Tuesday, June 4, 2019

மண்டலாபட்டி - கூர்க்

கடந்த இரண்டு நாட்கள் கூர்க் பயணம், மண்டலாபட்டி இது வரை பார்த்திராத மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலம்.கரடுமுரடான பாதை. இருப்பினும் அத்தனையும் பெய்யும் மழையில் நொடியில் அடித்துச்செல்லப்படும் சாலை.. பாதையே இல்லை என்று தான் சொல்லவேணும். ஜீப் இல்லையென்றால் ஏதேனும் கனரக வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி.மற்ற இலகு ரக வாகனங்கள் சென்றால் அத்தனை பாகங்களையும் கையில் பொறுக்கிக்கொண்டு தான் வரவேணும். நிலவில் உள்ள பாதை கூட அத்தனை மோசமில்லை போல. உடம்பில் ஒவ்வொரு எலும்பும் எண்ணப்பட்டு விட்டது.. ஹிஹி..

 மாதமொருமுறை தமது ஜீப்பை பழுது பார்ப்பேன் என்கிறார் ஓட்டுநர். கொண்டு போயிருந்த இண்டிகாவை வழியிலேயே நிறுத்திவிட்டு இவரின் வாடகை ஜீப்பில் சென்றோம். 280டிகிரி வளைவுகள்.எதிர்பாரா ஏற்றம். திறந்த சாளர ஜீப்புகளும் இருக்கின்றன. போய்விட்டு வருவது வாழ்க்கைக்கான சவால். எம்மிடம் வாங்கிக் கொள்ளும் ஆயிரத்து ஐநூறில் ஜீப் பராமரிப்புக்கே செலவாகி விடும் போல. அதிலும் திரும்பி வருகையில் சொல்லி வைத்தாற்போல டயர் கிழிந்துவிட்டது. எங்களை பாதி வழியில் இறக்கி விட்டு டயரை மாற்றிக்கொண்டிருந்தார் அந்த அத்துவான மலையில்.கொஞ்சம் பயந்தான். என்னவாகுமோ என்று.


முழுக்க மலை புற்கள். கற்பாறைகள் எங்கும்.ஒளி உள்ளே புக பயந்து ஒதுங்கும் காடு.கீழே விழுந்தால் வன அதிகாரிகள் நம் குரல் கேட்க எவ்வித வாய்ப்பும் இல்லை. ஜீப் செல்கிறது 25 கிமீ பாறைகளில். அதன் பின் கிட்டத்தட்ட ஒன்றரை கிமீ நடந்து சென்று மேலே போகலாம். அத்தனை கடுமையான பாதைக்குப் பிறகு. ஜீப் செல்ல இயலாது. கால் நடை தான். ஹ்ம்..#மண்டலாபட்டி

 

No comments:

Post a Comment