Friday, December 27, 2013

நட்சத்திர மீன்



மலைகள் இதழில் வெளியான கவிதைகள்




நட்சத்திர மீன்

கடற்கரையோர
சிப்பிக்கடையில் வாங்கிவந்த
அந்த நட்சத்திர மீன்
வெளிப்புறச்சுவரில் பட்டுத்தெறித்த
ஒரு மழைத்துளியில்
தன்னைச்சிலிர்த்துக்கொண்டது

கடந்து போகிறாய்

நான் வலிந்து அந்தச்சாலையில்
செல்லவில்லை
முன்கூட்டித்தீர்மானித்து
மணி பார்த்துக்கொண்டு
அந்த இடத்தைக்கடக்கவில்லை
இதற்கு முந்தைய
திருப்பத்தில் அந்த விபத்தை
வேண்டுமென்றே நான் நிகழ்த்தவில்லை
இப்போது என் முன்னில்
என்னை நீ கடந்து போகிறாய்

பறவை

பறவைக்கும் கவிஞனுக்கும்
உள்ள தொடர்பே
உனக்கும் எனக்குமானது.

ருசி கண்ட பூனை

கவிஞன் ஒரு
தற்கொலை ருசி கண்ட
பூனை

நினைவு

உங்களுக்கு
மிக முக்கியமானவர்
இந்தக்கவிதையை வாசித்தபின்
முதலில் நினைவுக்கு வருபவர்
எனக்கு எதையும் வாசிக்காமலேயே
உன் ஞாபகம் தான் வருகிறது.



No comments:

Post a Comment