாயம் மண்ணைத் திரட்டும்,
பேதங்கள் இல்லாதிருக்கும்,
நாடெங்கள் கண்ணாயிருக்கும்,

மேலும் “கற்பி ஒன்று சேர்.! ” இந்த வரிகளை மெச்சலாம், 



அருணகிரிநாதர் ஆரம்பிச்சு வெச்சார் இந்த ராப் ஸ்டைல. நம்ம ரஹ்மானின் பேட்ட ராப்பிற்கு பிறகு (காதலன்) ,அவராலேயே மீண்டும் உருக்கொள்ள வைக்க வியலாத ராப் (ஓக்கே கண்மணி,அச்சம் என்பது மடமையடா’ முயன்று பார்த்தார், எடுபடவேயில்லை ) இங்கு உருவெடுத்து அடித்துப் பொளித்திருக்கிறது. ‘வாத்தீ ரெய்டூடா’.. ங்கொய்யால,.யார்கிட்ட? ஹ்ம்...! இது பீஸ்ட் மோடூ.! சமத்துக்குட்டீ :) இந்த வாத்தீ கிட்ட வெச்சுக்காத , ஓரம் போய்டூ கெழபோல்ட்டுகளா,,,ஹிஹி.. #வாத்தீரெய்டூடா

No comments:

Post a Comment