Saturday, June 1, 2019

தமிழ்’நாடு

இந்தி பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொண்டால் தான் ஆயிற்று என்பதில்லை. வெளி/வட மாநிலங்களுக்கு சென்று அங்கு இரண்டு மூன்று மாதங்கள் தங்கியிருந்தாலே போதும். எழுதப்படிக்கத்தெரிந்த எலைட் சமூகத்தை விட காய்கறி விற்போர்/கூலி வேலை பார்க்க முனைவோர் எளிதில் எந்த மொழியையும் கற்று விடுவது இயல்பு.

டெல்லியில் எத்தனையோ தமிழர்களைச்சந்தித்து இருக்கிறேன் அத்தனை பேரும் 80களில் தமிழகத்தில் பிறந்தவர் தான் பெரும்பாலும். அத்தனை அழகாக இந்தி பேசுவர். அறுபதாண்டுகளாக இந்தி பேசாததால் தமிழகம் ஒன்றும் குறைந்து விடவில்லை. எதையும் இழக்கவும் இல்லை. தொழில்/ வர்த்தகத்தில் முதல் மூன்று மாநிலங்களில் எப்போதும் ஒன்றாகவே திகழ்கிறது. மஹாரஷ்ட்ரா/ கர்நாடகாவுடன் தொழில் முனைப்பில் எப்போதும் போட்டியில் இருக்கும் தமிழகம்.

வடமாநில நண்பர்களிடம் இருக்கும் மனத்தயக்கம் தடை , என்ன இந்தி பேசவே மாட்டாங்யளே என்பது தான். பெங்களூருக்கு வந்துவிட எந்த தயக்கமும் காட்டாத வட மாநிலத்தவருக்கு அருகிலிருக்கும் சென்னைக்கு வரத்தயக்கம் மொழி மட்டுமே.

திணிப்பெல்லாம் ஒரு நாடு ஒரு மொழி ஒரு மதம் என்ற மூடர்கள் செய்து காட்டத்துடிக்கும் செயல். பன்முகத்தன்மைக்கு ஊறு கேடு. செயல்தான் இனி செயலாற்ற வேணும். #banhindi #TNAgainstHindiImposition

1 comment:

  1. //திணிப்பெல்லாம் ஒரு நாடு ஒரு மொழி ஒரு மதம் என்ற மூடர்கள் செய்து காட்டத்துடிக்கும் செயல். பன்முகத்தன்மைக்கு ஊறு கேடு//

    100% உண்மை.

    ReplyDelete