Sunday, January 19, 2014

நாங்கள் உங்கள் கவிதைகளை வாசிப்பதில்லை






நாங்கள் உங்கள் கவிதைகளை 
வாசிப்பதில்லை

அதற்கான நேரமும் இருப்பதில்லை
இரை தேட வேண்டியிருக்கிறது
மழைக்காலமானால் கூடுகளை இடம் மாற்ற
வேண்டியிருக்கிறது
நனைந்து போன சிறகுகளை உலரவைக்கவே
வெகுதூரம் பறக்க வேண்டியிருக்கிறது
பெரிய கழுகுகளின் பார்வையிலிருந்து
எங்கள் குஞ்சுகளைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது
ஆண்டில் பலமுறை புலப்பெயர்வுக்கென
இடம் தேடிப் பறப்பதிலேயே
வாழ்க்கையின் பாதி நாள் வீணாகிறது
இப்படி நாங்கள் வானில் சஞ்சரிக்கும்
சில நேரப்பொழுதுகளை மட்டும்
பார்த்து வைத்துக்கொண்டு
கவி பாடித் திரிவதில் கொஞ்சமும்
அர்த்தமில்லை


மேலும்
நாங்கள் உங்கள் கவிதைகளை
வாசிப்பதில்லை


.

10 comments:

  1. வணக்கம்
    வித்தியாசமான கற்பனையில் மலர்ந்த கவிதை சிறப்பு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நாங்களும் உங்கள் கவிதைகளை வாசிப்பதில்லை... ஹிஹி...

    வாழ்த்துக்கள் தோழரே...

    ReplyDelete
  3. சர்வதேசத் தரத்தில் -மொழிபெயர்ப்பு நடையில்- கவிதை இருக்கிறதே! அருமையான உருவகம். தொடருங்கள். நானும் உங்கள் வலைப்பக்கத்தைத் தொடர்கிறேன். நன்றி

    ReplyDelete
  4. பேர்தான் சின்னப்பயலா இருக்கு! விஷயம் ரொம்பப் பெரியதாக அல்லவா இருக்கு? நல்லது தொடர்க

    ReplyDelete
  5. முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி முத்துநிலவன். .மிக்க நன்றி .

    ReplyDelete
  6. அருள்முருகன் பொன்னுசாமி

    super

    ReplyDelete
  7. kosinra

    மிக அருமை தோழரே. வாழ்த்துகள். கோசின்ரா

    ReplyDelete