Tuesday, November 19, 2013

நான் ஆதாம்






கவர்ந்திழுக்கும்
உடைகள் அவன் அணிந்திருக்கவில்லை
அவ்வளவு ஏன்
அவன் சொல்லிக்கொள்ளும்படியான
உடையே ஒருபோதும்
அணிந்ததுகூட இல்லை
தலைவாருதலும் முகச்சவரமும்
ஒருபோதும் செய்ததில்லை
வாசனைத்திரவியங்களின்
வாசனை கூட அவன் அறிந்திருக்கவில்லை
அடுத்த வேளை பற்றிய
கவலையின்றிப் பசியாற
ஒரு சுமாரான வேலையும் கூட
அவனிடம் இருந்ததில்லை
அவளைக்கவிதை பாடி மயக்க
அவனிடம் தமிழ் இல்லை
குறுஞ்செய்திகளும்
அஞ்சல்களும் வாழ்த்து அட்டைகளும்
அவளுக்கு அனுப்ப
வாய்த்ததில்லை
இருப்பினும் அந்த ஏவாளிற்கு
ஆதாமிடம் தூய காதல் இருந்தது
நான் ஆதாம்
 
.


2 comments: