Wednesday, January 23, 2013

என் மகளின் நாட்குறிப்பு



என்னால் முன்புபோல் சோஃபாவில்
எல்லோர் முன்னிலும்
இப்போதெல்லாம் காலை நீட்டி அமர முடிவதில்லை

ஏழாம் வகுப்பில் முதலிடம் பெற்றதெற்கென
என் அப்பாவைக் கட்டிப்பிடித்து முத்தம்
கொடுத்ததுபோல் இப்போதும்
அங்ஙனமே செய்ய நினைப்பது முடிவதில்லை

என் தம்பியுடனான தலையணைச் சண்டைகளை
இப்போதெல்லாம் நடத்த முடிவதில்லை

அருகிலிருக்கும் பேருந்து நிறுத்தத்திற்குச் செல்வதுகூட
இப்போதெல்லாம் ஆண் துணையின்றி முடிவதில்லை

நடைபாதைக் கடையில்
தோழிகளுடன் அரட்டை அடித்துக்கொண்டு
தேநீர் அருந்துவதும்
இப்போதெல்லாம் முடிவதில்லை

தற்செயலாகக் காணக்கிடைத்த
என் மகளின் நாட்குறிப்பின்
பக்கங்களைப் புரட்ட
இதற்கு மேலும்
என்னால் முடியவில்லை.


.

4 comments:

  1. அழகு! அழகு! உண்மையான உணர்வுகள்.

    ReplyDelete
  2. நல்லதொரு பகிர்வு...வாழ்த்துக்கள்...

    ReplyDelete