Saturday, December 7, 2013

துளிப்பாக்கள்



காதலின் மொழி
முத்தம்
வா உரையாடலைத்
தொடங்கலாம்!
-
அவனுடன் இப்போது
தொடங்கியிருக்கலாம் ரசவாதம்
எனினும் என்னுடன்
வரலாறே இருக்கிறது
உனக்கு
-
எனக்கென்னவோ
வண்ணத்துப்பூச்சிகளில்
ஆணினம் இருப்பதாகத்
தோன்றுவதேயில்லை
எப்போதும்
-
நீ வருகிறாய் என்பதே
தேசிய கீதம் இசைப்பது போலிருக்கிறது
எழுந்து நின்று விடுகிறேன்


4 comments:

  1. நல்ல கவிதை, பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  2. மிக்க நன்றி கும்மாச்சி..!

    ReplyDelete
  3. வணக்கம்
    சிறப்பான கவிதை ..மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்...
    எனது புதிய வலைப்பூவின் ஊடாக கருத்து எழுதுகிறேன்... உங்களை அழைக்கிறது..http://tamilkkavitaikalcom.blogspot.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. மிக்க நன்றி ரூபன். நிறையப்போட்டிகள் உங்கள் தளத்தில்.. எனக்குப்போட்டிகள் என்றாலே ..ஹிஹி :)

    ReplyDelete