Tuesday, November 12, 2013

துளிப்பாக்கள்



காரணப்பெயர்

எழுதிவைத்த
கவிதைக்குக்கீழ்
போட்டுக்கொண்ட
பெயர் தான்
முதலில் எழுதியது
பின்னர் மேலே மேலே
எழுதியது தான்
இப்போது நீங்கள்
வாசிப்பது.

ஒளிரும்பெயர்

உன் பெயரைத்தேடியெடுத்து
எப்படி ஒளிரவைக்கிறாய்
என் செல்பேசியில் ?!

அதுமட்டுமே

உனைக்காட்டிலும்
எனக்கு இரண்டுவயது
கூடுதல்
அதுமட்டுமே


உடல்மொழி

ஏற்றுக்கொள்ளாமலும்
வெறுக்காமலும் இருக்க நினைக்கிறாய்
இருப்பினும் நட்பில் தொடர விருப்பமெனில்
எனக்கும் ஒரு வாய்ப்பிருக்கிறது
என்ற உன் உடல்மொழியால் ஏன்
என்னைத்தொடர்ந்தும் நிந்திக்கிறாய் ?

வாசல்

வாய்ப்புகள்
கதவில்லாத வாசல் வந்து
நிற்கும்போதும் கூட
வரவேற்கத்தெரியாமல்
நின்றிருக்கிறேன்.
 

 



3 comments:

  1. அனைத்துக் கவிதைகளும்
    மிக மிக அற்புதம்
    குறிப்பாக கதவற்ற வாசலில் இருந்தும்
    வரவேற்கத் தெரியாமல் நின்றது
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிக்க நன்றி ரமணி சார்..

    ReplyDelete